Followers

Wednesday, March 22, 2006

மனிதன் குரங்கிலிருந்தா பிறந்தான்?

மனிதன் குரங்கிலிருந்தா பிறந்தான்?

இறைவனின் படைப்பிலேயே மிகவும் உயர் தரமான படைப்பாக உள்ளது நம் இனமான மனித இனம். ஆனால் டார்வின் இந்த உயரிய படைப்பு குரங்கிலிருந்து வந்தது என்று கூறுகிறார். இதை பல படித்தவர்களும் நம்புவதுதான் வேடிக்கை! இதற்கு மாற்றமான கருத்து உடைய ஒரு சில சிந்தனையாளர்களின் கருத்துக்களைத் தருகிறேன். இந்த கருத்துக்களை மறுப்பவர்கள் பின்னூட்டம் இட்டால் தக்க பதில் தர முயற்ச்சிக்கிறேன்.

பி.ஜெய்னுல்லாபுதீன் தனது விளக்கத்தில் கூறும்போது:
function framePrint(whichFrame){
parent[whichFrame].focus();
parent[whichFrame].print();
}


பரிணாம வளர்ச்சியின் மூலம் உருவானவன்தான் மனிதன் என்பது டார்வினின் தத்துவம். கடவுளை மறுப்பதற்கு இந்தத் தத்துவம் உதவுவதால் டார்வினின் ் கொள்கையைச் சிலர் ஏற்றி போற்றுகிறார்களே தவிர, அது விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப் பட்ட உண்மை அல்ல. வெறும் அனுமானமே ஆகும்.சில உயிரினங்கள் காலப் போக்கில் வேறு உயிரினமாக வளர்ச்சி பெற்று வந்தன. பல கோடி ஆண்டுகளில் குரங்கு என்ற இனமாக ஆனது. அதன் பின்னர் பல கோடி ஆண்டுகளுக்குப் பின் குரங்கு பரிணாம வளர்ச்சி பெற்று மனிதன் என்ற படைப்பு உருவானது என்பது தான் டார்வினின் கொள்கை.

எந்த குரங்காவது மனிதனாக மாறியதைப் பார்த்து விட்டு டார்வின் இப்படி முடிவு செய்தானா என்றால் இல்லை. குரங்குக்கும் மனிதனுக்கும் இடையே உருவ அமைப்பில் மிகுந்த ஒற்றுமை இருப்பது தான் டார்வினின் இந்த அனுமானத்துக்குக் காரணமாக அமைந்தது எனலாம். அறிவியல் அறிவு குறைவாக இருந்த காலத்தில் வாழ்ந்தவர்கள் இதை நம்பினால் அதில் ஆச்சர்யம் இல்லை. இன்றைய அறிவியல் உலகில் அதை நம்புவது பைத்தியக்காரத் தனமாகவே இருக்கும்.

உருவ அமைப்பில் வேண்டுமானால் குரங்கு மனிதனுக்கு நெருக்கமான வடிவம் பெற்றிருக்கலாம்.ஒரு மனிதனின் இரத்தத்தை இன்னொரு மனிதனுக்குச் செலுத்துகின்ற காலத்தில் நாம் வாழ்கிறோம். மனித இரத்தங்கள் கிடைக்காத சூழ்நிலையில் வேறு உயிரினங்களின் இரத்தத்தை மனிதனுக்குச் செலுத்த முடியுமா என்று ஆய்வு செய்தனர். குரங்கு உட்பட எந்தப் பிராணியின் இரத்தமும் மனிதனின் இரத்தத்துக்கு நெருக்கமானதாக இல்லை. பன்றியின் இரத்தம் தான் மனிதனின் இரத்தத்துக்கு அதிக அளவு பொருந்தி போகிறது. அநேகமாக எதிர் காலத்தில் மனிதனுக்கு பன்றியின் இரத்தம் செலுத்தப்பட முடியும், அல்லது முடியாது என்று முடிவு செய்தாலும் எந்த உயிரினங்களின் இரத்தத்தை விடவும் பன்றியின் இரத்தம் மனிதனின் இரத்த்த்துக்கு நெருக்கமாக உள்ளது என்பது நிரூபிக்கப் பட்ட உண்மை. மனிதன் குரங்கிலிருந்து பரிணாமம் பெற்றவனாக இருந்தால் குரங்கின் இரத்தம் தான் மனிதனுடைய இரத்தத்துக்கு மிகவும் நெருக்கமானதாக இருக்க வேண்டும். ஆடு மாடு போன்ற பிராணிகளின் இரத்தம் மனித இரத்த்த்தில் இருந்து எந்தளவு வேறுபடுகிறதோ அதே அளவுக்கு குரங்கின் இரத்தமும் மனித இரத்தத்தில் இருந்து வேறு பட்டுள்ளது. குரங்கிலிருந்து மனிதன் தோன்றியிருக்கவே முடியாது என்பதற்கு மறுக்க இயலாத சான்றாக இந்த கண்டு பிடிப்பு அமைந்துள்ளது. இன்றைய காலத்தில் தகப்பன் வடிவத்தில் மகன் இல்லாத போது டி.என்.ஏ சோதனை மூலம் 'இவன்தான் தந்தை ' என்று முடிவு செய்கிறோம். வடிவத்தை கணக்கில் கொள்வதில்லை.

அதே போல் மனிதனுக்கு மாற்று இருதயத்தை வேறு உயிரினங்களிலிருந்து பெற முடியுமா? என்று ஆராய்ச்சி செய்த போது ஆச்சரியமாக பன்றியின் இதயம் பொருந்தி போவதை தற்போது கண்டு பிடித்திருக்கிறார்கள். இதிலும் மனிதனின் இதயம் குரங்கோடு ஒத்துப் போகவில்லை.

இன்றைய மனிதன் மரபணுச் சோதனையில் முன்னேறி விட்டான். ஜீனோம் இரகசியத்தைக் கண்டு பிடித்து விட்டான். குரங்கின் மரபனுக்களையும் மனிதனின் மரபணுக்களையும் சோதனை செய்து பார்த்து இரண்டும் ஏறத்தாழ ஒத்திருக்கின்றது என்று நிரூபணம் செய்யப் பட்டிருந்தாலோ வேறு எந்தப் பிராணியின் மரபணுவும்மனிதனின் மரபணுவுக்கு ஒத்ததாக இல்லை என்று உறுதி செய்யப் பட்டிருந்தாலோ டார்வினின் தத்துவத்தை ஓரளவுக்காவது நம்பலாம். அப்படி எந்த நிரூபணமும் இல்லை. இன்னும் சொல்வதானால் ஜீனோம் கண்டு பிடிப்புக்குப் பின் முழு மனித குலமும் ஒரு ஆப்ரிக்கத் தாயிலிருந்து தோன்றியவர்கள்தான் என்பதைக் கண்டு பிடித்து விட்டனர்.

இதே போல் யானையின் தும்பிக்கை ஏன் நீண்டது?

கங்காருவின் வயிற்றில் ஏன் பை வந்தது?

ஒட்டக சிவிங்கியின் கழுத்து ஏன் நீண்டது?

போன்றவற்றிர்க்கு எல்லாம் டார்வின் என்ன பதில் வைத்துள்ளார்?

கடவுளை மறுப்பதற்காக எத்தகைய உளறலையும் தூக்கிப் பிடிப்பது தான் அறிவுடமையா?பரிணாம வளர்ச்சியினால் பல கோடி ஆண்டுகளில் குரங்கு மனிதனாக மாறியது என்றால் அந்த வளர்ச்சி தொடராமல் நின்று போனதற்கு என்ன காரணம்? தினம் சில குரங்குகள் உலகின் ஏதாவது ஒரு பகுதியில் மனிதனாக மாறிக் கொண்டே இருக்க வேண்டும்: அல்லது தினந்தோறும் சில தாய்க் குரங்குகள் மனிதக் குழந்தைகளைப் பெற்றெடுக்க வேண்டும். ஏன் அது தொடரவில்லை? இதற்கு டார்வினிஸ்டுகளிடம் பதில் இல்லை. மனிதன் பரிணாமம் பெற்று ஏன் இன்னொரு மேல் நிலையை அடையக் காணோம் என்பதற்கும் உளறல் தான் பதிலாகக் கிடைக்கிறது.

மனிதனின் இரத்தம் இதயம்' சிறுநீரகம் போன்ற உள் அமைப்புகள ும் மரபணுக்களும் மனிதன் தனி இனம் என்பதையும் எந்த இனத்தில் இருந்தும் அவன் பரிணாமம் பெற்றிருக்க முடியாது என்பதையும் சந்தேகமற நிரூபித்த பின்பும் டார்வினின் உளறலை தூக்கிப் பிடிப்பவர்கள் சிந்தனையாளர்களாக இருக்க மாட்டார்கள்.

27 comments:

சிறில் அலெக்ஸ் said...

அறிவியலில் பல கோட்பாடுகள் நிருபிக்கப் படாமலேயே ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்றன.

சரி கடவுள்தான் உலகை ஏற்படுத்த்ஹியிருந்தாலும் எந்தக்கடவுள் உருவாக்கினார்?

இத்தனை நேர்த்தியும், விரிவான மாறுபாடுகளும் கொண்ட படைப்பை, பூமட்டுமல்லாத அண்டவெளியை அதன் மேலும் இருக்கும் கோள்கூட்டங்களையும் கடவுள் திடீரெனப் படைத்தார் என நம்புவது அறிவுக்குட்பட்டதாக (எனக்கு) தெரியவில்லை.

வெறும் குரங்கு மனித உருவ ஒற்றுமையை வைத்து மட்டும் பரிமாண வளர்ச்சிக் கொள்கை ஏற்படுத்தப் படவில்லை.

நம்மைவிட நம் குழந்தைகள் திறமையுள்ளவர்களாக உள்ளார்கள் என்பதை நம்மால் பார்க்கமுடிகிறது. இதுவேகூட பரிணாம வளர்ச்சி எனலாம்.

கூகிளில் இன்னும் படிக்கலாம்

suvanappiriyan said...

நன்றி திரு தம்பி.!

படித்தவர்கள் கூட இக் கொள்கையை உண்மை என்று நம்பிக் கொண்டிருப்பது தான் விந்தையான விஷயம்.

suvanappiriyan said...

திரு செல்வ குமார்!

நான் கேட்டிருந்த கேள்விகளுக்கு தக்க பதில் தராமல் மழுப்பலான பதிலையே தருகிறீர்கள். டார்வினின் சித்தாந்தப்படி குரங்கிலிருந்து மனிதன் பரிணாமம் பெற்றான் என்றால் முதல் குரங்கு எப்படி வந்தது என்ற கேள்வியும் வருகிறதே? நாம் பார்க்கும் குரங்குகளோ அல்லது சிப்பன்சிகளோ இல்லை என்றால் வேறு எந்த வகை குரங்கு என்று விளக்க முடியுமா?

டார்வினின் சொந்த மகன் முதலில் தந்தையின் கொள்கையில் தான் இருந்தார். இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு 'என் தநததையின் கருத்துகளில் இருந்து நான் மாறுபடுகிறேன். பரிணாமத் தத்துவத்தை நான் நம்பவில்லை. அனத்தையும் படைத்த இறைவன் என்று ஒன்று உண்டு ' என்று சொல்லியிருக்கிறாரே? இதற்கெல்லாம் உங்களிடம் பதில் இருக்கிறதா?

suvanappiriyan said...

Dear Alex!
Iwill give you answer after one or two days because of my work load

suvanappiriyan said...

திரு சிறில் அலெக்ஸ்!

//தந்தையை விட மகன் அறிவில் முதிர்ச்சி அடைகிறான். இதுவும் ஒரு பரிணாம வளர்ச்சி தான்.//

ஒத்துக் கொள்கிறேன்.அறிவு வளர்ச்சியில் ஏற்படும் பரிணாம வளர்ச்சியை நாம் கண் கூடாக நம் பிள்ளைகளிடம் பார்க்கிறோம். எனவே அறிவில் ஏற்படும் பரிணாம வளர்ச்சியை நம்பலாம். ஆனால் டார்வின் சொல்வது உருவத்தில் ஏற்படும் பரிணாம வளர்ச்சி. இதற்கு ஏதாவது ஆதாரம் காண்பிக்கிறாரா என்றால் எதுவும்இல்லை. இப்படியும் இருக்கலாம் என்ற அனுமானம் தான் டார்வினின் தத்துவம்.

//அந்த கடவுள் யார்//

ஏசு தனக்கு அருளப் பட்ட வேதத்தில் கர்த்தர் என்று கூறுகிறாரே அவர் தான் அந்தக் கடவுள். ஏசுவை ஒரு தூதராக பார்க்காமல் கடவுள் நிலைக்கு உயர்த்தி, அதில் பவுல் அடிகள் தன் சொந்த கருத்துக்களை எல்லாம் ஏசுவின் பெயரால் அரங்கேற்றியதால் தான் உங்களுக்கு கடவுள் பற்றிய குழப்பம் இன்னும் இருக்கிறது.

முஸ்லிம்களுக்கு இந்த குழப்பம் இல்லை. முகமது நபியின் மீது எவ்வளவு பாசம் வைத்திருந்தாலும் அவரை கடவுள் நிலைக்கு உயர்த்துவதற்கு எந்த முஸ்லிமும் உடன் பட மாட்டார். குர்ஆனை எப்படி இறைவனின் வார்த்தை என்று நம்புகிறீர்கள் என்று நீங்கள் கேட்டால் அதற்கும் பதில் இருக்கிறது. பல உதாரணங்களை சொல்ல முடியும் என்றாலுமசில வசனங்களை் மட்டும் சொல்லி விளக்க முயற்ச்சிக்கிறேன்.

'நீங்கள் பார்க்கின்ற தூண்களின்றி வானங்களை அல்லாஹ்வே உயர்த்தினான். பின்னர் அர்ஷின் மீது அமர்ந்தான். சூரியனையும் சந்திரனையும் தன் கட்டுப் பாட்டில் வைத்திருக்கிறான்.ஒவ்வnhன்றும் குறிப்பிட்ட தவணை வரை ஓடுகின்றன.காரியத்தை அவனே நிர்வகிக்கின்றான்.உங்கள் இறைவனின் சந்திப்பை நீங்கள் உறுதியாக நம்புவதற்காக சான்றுகளை அவன் தெளிவு படுத்துகின்றான். (குர்ஆன் : 13-2)

'அவனே பூமியை விரித்தான், மலைகளையும் நதிகளையும் அதில் அமைத்தான். ஒவ்வொரு கனிகளிலும் ஒரு ஜோடியை அமைத்தான்.' (குர்ஆன்: 13-3)

'அவனே காலைப் பொழுதை ஏற்படுத்துபவன். இரவை அமைதிக்காகவும், சூரியனையும், சந்திரனையும் காலம் காட்டியாகவும் அமைத்தான். இது மிகைத்தவனின் ஏற்பாடு' (குர்ஆன் : 6-96)

'அவனே உங்களை ஒரே ஒருவரிலிருந்து படைத்தான்' (குர்ஆன்: 6-98)

'அவன் வானங்களையும் பூமியையும்முன் மாதிரியின்றி படைத்தவன். அவனுக்கு மனைவி இல்லாத நிலையில் அவனுக்கு எவ்வாறு பிள்ளை இருக்க முடியும்? அவனே எல்லாப் பnhருட்களையும் படைத்தவன். அவன் அனைத்துப் பnhருட்களையும் அறிந்தவன்' (குர்ஆன்: 6-101)

'வானங்களையும் பூமியையும் படைத்திருப்பதும் உங்களது மொழிகளும், நிறங்களும் வேறு பட்டிருப்பதும் அவனது அத்தாட்சிகளில் உள்ளது. அறிவுடையோருக்கு இதில் பல சான்றுகள் உள்ளது. (குர்ஆன் : 30-22)

'மின்னலை அச்சமூட்டுவதாகவும் நம்பிக்கையூட்டுவதாகவும் அவன் உங்களுக்கு காட்டுவதும், வானத்திலிருந்து தண்ணீரை இறக்கி, பூமி செத்த பிறகு தண்ணீர் மூலம் அதற்கு உயிரூட்டுவதும் அவனது சான்றுகளில் உள்ளன. விளங்கக் கூடிய சமுதாயத்துக்கு இதில் பல சான்றுகள் உள்ளன. (குர்ஆன் : 30-24)

மேலே நான் எடுத்துக் காட்டி இருக்கும் குர்ஆன் வசனங்கள் பூமி சந்திரன் இன்னபிற கோள்களை படைத்தது யார் என்ற உங்கள் கேள்விக்கு விடையாக உள்ளது. இதற்கு விளக்கவுரை தேவை இல்லாமல் எவரும் விளங்கிக் கொள்ளும் வகையில் அமைந்திருப்பதே இதன் சிறப்பு. இது இறை வேதம் இல்லை என்றால் இதில் பல்வேறு தவறுகளை நீங்கள் பார்க்க முடியும் என்று குர்ஆனிலேயே ஒரு வசனம் வருகிறது. அப்படி குறைகள் கண்டு பிடிக்கப் பட்டால் குர்ஆனை இறை வேதம் இல்லை என்று சுலமாக நிரூபித்து விடலாம். இதற்காகவாவது நீங்கள் குர்ஆனை ஆராய்ச்சி செய்ய வேண்டும். தமிழ் மொழி பெயர்ப்பு உங்களிடம் இல்லை என்றால் உங்கள் முகவரியை எனக்கு தெரியப் படுத்தினால் நானே உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன்.

நம் அறிவியலாளர்கள் முதலில் பூமி தட்டையானது என்றனர். பிறகு உருண்டையாக இருக்கிறது என்றனர்.பூமிதான் இந்த குடும்பத்தின் மையம் என்றும் சூரியன் பூமியை சுற்றி வருவதாகவும் முன்பு கூறி வந்தனர்.சில நாட்களுக்குப் பிறகு சூரியனைத்தான் பூமி சுற்றி வருகிறது. சூரியன் நகராமல் அப்படியே நிற்கிறது என்றனர். இத்தனை குளறுபடிகள் நடந்து சமீப காலத்தில்தான் அறிவியலார் ஒரு முடிவுக்கு வந்து சூரியனும் பூமியும் மற்ற கோள்களும் கூட நிற்காமல் சுற்றிக் கொண்டே இருக்கிறது என்று கண்டு பிடித்து உள்ளனர்.அறிவியல் வல்லுனர்களை குழப்பமடையச் செய்த இந்த பேருண்மையை குர்ஆன் சர்வ சாதாரணமாக கோள்கள் அனைத்தும் அதனதன் பாதையில் ஓய்வின்றி சுற்றி வருகின்றன என்று சொல்லி விட்டு செல்வதை பார்த்து நாம் ஆச்சரியப் படுகிறோம்.

'பார்க்கின்ற தூண்களின்றி' என்ற வார்த்தையை சிறிது சிந்தித்து பாருங்கள். எல்லாக் கோள்களும் எந்த பிடிமானமும் இல்லாமல் அதனதன் பாதையில் சுற்றி வருகிறதே! எப்படி!அது தான் புவி ஈர்ப்பு விசை என்று அறிவியல் சொல்கிறது.அதே போல் பூமியும் புவி ஈர்ப்பு விசையால் ஈர்க்கப் பட்டிருக்கிறது என்ற உண்மையை இநத வசனம் தெளிவாக்க வில்லையா? எல்லாக் கோள்களும் சூரியன் உட்பட அதனதன் பாதையில் நீந்திச் செல்கின்றன என்று குர்ஆன் கூறுகிறதே! இது சமீப காலங்களில் கண்டு பிடிக்கப் பட்ட உண்மையல்லவா! இது போல் வானவியலை பற்றி மட்டும் தானா குர்ஆன் சொல்கிறது? உயிரியல், தாவரவியல், ரசாயனம், பௌதீகம் என்று ஒரு துறைறையும் குர்ஆன் விட்டு வைக்கவில்லையே!தாமஸ் ஆல்வா எடிகனும், ரைட ககோதரர்களும்,அய்ன்ஸ்டீனும் இன்று குர்ஆனின் மொழி பெயர்ப்பு களை படித்தால் வியப்பின்உச்சத்துக்கே சென்று விடுவார்கள்.

இது போல் அறிவியலாரே கண்டு வியந்து போகும் குர்ஆனை முகமது நபி தாமாகவே தயாரித்துக் கொண்டார் என்று சொல்வது எந்த விதத்தில் உண்மையாகும? 1400 வருடங்களுக்கு முன்பு எழுதப் படிக்கத் தெரியாத, எந்த அறிவியல் முன்னேற்றமும் ஏற்படாதஒரு பின் தங்கிய சமூகத்தைச் சார்ந்த ஒருவருக்கு எவ்வாறு இந்த உண்மைகளைக் கூற முடியும்? என்ற கேள்வி வருகிறதல்லவா! அல்லது இன்னும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் இந்த குர்ஆனில் குறை காண்பதற்காகவாவது இதை ஆராய்ச்சி செய்து தான் பாருங்களேன் அலெக்ஸ்!

suvanappiriyan said...

மனிதன் மண்ணும் தண்ணீரும் கலந்த களிமண்ணால் படைக்கப் பட்டான் என்று குர்ஆன் கூறுகிறது. தண்ணீரோடு மற்ற தனிமங்களை சேர்த்து விஞ்ஞானம் சொன்னாலும் அந்த தனிமங்கள் அனைத்தும் மண்ணிலிருந்தே உண்டாகின்றன. மனிதன் உடம்பு மண்ணும் தண்ணீரும் கலந்து உண்டாக்கப் பட்டவை என்பதை அறிவியல் பூர்வமாக நிரூபிக்க கீழ்க் கண்ட விபரங்களை பார்த்து தெளிவு பெறுங்கள்.

ஆக்ஸ்போர்ட் நிறுவனத்தில் கிளாரெண்டன் பதிப்பகத்தால் ஜான் நம்ஸ்லே வெளியிட்ட 'தி எமெண்ட்ஸ்' என்ற ஆராய்ச்சிக் கட்டுரை 1998 ல் மூன்றாம் பதிப்பாக வெளியிடப் பட்டது.

எழுபது கிலோ கிராம் எடையுள்ள மனித உடலில் உள்ள மூலக் கூறுகளை கீழே காணலாம்:

1. ஆக்சிஜன் - 43 கிலோ கிராம்
2. கார்பன் - 16 கிலோ கிராம்
3. ஹைட்ரஜன்- 7 கிலோ கிராம்
4. நைட்ரஜன் - 1.8 கிலோ கிராம்
5. கால்சியம் - 1 கிலோ கிராம்
6. பாஸ்பரஸ் - 780 கிராம்
7. பொட்டாஷியம் - 140 கிராம்
8. சோடியம் - 100 கிராம்
9. குளோர்ன் - 95 கிராம்
10. மக்னீசியம் - 19 கிராம்
11. இரும்பு - 4.2 கிராம்
12. ஃப்ளூரின் - 2.6 கிராம்
13. துத்தநாகம் - 2.3 கிராம்
14. சிலிக்கன் - 1 கிராம்
15. ருபீடியம் -0.68 கிராம்
16. ஸ்ட்ரோன்ட்டியம் - 0.32 கிராம்
17. ப்ரோமின் - 0.26 கிராம்
18. ஈயம் - 0.12 கிராம்
19. தாமிரம் - 72 மில்லி கிராம்
20. அலுமினியம் - 60 மில்லி கிராம்
21. காட்மியம் - 50 மில்லி கிராம்
22. செரியம் - 40 மில்லி கிராம்
23. பேரியம் - 22 மில்லி கிராம்
24. அயோடின் -20 மில்லி கிராம்
25. தகரம் - 20 மில்லி கிராம்
26. டைட்டானியம் -20 மில்லி கிராம்
27. போரான் - 18 மில்லி கிராம்
28. நிக்கல் - 15 மில்லி கிராம்
29. செனியம் - 15 மில்லி கிராம்
30. குரோமியம் - 14 மில்லி கிராம்
31. மக்னீஷியம் - 12 மில்லி கிராம்
32. ஆர்சனிக் - 7 மில்லி கிராம்
33. லித்தியம் - 7 மில்லி கிராம்
34. செஸியம் - 6 மில்லி கிராம்
35. பாதரசம் - 6 மில்லி கிராம்
36. ஜெர்மானியம் - 5 மில்லி கிராம்
37. மாலிப்டினம் - 5 மில்லி கிராம்
38. கோபால்ட் - 3 மில்லி கிராம்
39. ஆண்டிமணி - 2 மில்லி கிராம்
40. வெள்ளி - 2 மில்லி கிராம்
41. நியோபியம் - 1.5 மில்லி கிராம்
42. ஸிர்க்கோனியம் - 1 மில்லி கிராம்
43. லத்தானியம் - 0.8 மில்லி கிராம்
44. கால்ஷியம் - 0.7 மில்லி கிராம்
45. டெல்லூரியம் - 0.7 மில்லி கிராம்
46. இட்ரீயம் - 0.6 மில்லி கிராம்
47. பிஸ்மத் - 0.5 மில்லி கிராம்
48. தால்வியம் - 0.5 மில்லி கிராம்
49. இண்டியம் - 0.4 மில்லி கிராம்
50. தங்கம் - 0.4 மில்லி கிராம்
51. ஸ்காண்டியம் - 0.2 மில்லி கிராம்
52. தண் தாளம் -0.2 மில்லி கிராம்
53. வாளடியம் - 0.11 மில்லி கிராம்
54. தோரியம் - 0.1 மில்லி கிராம்
55. யுரேனியம் - 0.1 மில்லி கிராம்
56. சமாரியம் - 50 மில்லி கிராம்
57. பெல்யம் - 36 மில்லி கிராம்
58. டங்ஸ்டன் - 20 மில்லி கிராம்

மனித உடலின் மூலப் பொருட்களாக உள்ள மேற் கண்ட 58 தனிமங்களில் ஆகிசிஜன் ஹைட்ரஜன் போன்ற வாயுக்களைத் தவிர, மற்ற தனிமங்கள் அனைத்தும் மண்ணிலிருந்து கிடைத்தவை மண்ணோடு மீண்டும் கலப்பவை என்பது குறிப்பிடத் தக்கது.

மேற் கண்ட ஆய்வின் மூலம் மனிதன் உருவானது குரங்கிலிருந்து அல்ல என்றும், அவன் உருவாக்கப் பட்டதின் மூலம் மண் தான் என்பதும் சந்தேகத்திற்கு இடமில்லாமல் நிரூபிக்கப் பட்டிருக்கிறது. டார்வினிஷ்டுகளிடம் இதற்கும் சரியான பதில் இல்லை

supersubra said...

புல்லாகிப் பூடாய் புழுவாய் மரமாகி
பல்விருகமாகி பறவையாய் பாம்பாகி
கல்லாய் மனிதராய் பேயாய் கணங்களாகி
வல்லசுரராகி முனிவராய் தேவராய்
செல்லா நின்ற இத்தாவர சங்கமத்துள்...'

திருவாசக வரிகள் விளக்கும் பரிணாம தத்துவம்

http://yennottam.blogspot.com/2005/08/1.html

supersubra said...

ஒரு மனிதனின் ரத்தம் கூட மற்றொரு மனிதனுக்கு ஒவ்வாது வேறு வகையாக இருந்தால். அதனால் அது ஒரு வாதமாகாது. மேலும் ஐஸக் அசிமோவின் ஒரு கதையில் குரங்கு இல்லாவிட்டால் ஒரு பல்லியிலிருந்து கூட மனிதன் அல்லது ஓர் உயர் உயிரினம் தோன்றும் வாய்ப்பு உள்ளது என்று படித்ததாக நினைவு

சிறில் அலெக்ஸ் said...

//குர்ஆன் சர்வ சாதாரணமாக கோள்கள் அனைத்தும் அதனதன் பாதையில் ஓய்வின்றி சுற்றி வருகின்றன என்று சொல்லி விட்டு செல்வதை பார்த்து நாம் ஆச்சரியப் படுகிறோம்.
//

Kuran (forgive me if there's spelling mistake) was written well after the study about the Planet system was studied. Galeleo established these long before Mohammed.

Muthu said...

படைப்பின் ரகசியத்தை தெரிந்தகொள்வதை விட கடவுள் மறுப்பாளர்களை தாக்குவதில் அதிக கவனம் கொண்டுள்ளார் கவனப்பிரியன்..

செல்வக்குமார் என்பவர் ஓரளவு நன்றாக எழுதியுள்ளார்....

மற்றபடி தர்கக்பூர்வமாக எழுதும் கவனப்பிரியனார் கடவுள் கொள்கையை நம்புவது எந்த தர்க்கத்தின் அடிப்படையி்ல்?

Muthu said...

//டார்வினின் சொந்த மகன் முதலில் தந்தையின் கொள்கையில் தான் இருந்தார். இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு 'என் தநததையின் கருத்துகளில் இருந்து நான் மாறுபடுகிறேன். பரிணாமத் தத்துவத்தை நான் நம்பவில்லை. அனத்தையும் படைத்த இறைவன் என்று ஒன்று உண்டு ' என்று சொல்லியிருக்கிறாரே? இதற்கெல்லாம் உங்களிடம் பதில் இருக்கிறதா//

sorry this is childish Mr.kavanapiriyan..

அப்துல் குத்தூஸ் said...

// * At 7:38 AM, Cyril அலெக்ஸ் said...
Galeleo established these long before Mohammed. *//

//* At 10:15 AM, manakkumural said...
அத்துடன் சிறில் அலெக்ஸ் கலீலியோ பற்ரி சொல்லியிருப்பதையும் பார்த்து விட்டீர்கள்தானே? :) *//


ஐயா சிறில் அலெக்ஸ் மற்றும் மனக்குமறல் அவர்களே... நீங்கள் அறிவிப்பூர்வமாகப் பேசியதாக நினைத்து இங்கு வார்த்தை விளையாட்டு மட்டும் விளையாடிவிட்டு சென்றுள்ளீர்கள். கலீலியோவின் காலம் தெரியுமா? கிபி 1564-1642 இந்தக்காலத்தில் தான் அவர் வாழ்ந்து விட்டுச் சென்றார். ஆனால் எங்கள் முகம்மது நபி(ஸல்) அவர்களின் காலம் கிபி 571-632. கலிலீயோவிற்கு முன் 1000 ஆண்டுகள் முன்பே வாழ்ந்து விட்டு சென்றுவிட்டார்கள். இதைக்கூட அறிய முடியாத நீங்கள் தான் பரிணாம வளர்ச்சியைப் பற்றி பேசவந்துள்ளீர்கள். இதிலிருந்தே உங்களின் அறியாமை உங்களுக்கு விளங்கவில்லையா?

suvanappiriyan said...

தின மலர். அறிவியல் ஆயிரம்!

கேள்வி: பலரது சந்தேகம் உலகம் எப்படி வந்தது? முதலில் ஒரு செல் உயிர் தோன்றியது என்றும்: சிலர் கடவுள் நம்மைப் படைத்தார் என்றும் கூறப்படுகிறது. எது நிஜம்?

-பிரியங்கா, பண்ணைக்காடு, கொடைக்கானல்.

இங்கே உலகம் தோன்றுவதற்கும் உயிர்கள் தோன்றுவதற்கும் வெளியிலிருந்து ஒரு ஆள் தேவைப் பட வில்லை. எல்லாமே தானாக உதித்துக் கொள்ள முடியும் என்று அறிவியல் கூறுகிறது.

கடிகாரம், பூட்டு, சாவி, பானை என்று எந்த செயற்கைப் பொருளைப் பார்க்க நேர்ந்தாலும் அவை யாராலோ செய்யப் பட்டது என்பது நமக்குத் தெரிகிறது. தனக்குத் தானாகவே ஒட்டிக் கொண்டும், பொருந்திக் கொண்டும், உருவாகிக் கொள்ளும் கருவியை மனிதன் இதுவரை கண்டு பிடிக்கவில்லை. எனவே செய்யப் பட்டவைகளுக்கு செய்தவர் உண்டு.

சூரியன், உலகம், உயிர்கள் யாவும் செய்யப் பட்டவைகளா? இல்லையே. எனவே செய்தவர் எவரும் இல்லை.

ஒரு நிமிடம் .... செயற்கைப் பொருட்கள் தாமாக செய்து கொள்ள முடியாதபோது.... இயற்கைப் பொருட்கள் மட்டும் எப்படி செய்து கொள்கின்றன? எனில், ஒரு செய்முறை தகவலின் அடிப்படையில் அவை செய்து கொள்கின்றன என்று அறிவியல் சொல்வதால்....இயற்கைப் பொருட்கள் தோன்றுவதற்கு முன்பாகவே ஒரு 'தகவல்' இருந்திருப்பது உறுதியாகிறது. அந்தத் தகவல் ....எது? யார?

தினமலர்க் காரருக்கு வேண்டுமானால் யார் என்பதில் இன்னும் குழப்பம் இருக்கலாம். சுவனப் பிரியனான எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. அது தான் அல்லாஹ், இறைவன், கர்த்தர், கடவுள் என்ற பெயர்களுடைய அனைத்தையும் படைத்து பரிபாலிக்கக் கூடிய ஒருவன்.

suvanappiriyan said...

பின்னூட்டம் இட்ட அனைவருக்கும் நன்றிகள் பல!

நான் முன்பே கேட்டிருந்தேன். இரத்தமும் குரங்கோடு ஒத்துப் போகவில்லை. இதயமும் மாறுபட்டிருக்கிறது. குரங்கிலிருந்து மனிதன் தோன்றியதற்கான அப்படி மாறிய எந்த மனிதனையும் வரலாற்றுக் குறிப்புகளில் காண முடியவில்லை. முதல் மனிதனான ஆதமுக்கும் ஏவாளுக்கும் கூட தோராயமாக வருடத்தை நம்மால் கூற முடிகிறது. ஆனால் டார்வினிடம் எந்த ஒரு வரலாற்றுக் குறிப்பும் இல்லை. நாம் பார்க்கும் குரங்குகள் அல்ல அவை என்றால் வேறு எந்த வகை குரங்கு என்று கேட்டதற்கும் பதில் இல்லை.

இறைவனின் கட்டளைகளை மறுத்த தூதர்களை துன்புறுத்திய சில சமூகத்தவர்களை குரங்காக மாற்றி விட்டதாக குர்ஆனில் பார்க்க முடிகிறது. ஆனால் அந்த குரங்குகள் கூட இனப்பெருக்கம் செய்திடாமல் மரித்தும் விட்டதாக ஹதீதுகளில் காணக் கிடைக்கிறது. இந்த செய்தி பைபிள் முதற்கொண்டு பல தீர்க்கதரிசிகளுக்கு வழங்கப் பட்ட வேதங்களிலும் காணக் கிடைக்கிறது. இந்த செய்திகளை யெல்லாம் உள் வாங்கிக் கொண்ட டார்வின் தன் கற்பனைக் குதிரையை இஷ்டத்திற்கு ஓட விட்டு இநத கதையை நிர்மாணித்திருக்கிறார் என்று தான் நான் நினைக்கிறேன்.

நான் சிறு பிள்ளைத் தனமாக எழுதுவதாக சிலர் பின்னூட்டம் இடடுள்ளனர். அறிவைத் தேடுவதில் என்றும் நான் சிறு பிள்ளை தான். விபரம் அதிகம் உள்ளவர்கள் ஆதாரங்களைத் தந்தால் என் கருத்தை நான் மாற்றிக் கொள்கிறேன்.

குர்ஆன் இறை வேதம் தான் என்பதற்கு மேலும் ஒன்றிரண்டு சான்றுகளைத் தந்துள்ளேன். இது போல் இன்னும் நூற்றுக் கணக்கான சான்றுகளை குர்ஆனிலிருந்து எடுக்க முடியும். நேரம் கிடைக்கும் போது மீண்டும் வருகிறேன்.

suvanappiriyan said...

சமீபத்தில் டார்வின் சித்தாத்தங்களைப் பற்றிய ஒரு புத்தகம் படித்தேன். அதில் சொல்லப் பட்டிருக்கும் சில கருத்துக்கள்:

"Theory of spontaneous generation" என்ற புத்தகத்தை டார்வின் எழுதியுள்ளார். இதில் இவருடைய கருத்து உலகில் உள்ள உயிரினங்கள் அனைத்தும் தானாகவே உண்டாகிக்கொண்டது என்று சொல்கிறார். பிறகு தான் சொன்ன கருத்துக்களையே மறுத்து பரிணாம வளர்ச்சி என்ற புதிய சித்தாந்தை உருவாக்க ஆரம்பித்தார்.


origin of species என்ற புத்தகத்தில் பரிணாமத்திற்கு டார்வின் கொடுக்கும் விளக்கத்தைப் பார்ப்போம்.
அழுகிய தண்ணீர்கலந்த இடத்தில் பல லட்ஷம் ஆண்டுகளுக்கு முன்பு அமீபா என்ற நுண்ணுயிரி உண்டானது பிறகு அது புழுவாகி ஊர்வன என்ற பரிணாமம் அடைந்து பல லட்சம் ஆண்டுகளுக்குப் பிறகு குரங்காகி பிறகு மனிதனாக ஆகி இருக்கலாம் என்ற ஒரு யூகம்தான் வெளிப் படுகிறதே ஒழிய ஆராய்ச்சி முடிவு அல்ல என்பதை விளங்க வேண்டும்.மனிதனுக்குப் பிறகு ஏன் பரிணாமம் ஏற்படவில்லை. அதை நிறுத்தியது யார்?என்ற கேள்விக்கும் பதில் இல்லை. அமீபா என்ற உயிரினம் மூலமாக பரிணாமம் அடைந்தவன் மனிதன் என்றால் மூலமான அமீபா தற்போது உலகில் எங்கும் இருக்கக் கூடாது. இதற்கெல்லாம் பதில் வைத்திருக்கிறார்களா? இல்லை.

கழுதையையும் குதிரையையும் சேர்த்து உருவாக்கப் பட்ட கோவேறு கழுதை இனவிருத்தி செய்ய முடியாத போது பரிணாமம் அடைந்த மனிதன் எவ்வாறு இனவிருத்தி செய்ய முடியும் என்ற கேள்விக்கும் பதில் இல்லை.

1822 ல் லூயி பாயிஸ்டர் என்ற விஞ்ஞானி அனேக பரிசோதனைகள் நடத்தி ஜீவராசிகள் தானாக உண்டாக வாய்ப்பே இல்லை என்று நிரூபித்து இருக்கிறார். இதற்கெல்லாம் மெத்த படித்த வர்கள் பதில் சொன்னால் சிறுபிள்ளையான நான் விளங்கிக் கொள்ள ஏதுவாக இருக்கும்.

suvanappiriyan said...

தேனைப் பற்றி குர்ஆன் என்ன சொல்கிறது?

'மலைகளிலும் மரங்களிலும் மனிதர்கள் கட்டுவனவற்றிலும் கூடுகளை நீ அமைத்துக் கொள். பின்னர் ஒவ்வொரு கனிகளில் இருந்தும் சாப்பிடு.உனது இறைவனின் பாதைகளில் எளிதாகச் செல்' என்று உமது இறைவன் தேனீக்களுக்கு அறிவித்தான். அதன் வயிறுகளில் இருந்து மாறு பட்ட நிறங்களை உடைய பானம் வெளிப் படுகிறது. அதில் மனிதர்களுக்கு நோய நிவாரணம் உள்ளது. சிந்திக்கிற சமுதாயத்துக்கு இதில் சான்று உள்ளது.' (அல் குர்ஆன் : 16:68,69)

தேன் எவ்வாறு உருவாகிறது என்பதைஎவ்வளவு அழகாக குர்ஆன் சொல்கிறது பாருங்கள்.பூவிலிருந்து தேனை உறிஞசி பிறகு அதனை கூடுகளில் சேமித்து வைப்பதாகத் தான் அதிக காலம் வரை நம்பி இருந்தோம். ஆனால் தேனீக்கள் மலர்களிலுள்ள குளுக்கோஸை உணவாக உட் கொண்டு அதன் வயிற்றுக்குள் சென்று மாற்றமடைந்து அது வெளியிடும் கழிவு தான் தேன் என்பது தற்கால கண்டு பிடிப்பு. அந்த கழிவைத் தான் நானும் நீங்களும் தேன் என்று ருசித்து சாப்பிடுகிறோம்.

அனைத்து மருந்துகளிலும் தேனையும் சேர்த்துக் கொள்வதின் மூலம் நோய் நிவாரணி என்ற வாக்கும் மெய்ப்பிக்கப் படுகிறது. நான் எடுத்துக் காட்டியது சில துளிகளே! கடலளவு அறிவியல் உண்மைகள் குர்ஆன் முழுக்க ஆங்காங்கே தெளிக்கப் பட்டிருக்கிறது. இதை எல்லாம் முகமது நபி தானாக எழுதி வைத்துக் கொண்டு இறைவனிடம் இருந்து வந்தது என்று கூறுகிறார் என்று எப்படி சொல்ல முடியும்?

suvanappiriyan said...

திரு சிறில் அலெக்ஸ்!

நீங்கள் சொல்வது போல் கலிலியோ மற்றும் சில சாத்திரங்களும் வானவியலைப் பற்றி முன்பே சொல்லி இருக்கலாம். தகவல் பரிமாற்றம் அதிகம் இல்லாத குர்ஆன் இறங்கிய அந்த நூற்றாண்டில் இந்த தகவல் எல்லாம் எழுதப் படிக்கத் தெரியாத முகமது நபியை எப்படி சென்றடைந்திருக்க முடியும். முகமது நபியின் தலையில் எத்தனை நரை முடிகள் இருந்தன என்பது வரை வரலாறாக குறிக்கப் பட்டு பாதுகாக்கப் பட்டிருக்கிறது.அப்படி வெளிநாட்டு அறிஞர்கள் யாரும் வந்து சொல்லிக் கொடுத்திருந்தால் அதுவும் ஹதீதுகளில் பதியப் பட்டிருக்கும்.

குர்ஆன் வானவியலைப் பற்றி மட்டும் குறிப்பிடவில்லை. நவீன இன்றைய காலத்தில் மருத்துவத்தில் கைதேர்ந்த ஒருவரின் அறிக்கை எப்படி இருக்குமோ அதை விட சிறப்பாக இருப்பதை ஒரு சில வசனங்களில் பார்ப்போம்.

'விந்துத் துளியை கருவுற்ற சினை முட்டையாக்கினோம். பின்னர் கருவுற்ற சினை முட்டையை சதைத் துண்டாக ஆக்கினோம். சதைத் துண்டை எலும்பாக ஆக்கி எலும்புக்கு இறைச்சியையும் அணிவித்தோம். பின்னர் அதை வேறு படைப்பாக ஆக்கினோம். அழகிய படைப்பாளனாகிய அல்லாஹ் பாக்கியசாலி ஆவான்.' (அல்குர்ஆன் 23:14)

'கால்நடைகளில் உங்களுக்கு படிப்பினை உள்ளது. அதன் வயிறுகளில் உள்ள செறிக்கப் பட்ட உணவுக்கும், இரத்தத்திற்கும் இடைப் பட்ட நிலையில் தூய்மையான பாலை உங்களுக்கு புகட்டுகிறோம். அருந்துவோருக்கு அது மிக இனிமையானது.' (அல்குர்ஆன் : 16;66)

இரத்தம்தான் பாலாக உருவெடுக்கிறது என்று பல நாட்கள் நாம் நம்பி வந்தோம். அரைக்கப் பட்ட உணவுக் கூழுக்கும் இரத்தமாக மாறுகின்ற நிலைக்கும் இடைப் பட்ட நிலையில் இருந்நு தான் பால் உற்பத்தி ஆகிறது என்ற இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டின் கண்டு பிடிப்பை முகமது நபி எப்படி சொல்லி இருக்க முடியும்?

Thekkikattan|தெகா said...

என்ன ஒரு கால விரயம், சுவனப்ரியன் தனது ஐயங்களை இங்கு தீர்த்துக் கொள்கிறார அல்லது பொழுது போகமல் ஏதாவது...

யப்பா, மனிதன் மனிதனாக (இன்றைய நிலையை எட்ட)ஆகி இப்படி நம்மை போல அரிதான மூளை வளர்ச்சியுடன் எட்ட கிட்டத்தட்ட பல மில்லியன் ஆண்டுகளாக குமிந்த நிலையில் பல கோடி வருடங்கள் (species, sub-species, sub-species, the survivor will carry on the acquired characters and physiologically adaptive organs through DNA and RNA, giving rise to more powerful species onto the next species_the changes will happen in micro level where you can not see it onto the next offspring of the previous species though it is passed; so the term is called EVOLUTION, you agree right your KID is lot more smarter than you are...there our evolution lies look at closely).

பிறகு கொஞ்சம் தூரம் நிமிந்த்து நின்று நடந்து சொல்லுமளவிற்க்கு திறமையுற்று அந்த திறமையும் பல கோடி வருடங்களின் பிரயச்சித்ததின் மூலம் எட்டி இப்படி இது நீண்டு கொண்டே போகிறது...இதற்க்கிடையில் மூளையின் வளர்ச்சியும் complexity_களை மேன்மெலும் அதீத படித்தபடியே வளர்ந்து வளர்ந்து...இப்ப பார்க்கிற சிம்பன்சி, கொரில்லா, ஒரங்குட்டன் எல்லாம் நம்முடைய ஒரு மரத்தின் கிளைகள் போல அவர் அவர்களின் மூததையர்களின் வளர்ச்சிக்கும் தேவைகளுக்கும் (Niche) ஏற்ப தனது வளர்ச்சியுனுடே பக்க பிரிவாக மரபணு வேறுபாடுகளுடன் பிரிந்து...இருப்பினும் மிக்க வித்தியாசமில்லை 98% நம்முடைய மரபணுக்களுடன் ஒத்து போகிறது.

மேலே கூறியதற்க்கு சான்றாக மனிதனவதற்க்கு முன்பு மனிததனை ஒத்த மூததை மனிதர்கள், பல வேறுபட்ட கண்டங்களில் மனிதனை ஒத்த மண்டை ஒடுகள், மற்றும் இதர எலும்புகள் கண்டுபிடிக்கப் பட்டு உருதிபடுத்தப் பட்டுள்ளது...

பரிணமத்திற்க்கும் ஆன்மீகத்திற்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது...?
கடவுள்தான் எல்லாவற்றையும் ஆட்டி வைக்கிறான் என்று வைத்துக் கொண்டாலும், இதுவும் அவன் விளையாட்டுக்களில் ஒன்று என்று நிருபிக்கப்பட்ட மனித பார்வைக்கு எட்டிய விசயத்தை தலுவிப்போவதில் ஆன்மீகத்திற்க்கு எந்த தீங்கும் வரப் போவதாக எனக்குப் படவில்லை. தன்னை உணர்ந்து தன்னில் இறைவன் இருப்பதை உணர்வதுதானே ஆன்மீகம்...

நான் விலங்கியியல் பட்ட படிப்பும் ஏன் டாக்டர் பட்டமும் வாங்கும் அளவிற்க்கு வளர்ந்தும் கூட ஒரு போதும் ஆன்மீகத்தையும், அறிவியலையும் போட்டு குளப்பிக் கொண்டதில்லை. அதன் மூலம் கால விரையம்தான் ஆவதாக கருதுகிறேன். ஆன்மிகம்மன்றி எல்ல மதத்திற்க்குத்தான் பிரட்சினை இருக்குமோ....ஒஹோ!

நிறைய படிக்கணும்...நமது மனச விழிப்புணர்வுக்கு எடுத்துட்டு வரணும்...விசயங்களை கிரகித்து பின்பு கடவுளை (அல்லாவை) காண எல்லத்தையும் மறந்து அவனே எல்லாவற்றிலுமாக காணவேண்டும் என்று உங்களை பார்த்து கை கூப்பும் சிரிக்க சிந்திக்க தெரிந்த கடவுளின் சித்தத்தால் ஒருவான ஒரு சக Homo sapiens. ரத்தமாவது மிச்சமாகட்டும்.

அன்பே சிவம்.

Thekkikattan|தெகா said...

இப்படி சுவனப்ரியன் தனது ஐயத்தை வெளியிட்டார்:

//எந்த குரங்காவது மனிதனாக மாறியதைப் பார்த்து விட்டு டார்வின் இப்படி முடிவு செய்தானா என்றால் இல்லை. குரங்குக்கும் மனிதனுக்கும் இடையே உருவ அமைப்பில் மிகுந்த ஒற்றுமை இருப்பது தான் டார்வினின் இந்த அனுமானத்துக்குக் காரணமாக அமைந்தது எனலாம்.//

அதற்க்காக நான் கொடுக்கப்போகும் உதாரணம் சிறு பிள்ளைத்தனமாக இருக்கும் இருந்தாலும் கொஞ்சம் கற்பனை செய்து பார்ப்பதற்க்கு எளிது என்பதால் கொடுக்கிறேன்.

சுவனப்ரியனும் நானும் பிறக்கும் பொழுது சிறு கை குழந்தைகளாகத்தான் பிறந்தோம் ஆனால் எங்களுக்கு 80 வயது ஆகும் பொழுது அந்த கை குழந்ததையான நாங்கள் என்னவானோம்? வளர வளர, நானும் என்னுள் உள்ள உருப்புகளும், மூளையும் என்னவாகிறது...?
அதெ போல என் மகன் என்னை விட புத்திசாலியாக இருக்கிறான் அதனால் நான் படித்தவைகளையும், அனுபவ பட்டவைகளையும் மட்டுமே வைத்து அவன் கருவதற்க்கு முன்பே அவனுடைய மூளைக்குள் வைத்து தைத்து விட்டதாக அர்த்தமா, எது...?100 வருடங்களுக்கு முன்பு பிறந்த குழந்தைகளை காட்டிலும் இன்றைய குழந்தைகள் நல்ல புத்திசாலியாக இருப்பதாக நாம் ஒத்துக்கொள்கிறோம், ஏன் அப்படி? நம் மூளை பலமடைந்து வருகிறதோ...இருக்கும் சூழ்நிலையை பொருத்து...நிறைய சிந்திக்கனும், அதற்க்கு நாம் மனதை திறக்கனும் அதுதான் சாவி மார்க்கத்திற்க்கு.

அன்பே அல்லா.

தருமி said...

அரைக்கப் பட்ட உணவுக் கூழுக்கும் இரத்தமாக மாறுகின்ற நிலைக்கும் இடைப் பட்ட நிலையில் இருந்நு தான் பால் உற்பத்தி ஆகிறது---------நல்ல கண்டு பிடிப்பாக இருக்கிறதே..ஏதாவது இதற்கு reference கிடைக்குமா?

J said...

thekkikattan அவர்களே, உங்கள் பின்னூட்டம் நன்றாக உள்ளது.Richard Dawkins "The Selfish Gene" படித்திருக்கிறீர்களா? நீங்கள் ஒரு Zoology பேராசிரியரா? Evolution பற்றி எழுதுங்களேன் in your Blog.

suvanappiriyan said...

திரு சங்கர் நாராயணன்!

காந்தியடிகள் சொன்னவற்றை மேலே கொடுத்துள்ளேன். பார்த்துக் கொள்ளுங்கள்.இஸ்லாத்தைப் பற்றி தாராளமாக விமர்சியுங்கள்.குர்ஆனிலும், முகமது நபி வாழ்க்கையிலும் ஏதும் தவறுகள் இருப்பதாக நீங்கள் நினைத்தால் அதைச் சுட்டிக் காட்டுங்கள்.எங்களால் முடிந்த வரை விளக்கம் அளிக்கிறோம். அதை விடுத்து தனி நபர்கள் செய்யும் அபத்தங்களை இஸ்லாத்தின் மேல் ஏன் ஏற்றுகிறீர்கள்! என்று தான் நான் கேட்கிறேன்.

மேலும் செருப்பு தைப்பதோ மலம் அள்ளுவதோ இழிவு என்று இஸ்லாம் சொல்லவில்லை. நானும் சொல்லவில்லை. உங்கள் மதம் இழிவு என்று ஒதுக்கி அவர்களை கோவில்களில் கூட ஏற்றாத தீண்டாமைக் கொடுமையைத் தான் சுட்டிக் காட்டினேன். பாகிஸ்தானில் இந்த தொழிலை முஸ்லிம்கள் செய்தாலும் பள்ளிவாசல் உள்ளே வந்து தொழுவதற்கு எந்தத் தடையும் இல்லை. இந்தத் தொழில் செய்பவர்கள் பள்ளிவாசலுக்கு முதலில் வந்தால் முதல் வரிசையில் அவர்தான் நிற்பார். ஆட்சியாளரான முசரப் கடைசியில் வந்தால் கடைசி வரிசையில் தான் நிற்க வேண்டும். இதை நம் நாட்டிலேயே டெல்லி ஜூம்ஆ மசூதியில் கடைசி வரிசையில் நின்ற நம் ஜனாதிபதிகளையும் பார்த்தோமே.

புனே விபசார விடுதியை நடத்துவது மதம் மாறிய முஸ்லிம்கள் என்பது விந்தையாக இருக்கிறது. இது பற்றி பாம்பேயில் உள்ள என் நண்பனிடம் விசாரிக்கிறேன். உங்களின் செய்தி உண்மையாக இருந்தால் அவர்களின் பெயர்தான் மாறியுள்ளது. இன்னும் அவர்கள் இஸ்லாத்துக்குள் வரவில்லை என்பது தான் என் பதில்.

suvanappiriyan said...

'மனிதன் குரங்கிலிருந்து பிறந்தது' கூட இறைவனின் திருவிளையாடலாக இருக்கலாம் என்று நண்பர் கூறுகிறார். பரிணாமமும் இறைவனின் செயல் தான் என்பதற்கு என்ன ஆதாரம் உள்ளது? மனிதன் மண்ணில் இருந்து தான் படைக்கப் பட்டான் என்பதற்கு குர்ஆனிலிருந்தும், அறிவியல் ஆராய்ச்சி முடிவுகளில் இருந்தும் தெளிவாக்கி உள்ளேன். இதற்கு மாற்றமான கருத்து உள்ள நீங்கள் தான் இறைவனின் வேதங்களில் இருந்தோ, ஆறிவியல் ஆராய்ச்சி முடிவுகளில் இருந்தோ ஆதாரங்களைத் தர வேண்டும். அப்படித் தந்து விட்டால் என் முன்னோர்களும் உங்கள் முன்னோர்களும் குரங்கிலிருந்து வந்தவர்கள் என்று நாம் அனைவரும் ஒத்துக் கொள்வோம்.

மேலும் அறிவியலையும் மதத்தையும் போட்டு குழப்பிக் கொள்ளக் கூடாது என்கிறார். நிரூபிக்கப் பட்ட அறிவியல் முடிவுகளுக்கு மாற்றமாக இறைவனின் வாக்கு இருந்தால் அவன் எப்படி நம்மைப் படைத்த இறைவனாக இருக்க முடியும்? ஒன்று அறிவியல் பொய்யாக இருக்க வேண்டும். அல்லது குறிப்பிட்ட அந்த கடவுள் நம்பிக்கை பொய்யாக இருக்க வேண்டும். இறைவனின் வாக்கும் அறிவியல் உண்மைகளும்ஒத்துப் போவதால் தான் 'குர்ஆன் ஒரு வாழும் அற்புதம் என்று முஸ்லிம்கள் நம்புகிறார்கள். எனவே தான் படைப்பு விஷயத்தில் முஸ்லிம்கள் மிகத் தெளிவாகவே இருக்கிறார்கள்.

விலங்கியலில் டாக்டர் பட்டம் பெற்ற உங்களிடம் கேட்கிறேன். பரிணாம வளர்ச்சி என்பது ஒரு காலத்தோடு நின்று விட்டதா? அதை நிறுத்தியது யார்? மரபணுக்கள் குரங்கோடு ஒத்து இருப்பதற்கான ஆதாரத்தை தரமுடியுமா? குரங்கு மனிதனாக மாறியதை நேரில் பார்த்த சபட்சி யார்? இதற்கெல்லாம் ஆதாரபூர்வமான பதிலை டாக்டர் பட்டம் வாங்கிய நீங்கள் தந்தால் உங்கள் கருத்தை நானும் ஏற்றுக் கொள்கிறேன்.

suvanappiriyan said...

மனக் குமுறலுக்கு!

முட்டாள்தனமான வாதங்களை வைப்பதாக சொல்கிறீரகள். அறிவாளியான நீங்கள் கேட்ட கேள்விக்கு பதில் இல்லாமல் என் மேல் கோபப் படுவதிலிருந்தே உங்களிடம் பதில் இல்லை என்பது தெளிவாகிறது.

//மூலக் கூறுகள் சேர்ந்து உருவானவைதான் அனைத்து உயிரினமும். இவ்வகை மூலக் கூறுகள் இணைந்து ஆரம்பத்தில் எளிமையான உயிரினங்கள் தோன்றின. பின்னர் அவை தேவைக் கேற்ப ,சூழ்நிலைக் கேற்ப மாறு பட்டு சிக்கலடைந்து கொண்டே போய்,பல்வேறு உயிரினங்களாக மாற்றம் பெற்று, எவை சூழலுக்கு ஏற்ப இசைவாக்கம் அடைந்தனவோ, அவை தப்பிப் பிழைத்துக் கொண்டன.இவை பல்லாயிரம் ஆண்டுகளாக சிறுக சிறுக ஏற்பட்ட மாற்றங்கள்.//

அறிவாளியான நீங்கள் டார்வினின் இந்த கூற்றை ஆதாரம் இல்லாமல் எப்படி ஏற்றுக் கொண்டீர்கள்?. எதனால் இந்த முடிவுக்கு டார்வின் வந்தார்? ஒரு செல்உயிரிகள் உண்டாவதற்து முன்பு இந்த பூமியைப் படைத்தது யார? சூரியனும் அதைச் சுற்றி வரும் மற்ற கோள்களையும் படைத்தது யார்?இந்த பூமியில் மூலக் கூறுகள் இணைந்து அமீபா போன்றவை உருவானால் அதனுள் உயிர் என்ற ஒன்றை உருவாக்கியது யார? வாயு தண்ணீர் போனறவை யாரால் உருவாக்கப் பட்டது? எல்லாமே தனக்கு தானே உருவாக்கிக் கொண்டன என்று சொல்வது நகைப்பிற்கிடமாக இல்லையா? :))))))

//சிறில் அலெக்ஸ் கலிலியோ பற்றி சொல்லியிருப்பதையும பார்த்து விட்டீர்கள் தானே! : )//

திரு அப்துல் குத்தூஸ் கலிலியோவின் ஆண்டு முகமது நபிக்கு பின்னால் தான் என்று ஆதாரத்தோடு சொல்லியிருப்பதை படித்து விட்டீர்கள் தானே! : ) ) ) )

அய்சக் நியூட்டன் : ஒரு சிருஷ்டி இல்லாமல் இந்த உலகமோ, இந்த உயிரினங்களோ தானாக உண்டானது என்ற சித்தாந்தத்தை நான் ஒத்துக் கொள்ளவில்லை.இவை அனைத்தையும் ஆதியில் படைத்த ஒரு கர்த்தா உண்டு. அது யார? அது என்ன? என்பது என் சிற்றரிவுக்கு படவில்லை.

மனக்குமுறல், செல்வ குமாரின் வாதத்தை விட மிகப் பெரும் விஞஞானி நியூட்டனின் கருத்துதான் இயல்பாக ஒத்துப் போவதால் டார்வினை ஒதுக்கி விடுகிறேன். உங்கள் மன நிலையிலும் மாற்றம் ஏற்பட என்னையும் உங்களையும் சிருஷ்டித்த அந்த இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.

சூப்பர் சுப்ரா!

//குரங்கு இல்லாவிட்டால் ஒரு பல்லியில் இருந்து கூடமனிதன் அல்லது ஓர் உயர் உயிரினம் தோன்றும் வாய்ப்பு உள்ளது.//

அய்யய்யோ! இப்படியே விட்டால் பல்லி, பூராண்,தேள் என்று ஒன்றையும் விட மாட்டார்கள் போலிருக்கிறதே இந்த டார்வினிஷ்டுகள். ஓ மனிதா! உன் படைப்பின் இரகசியம் இவ்வளவு கீழ்த்தரமாகவா போக வேண்டும். : ) ) ) ) ) ) ) )

Anonymous said...

நண்பர் சுவனப்பிரியன் அவர்களுக்கு,

என்னுடைய வலைதளத்திற்கு உங்களை வரவேற்கிறேன். டார்வின் கோட்பாடு குறித்த என்னுடைய கட்டுரைக்கு உங்களின் பதிவை சிலர் பின்னூட்டமாக இட்டிருந்தனர் (அது உங்கள் தளத்திற்கு வருகை தந்தபின்னர்தான் புறிந்தது) அவைகளுக்கு நான் தக்க பதில் கூறியிருக்கிறேன். வாருங்களேன் விவாதிப்போம்.

www.senkodi.multiply.com

தோழமையுடன்,
செங்கொடி.

Unknown said...

சுவனப்பிரியன் அவர்களே!
முதலில் பிரபஞ்சம் எவ்வாறு தோன்றியது? கோள்கள் ஒன்றொடொன்று மோதாமல் எவ்வாறு சுற்றுகின்றன? என்பதையெல்லாம் படித்து அறிந்த பிறகு, உங்களுக்கே தெரியும் பிரபஞ்சத்தை யார் படைத்தார்கள், உயிர்களை யார் படைத்தார்கள் என்று. நானும் கடவுளை நம்புகிறவன் தான், ஆனால் மூட நம்பிக்கைகளை நம்புகிறவன் அல்ல.

Unknown said...

சுவனப்பிரியன் அவர்களே!
முதலில் பிரபஞ்சம் எவ்வாறு தோன்றியது. கோள்கள் ஒன்றொடொன்று மோதாமல் எவ்வாறு சுற்றுகின்றன என்பதையெல்லாம் படித்து அறிந்த பிறகு, உங்களுக்கே தெரியும் பிரபஞ்சத்தை யார் படைத்தார்கள், உயிர்களை யார் படைத்தார்கள் என்று. நானும் கடவுளை நம்புகிறவன் தான், ஆனால் மூட நம்பிக்கைகளை நம்புகிறவன் அல்ல.