Followers

Saturday, October 20, 2012

மீன்களையும் விட்டு வைக்கவில்லை என்டோசல்ஃபான்!

மீன்களையும் விட்டு வைக்கவில்லை என்டோசல்ஃபான்!



'நம்ம வீட்டுக்கார பையனோட லேப்டாப்புல ஒரு சேதிய நான் சைடுல பார்த்தேன். அத நான் சொல்லட்டுமா?'

'ம்..ம்......சொல்லு... சொல்லு.....'

'என்சைக்ளோபீடியா தகவல்படி பல மில்லியன் வருடங்களுக்கு முன்பு நம்ம மூதாதையர்களில் பல பேர் கால் முளைத்து பரிணாமம் அடைந்து நில வாழ் உயிரினமா மாறிட்டாங்களாம்'

'அடடே....ஆச்சரியமா இருக்கே! அப்போ நீரில் வாழும் நம்முடைய சுவாச உறுப்புகளும் மாற்றமடைந்திருக்கணுமே! அது எப்படி ஆச்சு?'

'இப்படி குறுக்கு கேள்வி எல்லாம் கேட்டா எனக்கு என்ன தெரியும்? நான் சொல்றதை கண்ணை மூடிக்கிட்டு நம்பணும். புரியுதா?'

'???????????????'

--------------------------------------------------------

பல்வேறு வகையான மீன்களில் ஆராய்ச்சி செய்த சலீம் அலி சென்டர் பார் ஆர்னிதாலாஜி அண்ட் நேச்சுரல் ஹிஸ்டரி (SACON) என்ற அமைப்பு கேரளாவில் சிறப்பாக இயங்கி வருகிறது. மாநில அரசின் அங்கீகாரம் மற்றும் ஊக்கத்தில் இந்த அமைப்பு செயல்படுகிறது. சமீபத்தில் நடத்திய ஆய்வில் சில அதிர்ச்சிகரமான உண்மைகளை நமக்கு தந்திருக்கிறது.

கேரளாவில் பாயும் நதிகளில் பூச்சிகொல்லி மற்றும் தீங்கு விளைவிக்கும் விஷங்கள் பற்றி ஆய்வு செய்ய இந்த அமைப்பை கேரளா பயோ டைவர்சிடி போர்டு சமீபத்தில் அங்கீகாரம் அளித்து நியமித்தது. பாலக்காடில் பாயும் சித்துர்புழா என்ற ஒரு சிறு ஆற்றைத் தவிர ஏனைய 44 நதிகளையும் இந்த SACON அமைப்பு ஆய்வு செய்தது.



மிகவும் அதிர்ச்சிக்குரிய கண்டுபிடிப்பாக, ஆய்வுக்கு எடுக்கப்பட்ட 159 மீன்களில் அனைத்திலும் DDT எனப்படும் பூச்சிகொல்லி மருந்தும், என்டோசல்பான் எனப்படும் நச்சு பொருளும் கலந்துள்ளது தெரிய வந்தது.

சமீபத்தில் என்டோசல்ஃபான் உற்பத்திக்கு எதிராக உலக நாடுகள் அனைத்தும் அணி திரண்டதும் இந்தியா அதற்கு ஆதரவு அளித்ததும் பிறகு உச்ச நீதிமன்றம் தலையிட்டு அரசுக்குக் கொட்டு வைத்ததும் மத்திய அரசு என்டோசல்பான் உற்பத்தியாளர்களுக்கு வக்காலத்து வாங்கி நீதிமன்றத்தில் பேசியதும் குறிப்பிடத்தக்கது.

'இது சாதாரண விஷயம் அல்ல. இந்த டிடிடி மறறும் என்டோசல்ஃபான் பாதிப்பானது மண், நீர், தாவரம், மிருகங்கள், பறவைகள, மனிதர்கள் என்று அனைத்து ஜீவன்களையும் பாதிக்க தொடங்கியுள்ளது. ஆற்றோரங்களில் உள்ள பலர் தங்களின் குடிநீராக ஆற்று நீரையே பயன்படுத்தி வருகின்றனர். ஆறு மட்டுமல்ல கடலும் பொலிவிழந்து வருகிறது. தொழிற்சாலை கழிவுகள் கடலில் கொட்டப்படுவதால் அங்குள்ள மீன்களும் மிகுந்த பாதிப்படைந்து மனிதனுக்கு தீங்கு விளைவிக்கின்றன' என்கிறார் ஆய்வாளர் சி.எம்.ஜாய்.

விட்டமின் சி உடம்புக்கு தேவை என்று வாரத்துக்கு இரண்டு முறை மீன் குழம்பை விரும்பும் பிரியர்கள் நோய்களை விலை கொடுத்து வாங்கிக் கொள்கிறார்களோ? நமது வீட்டிலேயே ஒரு குளத்தை வெட்டி இனி நாமே மீன் வளர்க்க வேண்டியதுதான்.

முன்பு எங்கள் வீட்டில் அழகிய கிணறு இருந்தது. மோட்டர் பம்பு வைத்ததால் எவருமே கிணறை உபயோகப்படுத்துவதில்லை. எனவே அதனை மணலை போட்டு மூடி விட்டோம். முன்பெல்லாம் அந்த கிணற்றில் அருமையான கெழுத்தி மீன்களை வளர்ப்போம் குழம்புக்கு மிக ருசியான மீன். இனி அந்த கிணற்றை சுத்தம் செய்து அதில் மீன் வளர்க்கலாமா என்று யோசிக்கிறேன்.

தொழிற்சாலைகளின் கழிவுகள் ஆற்றில் கலப்பதாலேயே அதிகமாக நீர் மாசுபட காரணமாகிறது. ஆற்றோரங்களில் வாய்க்கால் ஓரங்களில் பலர் காலைக்கடனை கவலையினறி கழிக்கிறார்கள். மழை பெய்தால் அத்தனையும் ஆறுகள் வாய்க்கால்களில் கலந்து நீர் மாசுபடுகிறது. பல வீடுகளின் கழிவு நீர் ஆறுகளிலும் வாய்க்கால்களிலுமே கலக்கின்றன. இவற்றை எல்லாம் அரசு கவனத்தில் கொண்டு கழிவறைகளின் அவசியத்தை மக்களுக்கு போதிக்க வேண்டும். பாடபுத்தகங்களிலும் இது பற்றிய விழிப்புணர்வை சிறு வயதிலிருந்தே மாணவர்களின் மனத்தில் பதிய வைக்க வேண்டும்.
http://www.deccanchronicle.com/channels/cities/kochi/ddt-kerala-fish-453

23 comments:

இராஜகிரியார் said...

சலாம் சகோ. சுவனப் பிரியன்ஈ

//இனி அந்த கிணற்றை சுத்தம் செய்து அதில் மீன் வளர்க்கலாமா என்று யோசிக்கிறேன்.//

கிணற்றை மட்டும் சுத்தம் செய்தால் போதாது சகோ. அப்படியே கொல்லையையும் தோட்டமாக மாற்றி விடுங்கள். காய்கறிகளையும் விளைவித்துக் கொள்ளலாம். இது தங்கள் பதிவை படித்ததற்கு அப்புறம் சொல்லவில்லை. பல ஆண்டுகளான யோசனை - திட்டம். பொருளாதார பிரச்சினையால் தள்ளி போய் கொண்டிருக்கிறது.

எங்கும் மருந்து எதிலும் மருந்து. என்ன செய்வதென்றே தெரியவில்லை. ஆரோக்கியம் முழுதும் தொலைந்து விட்டது. இதெல்லாம் நாம் இயற்கை மருத்துவங்களை மறந்து ஆங்கில மருத்துவத்தினை தேர்ந்தெடு்த்து கொண்டதன் விளைவு. நம் தவறுக்கு நாம் தானே பலனை அனுபவிக்க வேண்டும்.

suvanappiriyan said...

சலாம் சகோ ராஜகிரியார்!

//கிணற்றை மட்டும் சுத்தம் செய்தால் போதாது சகோ. அப்படியே கொல்லையையும் தோட்டமாக மாற்றி விடுங்கள். காய்கறிகளையும் விளைவித்துக் கொள்ளலாம்.//

கொல்லையை முன்பே ஓரளவு தோட்டமாக மாற்றியுள்ளேன். தென்னை மரங்களின் நிழலால் சில நேரம் வெயில் விழாமல் செடிகள் வாடி விடுகிறது. காலியாகக் கிடக்கும் வீட்டின் மொட்டை மாடியை சிறு தோட்டமாக மாற்றும் ஐடியா உள்ளது. இந்த முறை ஊர் சென்று அந்த வேலையை ஆரம்பிக்க வேண்டியதுதான்.

இராஜகிரியார் said...

//காலியாகக் கிடக்கும் வீட்டின் மொட்டை மாடியை சிறு தோட்டமாக மாற்றும் ஐடியா உள்ளது. இந்த முறை ஊர் சென்று அந்த வேலையை ஆரம்பிக்க வேண்டியதுதான்.//

செய்து முடித்த பின் அதை பற்றியும் விளக்கமாக ஒரு பதிவு இடுங்கள். நாங்களும் பின்பற்ற வசதியாக இருக்கும்.

Unknown said...

அல்ஹம்துலில்லாஹ் ....வந்து விட்டது PJ யின் YOUTUBE க்கு மாற்றமான ஒரு வெப்சைட்....பாருங்கள் செமையா!!! இருக்கு,,,,

http://onlinepj.com/katturaikal/onlinepj-video-site/

http://video.onlinepj.com/

நன்றியுடன்
நாகூர் மீரான்

suvanappiriyan said...

//அல்ஹம்துலில்லாஹ் ....வந்து விட்டது PJ யின் YOUTUBE க்கு மாற்றமான ஒரு வெப்சைட்....பாருங்கள் செமையா!!! இருக்கு,,,,//

தகவலுக்கு நன்றி சகோ நாகூர் மீரான்!

Unknown said...

சலாம் சகோ.சுவனப்பிரியன்

நமது மேதகு மார்க்க அறிஞர் சகோ.சார்வாகன் அவர்கள் தன்னுடைய இஸ்லாமிய ஆய்வுக்கு(!!!) வழிகாட்டியதாக தோழர் .செங்கொடியை பற்றி குறிப்பிட்டிருந்தார்...செங்கொடி ஒரு இஸ்லாமிய பெயர் தாங்கி என்பதை தவிர அவரைப்பற்றி அனுபவஸ்தரான உங்களிடம் கேட்கலாம் என்று நினைக்கிறேன்...

* அவரது பதிவுகள் ஆய்வுக்கு தகுதியானவையா...???

* செங்கொடியின் தளமும் வெறும் காழ்ப்புணர்வு தானா..????

* அவரது பதிவுக்கு தேவையான எதிர்ப்பதிவு போட்டு ஆகி விட்டதா...??

செங்கொடியைப்பற்றி உங்கள் அபிப்பிராயம் என்ன ???

நன்றியுடன்
நாகூர் மீரான்

Unknown said...

அண்ணன் பிஜே நல்லாத்தான் இணையத்தளம் அமைத்திருக்கிறார். அனால் youtube இல் இருந்து காப்பி அடித்துவிட்டு யூடுபை புறக்கணிப்போம் என்று கூவுவது தான் கேவலமா இருக்கு. இது போல தான் குரானும். பிறவற்றில் இருந்து காப்பி அடித்து முகமது குரானை உருவாக்கினார். பின்னர் இது தான் உண்மை மற்றது எல்லாம் பொய் என்று கூவி விட்டு சென்றார். இது தான் பிஜே அண்ணாத்தையின் இணைய தளத்தை பார்க்கும்போது தோன்றுகிறது.

ராவணன் said...

////நாகூர் மீரான் said...

அல்ஹம்துலில்லாஹ் ....வந்து விட்டது PJ யின் YOUTUBE க்கு மாற்றமான ஒரு வெப்சைட்....பாருங்கள் செமையா!!! இருக்கு,,,,////

"அல்ஹம்துலில்லாஹ்"...வாயில் எதையோ மென்றுகொண்டு உங்களை திட்டுவதுபோல் இருக்கு அண்ணாச்சி.

suvanappiriyan said...

சகோ நாகூர் மீரான்!

//* அவரது பதிவுகள் ஆய்வுக்கு தகுதியானவையா...???

* செங்கொடியின் தளமும் வெறும் காழ்ப்புணர்வு தானா..????

* அவரது பதிவுக்கு தேவையான எதிர்ப்பதிவு போட்டு ஆகி விட்டதா...??

செங்கொடியைப்பற்றி உங்கள் அபிப்பிராயம் என்ன ???//

செங்கொடி ஒரு இஸ்லாமிய பெயர்தாங்கி. அவரது அனைத்து கேள்விகளுக்கும் அவரது பதிவிலேயே சென்று சகோ இப்றாகிம் தேவையான விளக்கங்களை கொடுத்து விட்டார். அவர் கேட்ட கேள்வி ஒன்றும் புதிதானவையல்ல. முகமது நபி காலத்திலேயே யூதர்களும் கிறித்தவர்களும் கேட்ட கேள்விகளைத்தான் செங்கொடியும் கேட்டது. மேலும் இணைய தளங்களில் ஐரோப்பிய நாத்திகர்கள் இவரை விட அருமையான கேள்விகளைக் கேட்டு முடிவில் தோல்வியுற்று இஸ்லாத்தை தழுவியதுதான் வரலாறு.

செங்கொடி நேரிடையான விவாதத்துக்கு அழைத்து முதலில் ஒத்துக் கொண்டு பிறகு ஜகா வாங்கிக் கொண்டார். தனது வாதத்தில் திறமையானவாராக இருந்தால் பிஜே யோடு நேரிடையாக விவாதித்து யார் உண்மையாளர் என்பதை மக்களுக்கும் தெரிவிக்கலாம். அதற்கு தயாரில்லை எனும் போது அவரை ஒரு பொருட்டாக நாமும் மதிக்கத் தேவையில்லை.

இவர் சில மாதங்களுக்கு முன்பு ரியாத்திலிருந்து இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இவரது இருப்பிடம் எல்லாம் பலருக்கும் தெரிந்தும் ஒரு தமிழனை சவுதி அரசிடம் ஒப்படைக்கக் கூடாது. அவர் இறைவனிடம் போய் பதில் சொல்லிக் கொள்வார் என்ற நல்ல எண்ணத்தில் அவரை எந்த சிரமமும் இல்லாமல் அனுப்பி வைக்கப்பட்டார்.

இஸ்லாத்தை விட்டு வெளியேறிய இவர் தன்னை முஸ்லிம் என்று கூறி வேவு பார்க்க ஹஜ்ஜூம் செய்துள்ளார். இவரது வெப்சைட் முத்தவாக்களுக்கு தெரிய வந்திருந்தால் பெருந் தண்டனையை அனுபவித்திருப்பார். இதிலிருந்தெல்லாம் அவரை காப்பாற்றி அவருக்கு ஒரு மறு வாழ்வை இறைவன் கொடுத்துள்ளான். அதை இனிமேலாவது சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இவர் வைக்கும் வாதங்கள் அனைத்தும் பதில் சொல்லி தீர்வு கண்டவைகளே. எனவே இவர் இஸ்லாத்தை பற்றி இத்தனை காலம் எழுதியும் ஒரு சதவீதம் கூட முஸ்லிம்களை கம்யூனிஸத்தின் பக்கம் இழுக்க முடியவில்லை. அவரை ஓரு பக்கம் நினைத்தால் பரிதாபமாகவும் இருக்கிறது. இன்று வரை அவரது ஊரிலும் அவரது குடும்பத்தாராலும் அவமானங்களை சந்தித்து வரும் அவர் மறுமையிலும் இறைவனுக்கு முன்னாலும் இதே நிலை தொடர்ந்தால் அவமானப்பட்டு நிற்கப்போவதை நினைத்து உண்மையிலேயே பரிதாபப்படுகிறேன்.

suvanappiriyan said...

//"அல்ஹம்துலில்லாஹ்"...வாயில் எதையோ மென்றுகொண்டு உங்களை திட்டுவதுபோல் இருக்கு அண்ணாச்சி. //

முதலில் உங்கள் குல தெய்வமான முனியாண்டியை ஸ்ரீரங்கம் கோவிலுக்குள் கொண்டு செல்ல சற்று முயற்ச்சித்து பாருங்கள். பிறகு தெரியும் உங்களின் குலதெய்வத்தின் மதிப்பு என்னவென்று. :-)

suvanappiriyan said...

திரு அனந்தன் கிருஷ்ணன்!

//அண்ணன் பிஜே நல்லாத்தான் இணையத்தளம் அமைத்திருக்கிறார். அனால் youtube இல் இருந்து காப்பி அடித்துவிட்டு யூடுபை புறக்கணிப்போம் என்று கூவுவது தான் கேவலமா இருக்கு. இது போல தான் குரானும். பிறவற்றில் இருந்து காப்பி அடித்து முகமது குரானை உருவாக்கினார். பின்னர் இது தான் உண்மை மற்றது எல்லாம் பொய் என்று கூவி விட்டு சென்றார். இது தான் பிஜே அண்ணாத்தையின் இணைய தளத்தை பார்க்கும்போது தோன்றுகிறது.//

ஹி...ஹி...வரலாறுகளின் கதாபாத்திரங்கள் பைபிள் தோரா குர்ஆன் போன்றவை ஒத்து வந்தாலும் அதன் நிகழ்வுகள் முற்றிலுமாக வேறுபடுகின்றன. மூன்று வேதங்களையும் நன்றாக தெரிந்த ஒருவருக்கு இந்த வித்தியாசத்தை மிக இலகுவாக உணர முடியும்.

Unknown said...

யாரு...அடே ராவணனா!!!

நேற்று சகோ.துரைடேனியல் அவர்களின் தளத்திலே வந்து, ஒரு படத்தில் "கவுண்டமணி கல்யாணத்தை நிறுத்த முடியாமல் என்கூட சண்டைக்கு வாங்கடா !!!சண்டைக்கு வாங்கடா !!!" என்பாரே அந்த ஸ்டைலில் என்னை உங்களது தளத்திற்கு அழைத்த அதே ராவணனா.!!!???

நேற்றே நாம் உனது தளத்தை சென்று பார்வை இட்டோம்...உங்களது தளமும் ,பின்னூட்டங்களே இல்லாத உங்களது பதிவுகளும்,உங்களது எழுத்து நடையும்,உங்கள் மீது எனக்கு பரிதாபமே ஏற்படுத்தியது...நீங்கள் ஒரு தெளிவான மனிதர் அல்ல..என்பதை உங்களது முகப்பில் உள்ள "முக்கிய அறிவுப்பு" உணர்த்துகிறது...

//******முக்கிய அறிவிப்பு!!!??

தமிழ் மொழியை உருவாக்கியது நான் இல்லை,அதை வளர்த்ததும் நான் இல்லை. இந்த எழுத்துக்களும் என்னுடையது அல்ல. இங்கே இருக்கும் அனைத்தும் அனைவருக்கும் சொந்தம். யார் வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் பயன் படுத்தலாம்.
Copy Right...காப்புரிமை என்ற கயமைத்தனம் என்னிடம் இல்லை.
காப்பி பேஸ்ட் செய்து, அதை வைத்து பணம் பண்ண நினைக்கும் மூடர்கள் போன்று நான் இல்லை.என்னுடையது என்று இங்கே எதுவும் இல்லை.இங்கே இருக்கும் அனைத்தும் பல தளங்களில் இருந்து பெறபட்டவை.

எனது பதிவுகளை காப்பி, பேஸ்ட் செய்பவர்கள் தாராளமாக செய்துகொள்ளலாம். எந்தத் தடையும் இல்லை.***************//

இங்கே இருக்கும் அனைத்தும் பல தளங்களில் இருந்து பெறபட்டவை என்று சொல்லிவிட்டு காப்புரிமையை பற்றி பேசுபவர் தெளிவான சிந்தனை உடையவராக தெரியவில்லை...உங்களது பதிவும் சாம் ஆண்டர்சன் படம் பார்ப்பது போன்ற உணர்வையே தருகிறது ..

உங்கள் மீது உள்ள பரிதாபத்தால் ஒன்று சொல்கிறேன் ...நல்ல மனநல மருத்துவரை பார்ப்பது நல்லது...

ராவணனின் சிந்தனைகளை அவரது தளத்தை சென்று பார்ப்பது நல்லது...

http://anjjamvakuppu.blogspot.in/


நன்றியுடன்
நாகூர் மீரான்

Unknown said...

சகோ.சுவனப்பிரியன்

//இவர் சில மாதங்களுக்கு முன்பு ரியாத்திலிருந்து இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இவரது இருப்பிடம் எல்லாம் பலருக்கும் தெரிந்தும் ஒரு தமிழனை சவுதி அரசிடம் ஒப்படைக்கக் கூடாது. அவர் இறைவனிடம் போய் பதில் சொல்லிக் கொள்வார் என்ற நல்ல எண்ணத்தில் அவரை எந்த சிரமமும் இல்லாமல் அனுப்பி வைக்கப்பட்டார்.

இஸ்லாத்தை விட்டு வெளியேறிய இவர் தன்னை முஸ்லிம் என்று கூறி வேவு பார்க்க ஹஜ்ஜூம் செய்துள்ளார். இவரது வெப்சைட் முத்தவாக்களுக்கு தெரிய வந்திருந்தால் பெருந் தண்டனையை அனுபவித்திருப்பார். இதிலிருந்தெல்லாம் அவரை காப்பாற்றி அவருக்கு ஒரு மறு வாழ்வை இறைவன் கொடுத்துள்ளான். அதை இனிமேலாவது சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.///

வெளியில் தெரியாத அவரது பல தகவல்கள் தெரிந்து வைத்துள்ளீர்களே...செங்கொடிக்கு அவரது கொள்கைக்கொடி ரொம்ப பலகீனம் தான் போல..

//அவரை ஓரு பக்கம் நினைத்தால் பரிதாபமாகவும் இருக்கிறது. இன்று வரை அவரது ஊரிலும் அவரது குடும்பத்தாராலும் அவமானங்களை சந்தித்து வரும் அவர் மறுமையிலும் இறைவனுக்கு முன்னாலும் இதே நிலை தொடர்ந்தால் அவமானப்பட்டு நிற்கப்போவதை நினைத்து உண்மையிலேயே பரிதாபப்படுகிறேன்.//

ஆம் சகோ..மற்றவர்கள் இஸ்லாத்தில் இல்லாதவர்கள் அதனால் விமர்சிப்பதில் நமக்கு பரிதாபம் ஏற்படவில்லை..இவர் மீது நீங்கள் சொல்லிய தகவல்களை பார்த்தவுடன் ராவணன் தளத்தை பார்த்து என்ன பரிதாபம் ஏற்பட்டதோ ...அதைப்போன்ற பரிதாபமே செங்கொடி மீதும் ஏற்படுகிறது...அவருக்கு நல்ல புத்தி வரட்டும்...தகவலுக்கு நன்றி சகோ..

நன்றியுடன்
நாகூர் மீரான்

வவ்வால் said...

சு.பி.சுவாமிகள்,

பூச்சிக்கொல்லிகளின் தீமையும், சுற்றுச்சூழல் குறித்தும் பதிவிடுவதும் மிகவும் நல்ல விடயம்.

ஆனால் மதப்பதிவுகள் எழுதும் போது செய்வது போல பலவற்றையும் ஒன்றாக்கி குழப்புவதை செய்துவிட்டீர்கள்,அறிவியல் பதிவுகள் எழுதும் போது கொஞ்சம் கவனமாக சரிப்பார்த்துவிட்டு பதிவிடுங்கள் ,அப்பொழுது தான் படிப்பவர்களுக்கு நம்பகதன்மை உருவாகும்.

//சமீபத்தில் என்டோசல்ஃபான் உற்பத்திக்கு எதிராக உலக நாடுகள் அனைத்தும் அணி திரண்டதும் இந்தியா அதற்கு ஆதரவு அளித்ததும் பிறகு உச்ச நீதிமன்றம் தலையிட்டு அரசுக்குக் கொட்டு வைத்ததும் மத்திய அரசு என்டோசல்பான் உற்பத்தியாளர்களுக்கு வக்காலத்து வாங்கி நீதிமன்றத்தில் பேசியதும் குறிப்பிடத்தக்கது.

'இது சாதாரண விஷயம் அல்ல. இந்த டிடிடி பாதிப்பானது மண், நீர், தாவரம், மிருகங்கள், பறவைகள, மனிதர்கள் என்று அனைத்து ஜீவன்களையும் பாதிக்க தொடங்கியுள்ளது. //

இதனைப்படிப்பவர்கள் எண்டோசல்பானும், டி.டிடீ யும் ஒன்று என சொன்னதாக நினைத்திடும் வாய்ப்புள்ளது.

இரண்டும் தனி தனி கெமிக்கல் ஃபார்முலேஷன் கொண்ட மோசமான பூச்சிக்கொல்லிகளே.

எண்டோசல்பான் - ஆர்கனோ குளோரின் -ஆர்கனோ சல்பைடு வகை. ஹெக்சா குளோரின் வழியில் சல்பைடு சேர்ந்து உருவானது.

டி,டி,டீ= dichloro-diphenyl-trichloroethane, இதில் சல்பைடு இருக்காது.

இரண்டுமே மேலை நாடுகளில் தடை செய்யப்பட்ட பூச்சிக்கொல்லி.

இந்தியாவில் டி.டி.டீ முன்னரே தடை செய்துவிட்டார்கள், ஆனால் அதற்கு பதிலாக அதன் ஐசோமெர் லிண்டேன் என்றப்பெயரில் பயன்ப்படுத்தி வருகிறார்கள்,அதுவும் தடை செய்யப்பட வேண்டியதே.

எங்கள் கல்லூரி பேராசிரியர் சுற்று சூழல் குறித்து செய்த ஆய்வில் (அது பி.எச்.டி ஆய்வல்ல,தனிப்பட்ட ஆய்வு என சொன்னார்)உதவியுள்ளோம், எண்டோசல்பான் ,இன்ன பிற பூச்சி மருந்து ,மண்ணில் அதன் விளைவு என நிறைய சாம்பிள்கள் எடுத்து கொடுப்போம். கேரளாவின் காசர் கோடு பற்றிய ரிப்போர்ட் எல்லாம் அப்போது படித்துள்ளேன். அவரது கட்டுரையை கணினியில் உள்ளீடு செய்வது ,பிழை திருத்தம் எல்லாம் செய்து கொடுத்தது மாணவர்களாக நாங்கள் தான்.அது ஒரு நல்ல அனுபவமாக எங்களுக்கு இருந்தது.
-----------------

//விட்டமின் சி உடம்புக்கு தேவை என்று வாரத்துக்கு இரண்டு முறை மீன் குழம்பை விரும்பும் பிரியர்கள் நோய்களை விலை கொடுத்து வாங்கிக் கொள்கிறார்களோ?//

மீனில் விட்டமின் சியும் உள்ளது ஆனால் அது முக்கியமான அல்லது பெருமளவு இல்லை, விட்டமின் ஏ, பி, டி தான் அதிகம், விட்டமின் சி க்காக மீனை உண்பதில்லை.

விட்டமின் சி க்கு உண்ண வேண்டியது முட்டைகோசு, ஆரஞ்ச், எலுமிச்சை போன்றவையே.

suvanappiriyan said...

வவ்வால்!

முதல் பத்தியிலேயே இரண்டு பூச்சிக் கொல்லிகளையும் தனித் தனியே அடையாளப்படுத்தியுள்ளேன். இருந்தாலும் குழப்பம் வர வேண்டாம் என்று நீங்கள் சொல்லியது போல் திருத்தி விட்டேன்.

//எண்டோசல்பான் - ஆர்கனோ குளோரின் -ஆர்கனோ சல்பைடு வகை. ஹெக்சா குளோரின் வழியில் சல்பைடு சேர்ந்து உருவானது.

டி,டி,டீ= dichloro-diphenyl-trichloroethane, இதில் சல்பைடு இருக்காது.

மீனில் விட்டமின் சியும் உள்ளது ஆனால் அது முக்கியமான அல்லது பெருமளவு இல்லை, விட்டமின் ஏ, பி, டி தான் அதிகம், விட்டமின் சி க்காக மீனை உண்பதில்லை.

விட்டமின் சி க்கு உண்ண வேண்டியது முட்டைகோசு, ஆரஞ்ச், எலுமிச்சை போன்றவையே.//

நிறைய விஷயங்கள் அப்படியே மழை மாதிரி கொட்டுதே! வாழ்த்துக்கள்.

வவ்வால் said...

சு.பி.சுவாமிகள்,

எல்லாம் விவசாயம் குறித்து தொடர்ந்து வாசிப்பதால் ,தொ.காவில் கூட விவசாய நிகழ்ச்சி பார்ப்பதுண்டு.

இயற்கை விவசாயம் குறித்து சிறிது ஆர்வமுண்டு, இதற்காக பதிவுலகில் சிலறுடன் சண்டைக்கூடப்போட்டிருக்கிறேன் :-))

இது போன்று விழிப்புணர்வு பதிவுகள் அதிகம் போடுங்கள்.

நன்றி!

ராவணன் said...

////முதலில் உங்கள் குல தெய்வமான முனியாண்டியை ஸ்ரீரங்கம் கோவிலுக்குள் கொண்டு செல்ல சற்று முயற்ச்சித்து பாருங்கள். பிறகு தெரியும் உங்களின் குலதெய்வத்தின் மதிப்பு என்னவென்று. :-) /////

என்ன அண்ணாச்சி...நம்ம முனியாண்டியை அந்த அரேபிய அல்லா என்றா நினைத்தீர்?

ராவணன் said...

நாக்கூர் பாய் நலமா?

நீங்கள் எழுதிய பதிவுகள் எத்தனை?

பின்னூட்டங்கள் எத்தனி?

என்னுடைய பதிவுகளைப் பற்றி அறிய வாஞ்சூர் பாயிடம் கேளுங்கள். எனது பதிவுகளில் அவர் ரீமேக் செய்தது எத்தனை?

உண்மைகள் என்ற பெயரில் எழுதும் நபரிடம் கேளுங்கள். அவர் எனது பதிவுகளுக்குக் கொடுத்த தொடுப்பு எத்தனை?

சும்மா குப்புறப் படுத்துக்கொண்டு கூவவேண்டாம்.

துடிப்பிருந்தால் பதிவுகள் எழுது ஒய்..

Unknown said...

//ஹி...ஹி...வரலாறுகளின் கதாபாத்திரங்கள் பைபிள் தோரா குர்ஆன் போன்றவை ஒத்து வந்தாலும் அதன் நிகழ்வுகள் முற்றிலுமாக வேறுபடுகின்றன. மூன்று வேதங்களையும் நன்றாக தெரிந்த ஒருவருக்கு இந்த வித்தியாசத்தை மிக இலகுவாக உணர முடியும்.//

காப்பியடிக்கிற எல்லாரும் அப்படியே காப்பியடித்தால் அது ஈயடிச்சான் காப்பியாகிவிடும் சுவனப்பிரியன். அதனால் கொஞ்சம் சொந்த கதைகளையும் கலப்பது வழக்கம் தானே. தமிழில் வரும் பெரும்பாலான திரைப்படங்கள் ஹாலிவூட் படங்களின் காப்பிதான் . அதற்காக அப்படியேவா காப்பி அடிக்கிறார்கள். தனக்கு தகுந்தவாறு மாற்றம் செய்வதில்லையா? அது போலதான். முகமதுவும் பிற வேதங்களில் இருந்து காப்பி அடித்து தனக்கு தோன்றியவைகளையும் சேர்த்துக்கொண்டார் . பைபிள் தோரா இரண்டின் ரீ மேக் தான் குரான். ஹி...ஹி மூன்று வேதங்களையும் நன்றாக தெரிந்த ஒருவருக்கு இந்த வித்தியாசத்தை மிக இலகுவாக உணர முடியும். இன்று வரைக்கும் முகமது இறை தூதர் என்பதற்கு ஆதாரம் காட்ட சொன்னால், முகமதுவின் வாயில் இருந்தே வந்த குரானில் இருந்தும் ஹதீஸில் இருந்தும் தானே ஆதாரம் சொல்லி கொண்டிருக்கிறீர்கள்.

suvanappiriyan said...

//என்னுடைய பதிவுகளைப் பற்றி அறிய வாஞ்சூர் பாயிடம் கேளுங்கள். எனது பதிவுகளில் அவர் ரீமேக் செய்தது எத்தனை?//

உங்க பதிவை வாஞ்சூர் பாய் ரீமேக் செய்தாரா? ஜோக்கெல்லாம் அடிக்கக் கூடாது. :-)

suvanappiriyan said...

//இன்று வரைக்கும் முகமது இறை தூதர் என்பதற்கு ஆதாரம் காட்ட சொன்னால், முகமதுவின் வாயில் இருந்தே வந்த குரானில் இருந்தும் ஹதீஸில் இருந்தும் தானே ஆதாரம் சொல்லி கொண்டிருக்கிறீர்கள்.//

உலக அறிஞர்களால் இன்று வரை எவ்வளவோ முயற்சித்தும் குர்ஆனில் ஒரு வசனத்தைக் கூட இன்றைய அறிவியலுக்கு எதிராக காட்ட முடியாததே முகமது நபி ஒரு இறைத் தூதர் என்பதற்கு சிறந்த நிரூபணம். அப்படி நீங்கள் மட்டும் நிரூபித்து விட்டால் உலக நாடுகளில் உங்கள் பெயர் முக்கிய இடத்தை பிடித்துக் கொள்ளும். அதற்காகவாவது ஆராய்ந்து பாருங்களேன்.

Unknown said...

என்ன ராவணன் நலமா..???

வேளாவேளைக்கு மருந்து மறக்காம சாப்புடுங்க....

அடிக்கடி முனியாண்டி சாமி அப்டின்னு சொல்லுறீங்களே..அதை முதல்ல நீங்களாவது மதிக்கிறீங்களா..???

//வயதானவர்களுக்கு கால் வலி வந்தால் பரவாயில்லை. எனக்கு ஏன் வந்தது?

எங்க ஊரு முனியாண்டி சாமியை ஒரு முறை இந்தக் காலால் மிதித்துள்ளேன். அதற்காக இருக்குமோ? //

ராவணனோட முனியாண்டி சாமிய ராவணனே மிதிச்சிட்டு அடுத்தவங்க இடத்துல வந்து புகழ் பாடுகிறார்...இவரது மனநிலையை நாம் நன்கு அறியலாம்...

யாராவது ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போங்கப்பா...கொசுதொல்ல தாங்க முடியலையே....

Unknown said...

//உலக அறிஞர்களால் இன்று வரை எவ்வளவோ முயற்சித்தும் குர்ஆனில் ஒரு வசனத்தைக் கூட இன்றைய அறிவியலுக்கு எதிராக காட்ட முடியாததே முகமது நபி ஒரு இறைத் தூதர் என்பதற்கு சிறந்த நிரூபணம்//

உலக அறிஞர்கள் யாரும் குரானின் வசனத்தை படித்து சிந்தித்து அந்த அறிவியல் கண்டுபிடிப்பை நிகழ்த்தினேன், இந்த கண்டுபிடிப்பை செய்தேன் என்று யாரும் கூறவில்லையே அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கும், நிகழ்வுகளுக்கும் சம்பந்தமாக குரானில் எதாவது வார்த்தை இருக்கிறதா என்று தேடி பிடித்து எதாவது ஒன்றுடன் சம்பந்த படுத்தி கூறினால் அது குரான் அறிவியலை கூறுவதாக ஆகி விடுமா. இப்படி செய்தால் எல்லாருமே புத்தகம் வெளியிட்டு இறை தூதர் ஆகலாமே. அவ்வளவு ஏன் நித்தியானந்தா கூட பல புத்தகங்கள் வெளியிட்டு இருக்கிறார். அவற்றிலும் பல அறிவியல் சம்பந்தமான விஷயங்கள் இருக்கின்றன. அப்படி இல்லை என்றாலும் அறிவியலுடன் சம்பந்தப்படுத்த கூடிய அளவுக்கு வசனங்களும் இருக்கின்றன. அப்படி அவரது புத்தகத்தில் இருந்து எதாவது வசனத்தை அறிவியலுடன் சம்பந்தப்படுத்தி அவரையும் இறை தூதர் ஆக்கி விடலாமா? வேற எதாவது சொல்லுங்க தலைவரே