Followers

Wednesday, October 17, 2012

ஜெர்மன் வேதியல் தொழிற்சாலையில் விபத்து!

ஜெர்மன் வேதியல் தொழிற்சாலையில் விபத்து!



மக்கள் பாதிப்படைந்து விடக் கூடாது என்பதற்காக 1400 பேரை உடனடியாக அவர்களின் வீடுகளில் இருந்து வெளியாக்கியுள்ளது நிர்வாகம். நேற்று அமெரிக்க நிறுவனம் ஒன்றில் ஏற்பட்ட விபத்தில் பொதுமக்கள் பலருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. சோடியம் ஹைட்ராக்சைடால் கெமிகல் ரியாக்ஷன் ஏற்பட்டு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. வட ஜெர்மனியின் சிறிய நகரமான பேட் பாலிங் போஸ்டலில் இந்த விபத்து நடந்துள்ளது. இந்த நிகழ்வின் எதிரொலியால் பள்ளிகள் அனைத்துக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. உயிர் சேதம் எதுவும் ஏற்படாமல் கவனமாக நடந்து கொண்டுள்ளனர் நிர்வாகிகள்.


700 தீயணைப்பு வீரர்கள் கொதிகலனை குளிர்விக்க தொடர்ந்து தற்போதும் போராடி வருகின்றனர். வெப்ப நிலை அதிகரித்து கொதிகலன் வெடிக்கும அபாயம் உள்ளதால் நிலைமை சற்று அபாயத்தில்தான் உள்ளது.

இதனால் குறிப்பிடும்படியான பாதிப்பு இல்லை என்றாலும் இந்த செய்தியை படித்தவுடன் எனது சிந்தையில் கூடங்குளமே முதலில் பளிச்சிட்டது. மிக பாதுகாப்பான குறைந்த மக்கள் தொகை உடைய ஜெர்மனிக்கே அவ்வப் போது இது போன்ற சிக்கல்கள்.

ஆனால் நம் கூடங்குளத்தில் சிலரது புண்ணியத்தால் உள்ளூர் மக்களின் எதிர்ப்பையும் அணுஉலை கணிசமாக சம்பாதித்துள்ளது. அண்டை நாடுகளின் உறவும் குறிப்பிடும்படியாக இல்லை. எனவே நமது அரசு இந்த அணு உலையை செயல்படுத்தினால் உச்சகட்ட பாதுகாப்பை உறுதி செய்து விட்டே உற்பத்தியை துவங்க வேண்டும்..

-----------------------------------------------

“இன்னும் சில பத்தாண்டுகளுக்கு நமது பூகோளத்தின் முக்கியப் பெரும் பிரச்சனைகளாக நீர்வளப் பஞ்சமும், எரிசக்திப் பற்றாக்குறையும் மனிதரைப் பாதிக்கப் போகின்றன! இந்தியாவைப் பொருத்த மட்டில் அடுத்த இருபது ஆண்டுகளுக்கு நமக்குப் போதிய நீர்வளமும், எரிசக்தியும் மிக மிகத் தேவை! பரிதிக் கனலைப் பயன்படுத்தியும், அணுசக்தி வெப்பத்தை உபயோகித்தும் உப்புநீக்கி நிலையங்கள் பல உண்டாக்கப்பட வேண்டும். இப்போது இயங்கிவரும் அணு மின்சக்தி நிலையங்களுக்கு அருகே, உப்புநீக்கி நிலையங்கள் உடனே உருவாக்கப்பட வேண்டும்.”

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாம்.

“2025 ஆண்டில் நீர்ப் பற்றாக்குறைப் பிரச்சனை அசுர வடிவ மடைந்து, 50 மேற்பட்ட உலக நாடுகளில் நீர்ப் பஞ்சம் உண்டாகி 2.8 பில்லியன் மக்கள் பாதிக்கப்படுவார்.”

டாக்டர் எஸ். கதிரொளி, டைரக்டர், சென்னைத் தேசீய கடற்துறைப் பொறியியல் கூடம்.

ஹிரோஷிமா, நாகசாகியில் போட்ட அணு ஆயுதங்களால் ஆயிரக் கணக்கான மாந்தர் மாண்டு, கதிர்க்காயங்களால் துன்புற்று வரும் ஜப்பான் பூகம்ப சுனாமித் தீவுகளில் தற்போது 50 அணுமின் நிலையங்கள் பாதுகாப்பாக இயங்கி 40,000 MWe ஆற்றல் மின்சாரத்தைப் (30%) பரிமாறி வருகின்றன. அவற்றுள் கூடங்குள அணு உலைகள் போல் ஆற்றல் கொண்ட (> 1100 MWe) 14 அசுர அணுமின்சக்தி நிலையங்கள் இயங்கி வருகின்றன. அனைத்து நிலையங் களும் கடல்நீரைத் வெப்பத் தணிப்பு நீராகவும், சில நிலையங்கள் கடல்நீரைச் சுத்தீகரித்து உப்பு நீக்கிய நீரையும் பயன்படுத்தி வருகின்றன.

1950 ஆம் ஆண்டுமுதல் 30 உலக நாடுகளில் 435 அணுமின் நிலையங்கள் பாதுகாப்பாக இயங்கி 370,000 MWe (16%) ஆற்றலைப் பரிமாறி வருகின்றன. மேலும் 56 நாடுகளில் 284 அணு ஆராய்ச்சி உலைகள் ஆய்வுகள் நடத்திக் கொண்டு வருகின்றன.

அமெரிக்காவில் திரி மைல் தீவு, ரஷ்யாவில் செர்நோபிள் நிலையம், ஜப்பானில் புகுஷிமா அணுமின் உலைகள் மட்டுமே சற்று பாதுகாப்பற்றவையாக கருதப்படுகின்றன.

இவை எல்லாம் கொஞ்சம் ஆறுதல் அளித்தாலும் இவ்வளவு பயத்தோடு இந்த விளையாட்டு தேவைதானா? என்று உள் மனது கூறுகிறது. திட்டம் ஆரம்பிக்கும் போது மக்களுக்கு அந்த அளவு விழிப்புணர்வு இல்லை. தற்போது மில்லியன் கணக்கில் பணத்தை உட்கொண்டு விட்டதற்கு பிறகு இது வேண்டாம் என்று சொல்வதும் ஒரு முரண்நகையாகவே படுகிறது.

ஆம்...எதில்தான் ஆபத்தில்லை. எதையும் துணிவோடு எதிர் கொள்வோம். வேறு வழியில்லை......

----------------------------------------------





24 comments:

Unknown said...

ஸலாம்

எல்லாமே பிரச்சனை தான் ...

இராஜகிரியார் said...

//தற்போது மில்லியன் கணக்கில் பணத்தை உட்கொண்டு விட்டதற்கு பிறகு இது வேண்டாம் என்று சொல்வதும் ஒரு முரண்நகையாகவே படுகிறது.//

அதை அப்படியே அனல் மின் நிலையமாக மாற்றலாம் என்று கூறுகிறார்களே...! அவ்வாறாயின் செலவளிக்கப் பட்ட பணம் வீண் அல்லவே.

அதே போல் நீதிமன்றம் கூட எவ்வளவு செலவு செய்திருந்தாலும் மக்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றால் மூடிவிட வேண்டியது என்று தான் கூறியுள்ளதே.

//ஆம்...எதில்தான் ஆபத்தில்லை. எதையும் துணிவோடு எதிர் கொள்வோம். வேறு வழியில்லை......//

நீங்கள் சொல்வது சரிதான். ஆனால் அதை சம்பந்த பட்டவர்கள் மட்டும் தான் சொல்ல வேண்டும்.

suvanappiriyan said...

சலாம் சகோ சுல்தான் மைதீன்!

//ஸலாம்

எல்லாமே பிரச்சனை தான் ... //

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

suvanappiriyan said...

//அதை அப்படியே அனல் மின் நிலையமாக மாற்றலாம் என்று கூறுகிறார்களே...! அவ்வாறாயின் செலவளிக்கப் பட்ட பணம் வீண் அல்லவே.//

அப்படி ஒரு மாற்று ஏற்பாடு இருந்தால் அதை செயல்படுத்தலாம்.

//நீங்கள் சொல்வது சரிதான். ஆனால் அதை சம்பந்த பட்டவர்கள் மட்டும் தான் சொல்ல வேண்டும்.//

ஆம்...அதை அருகில் இருக்கும் மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.


Easy (EZ) Editorial Calendar said...

எத்தனை மில்லியன் செலவளித்தாலும் மக்களின் உயிருக்கு ஆபத்து என்றால் அதை இயக்கவே கூடாது.......

நன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

HBA said...

புதுடெல்லி: இந்துக்களின் புனித நதியாக கருதப்படும் கங்கை நதியின் நீரில் புற்றுநோயை உண்டாக்கும் மாசுக்கள் கலந்துள்ளதாக சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. கங்கை ஆற்றுப்படுகையில் வசிப்பவர்களுக்கு புற்றுநோய் தாக்கும் வாய்ப்பு அதிகம் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பலகோடி இந்தியர்களின் ஜீவநதி கங்கை. இந்த நதியில் நீராடினால் தீராத பாவமெல்லாம் தீர்ந்துவிடும் என்பது பலகோடி இந்துக்களின் நம்பிக்கை. இதற்காகவே தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் புனிதப்பயணம் மேற்கொண்டு கங்கையை தரிசித்து புனித நீராடுகின்றனர்.
கங்கையில் இறந்தாலே அங்கே இறந்தவர்களை எரியூட்டினாலோ சொர்க்கத்திற்கு செல்வார்கள் என்பது நம்பிக்கை. இதன்காரணமாக இறந்தவர்களின் உடலை கங்கை நதியில் விட்டுவிடுகின்றனர். இறந்தவர்களின் அஸ்தியை இங்கு கொண்டுவந்து கரைக்கின்றனர். இதனால் கங்கை நீர் பல ஆண்டுகளாக அழுக்கடைந்து,மாசுபட்டு வருகிறது.
புனிதநதியாம் கங்கை நதி மாசடைந்து பல ஆண்டு களாகி விட்டது. இந்த கங்கை நீரில் புற்று நோயை உண்டாக்கும் கார்சினோஜென்ஸ் (carcinogens)எனப்படும் புற்று நோயை உண்டாக்கக்கூடிய காரணிகள் இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கங்கையில் உள்ள மாசுக்கள் குறித்து தேசிய புற்றுநோய் பதிவு மையம் ஆய்வு மேற்கொண்டது. அதில் அதிர்ச்சிகரமான பல தகவல்கள் தெரியவந்தன.
கங்கை நீரில் மிக அதிக உலோகத்தன்மையும்,நச்சு ரசாயனம் காணப்படுகிறது. குறிப்பாக உத்தரப்பிரதேசம்,பீகார் மற்றும் மேற்குவங்க மாநிலங்களில் உள்ள கங்கை நதி படுகை பகுதிகளில் இது அதிகமாக காணப்படுவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
கங்கை நதியையொட்டிய பகுதிகளில் வசிப்பவர்களுக்கு,நாட்டின் பிறபகுதிகளில் வசிப்பவர்களை காட்டிலும் மிக எளிதில் புற்றுநோய் தாக்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளதாக அந்த ஆய்வறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
புனித நதியாக போற்றப்படும் கங்கை நதியைப் பற்றி ஆய்வு செய்த ஆய்வாளர்கள் நாட்டில் உள்ள முக்கிய நதிகளை ஆய்வு செய்தால் என்னென்ன அதிர்ச்சியான தகவல்கள் வெளியாகுமோ?
தமிழ்.ஒன் இன்டியா

HBA said...

புதுடெல்லி: இந்துக்களின் புனித நதியாக கருதப்படும் கங்கை நதியின் நீரில் புற்றுநோயை உண்டாக்கும் மாசுக்கள் கலந்துள்ளதாக சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. கங்கை ஆற்றுப்படுகையில் வசிப்பவர்களுக்கு புற்றுநோய் தாக்கும் வாய்ப்பு அதிகம் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பலகோடி இந்தியர்களின் ஜீவநதி கங்கை. இந்த நதியில் நீராடினால் தீராத பாவமெல்லாம் தீர்ந்துவிடும் என்பது பலகோடி இந்துக்களின் நம்பிக்கை. இதற்காகவே தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் புனிதப்பயணம் மேற்கொண்டு கங்கையை தரிசித்து புனித நீராடுகின்றனர்.
கங்கையில் இறந்தாலே அங்கே இறந்தவர்களை எரியூட்டினாலோ சொர்க்கத்திற்கு செல்வார்கள் என்பது நம்பிக்கை. இதன்காரணமாக இறந்தவர்களின் உடலை கங்கை நதியில் விட்டுவிடுகின்றனர். இறந்தவர்களின் அஸ்தியை இங்கு கொண்டுவந்து கரைக்கின்றனர். இதனால் கங்கை நீர் பல ஆண்டுகளாக அழுக்கடைந்து,மாசுபட்டு வருகிறது.
புனிதநதியாம் கங்கை நதி மாசடைந்து பல ஆண்டு களாகி விட்டது. இந்த கங்கை நீரில் புற்று நோயை உண்டாக்கும் கார்சினோஜென்ஸ் (carcinogens)எனப்படும் புற்று நோயை உண்டாக்கக்கூடிய காரணிகள் இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கங்கையில் உள்ள மாசுக்கள் குறித்து தேசிய புற்றுநோய் பதிவு மையம் ஆய்வு மேற்கொண்டது. அதில் அதிர்ச்சிகரமான பல தகவல்கள் தெரியவந்தன.
கங்கை நீரில் மிக அதிக உலோகத்தன்மையும்,நச்சு ரசாயனம் காணப்படுகிறது. குறிப்பாக உத்தரப்பிரதேசம்,பீகார் மற்றும் மேற்குவங்க மாநிலங்களில் உள்ள கங்கை நதி படுகை பகுதிகளில் இது அதிகமாக காணப்படுவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
கங்கை நதியையொட்டிய பகுதிகளில் வசிப்பவர்களுக்கு,நாட்டின் பிறபகுதிகளில் வசிப்பவர்களை காட்டிலும் மிக எளிதில் புற்றுநோய் தாக்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளதாக அந்த ஆய்வறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

suvanappiriyan said...

//கங்கையில் உள்ள மாசுக்கள் குறித்து தேசிய புற்றுநோய் பதிவு மையம் ஆய்வு மேற்கொண்டது. அதில் அதிர்ச்சிகரமான பல தகவல்கள் தெரியவந்தன.
கங்கை நீரில் மிக அதிக உலோகத்தன்மையும்,நச்சு ரசாயனம் காணப்படுகிறது. குறிப்பாக உத்தரப்பிரதேசம்,பீகார் மற்றும் மேற்குவங்க மாநிலங்களில் உள்ள கங்கை நதி படுகை பகுதிகளில் இது அதிகமாக காணப்படுவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.//

வருத்தத்திற்குரிய விஷயம். அரசு உடன் இதில் கவனம் செலுத்தி கங்கையை சுத்தப்படுத்த முயற்சி எடுக்க வேண்டும். பிணங்களை பாதி எறிந்த நிலையில் கங்கையில் விடுவதும் சுகாதாரக் கேட்டுக்கு வழி வகுக்கிறது. அதற்கென அரசே ஆட்களை நியமித்து சுகாதாரத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். ஆனால் இந்துத்வா வாதிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பார்கள். அவர்களின் நம்பிக்கை முக்கியம் என்பார்கள்.

suvanappiriyan said...

மலர்!

//எத்தனை மில்லியன் செலவளித்தாலும் மக்களின் உயிருக்கு ஆபத்து என்றால் அதை இயக்கவே கூடாது.......//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

suvanappiriyan said...

பரவும் டெங்கு காய்ச்சல்: தடுக்கும் வழிமுறைகள்

[ டெங்கு பாதிப்பிற்கு ஆளாவோருக்கு, இரண்டு நாட்களுக்கு மேல், உடல் எலும்பு இணைப்புகளில் தீவிர வலியுடன்கூடிய தொடர் காய்ச்சல் இருக்கும்.

நம் மக்களில் பெரும்பாலோரிடம், காய்ச்சல் என்றால், முதலில் மருத்து கடைகளுக்கு சென்று, தன்னிச்சையாக மாத்திரை உட்கொள்ளும் போக்கு உள்ளது. ஆபத்தான இப்போக்கை கைவிட்டு, உடல்வலியுடன்கூடிய காய்ச்சல் இருந்தால், தாமதிக்காமல் உடனே மருத்துவமனைக்கு செல்வது அவசியம்.]

டெங்கு பாதிக்கப்பட்டோருக்கு, உடல் எலும்பு இணைப்புகளில் தீவிர வலியுடன் கூடிய தொடர் காய்ச்சல், இரண்டு நாட்களுக்கு மேல் இருக்கும். இரண்டு மாத இடைவேளைக்கு பின், இரண்டு வாரங்களாக, தமிழகத்தில், மீண்டும், டெங்கு காய்ச்சலின் தாக்கம் அதிகரித்துள்ளது.

சென்னை, வேலூர், நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, நெல்லை, தூத்துக்குடி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில், கடந்த ஒன்பது மாதங்களில், 4,500-க்கும் மேற்பட்டோர், டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.இவர்களில், சிறுவர், சிறுமியர் உட்பட 50-க்கும் அதிகமானோர், இதுவரை இறந்துள்ளனர். இருப்பினும், "டெங்கு காய்ச்சல் குறித்து, பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை' என, மாநில சுகாதார துறை அதிகாரிகள் மூலம், மத்திய சுகாதார அமைச்சர் வரை, திரும்ப திரும்ப சொல்லி வருகின்றனர்.

ஆனால், டெங்கு அறிகுறிகளுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோர் மற்றும் இக்காய்ச்சலால் இறப்போர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், தங்கள் பிள்ளைகள், உறவினர்களுக்கு, காய்ச்சல் வந்தாலே, அது டெங்குவாக இருக்குமோ என அச்சப்படும் அளவிற்கு, பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். இந்த பீதியில் இருந்து விடுபடவும், டெங்கு வராமல் தடுக்க, பொதுமக்கள் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், சென்னை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, நிலைய மருத்துவ அதிகாரி(ஆர்.எம்.ஓ.,) பொன்னுராஜேஸ்வரி, பேட்டி:

டெங்கு காய்ச்சல் எதனால் வருகிறது? எந்த பருவத்தில், இக்காய்ச்சல் அதிகம் பரவுகிறது?: பகல் நேரத்தில் மட்டும் மனிதர்களை கடிக்கும், "ஈடிஸ்' வகை கொசுக்கள் மூலம், டெங்கு காய்ச்சல் பரவுகிறது. டெங்கு வைரஸ் இக்காய்ச்சலை உண்டாக்குகிறது. ஆண்டு முழுவதும் இக்காய்ச்சல் வந்தாலும், பருவமழை காலத்தில் இதன் தாக்கம் அதிகமாக இருக்கும்.

டெங்குவின் அறிகுறிகள் என்ன?: டெங்கு பாதிப்பிற்கு ஆளாவோருக்கு, இரண்டு நாட்களுக்கு மேல், உடல் எலும்பு இணைப்புகளில் தீவிர வலியுடன்கூடிய தொடர் காய்ச்சல் இருக்கும்.

இந்த அறிகுறிகள் இருந்தால், பொதுமக்கள் என்ன செய்ய வேண்டும்?: நம் மக்களில் பெரும்பாலோரிடம், காய்ச்சல் என்றால், முதலில் மருத்து கடைகளுக்கு சென்று, தன்னிச்சையாக மாத்திரை உட்கொள்ளும் போக்கு உள்ளது. ஆபத்தான இப்போக்கை கைவிட்டு, உடல்வலியுடன்கூடிய காய்ச்சல் இருந்தால், தாமதிக்காமல் உடனே மருத்துவமனைக்கு செல்வது அவசியம்.

டெங்கு அறிகுறியுடன் வருவோருக்கு, என்னென்ன பரிசோதனைகள் செய்யப்படுகின்றன? டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் மருத்துவமனைக்கு வருவோருக்கு, முதலில், ரத்தத்தில் உள்ள தட்டணுக்களின் எண்ணிக்கையை அறியும் பரிசோதனை மேற்கொள்ளப்படும். சராசரியாக ஒரு மனிதனின் ரத்தத்தில், அவரவர் வயதிற்கேற்ப, 1.5 லட்சம் முதல் 4 லட்சம் வரை, தட்டணுக்கள் இருக்க வேண்டும். இந்த எண்ணிக்கை, 60 ஆயிரத்திற்கு கீழ் குறைந்தால், அவர்களுக்கு டெங்கு இருக்க, அதிக வாய்ப்பு உள்ளது. அதை உறுதி செய்யவதற்கான பரிசோதனைகள் செய்யப்பட்டு, கூடவே, தட்டணுக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான சிகிச்சையும் தரப்படும்.

டெங்குவில் எத்தனை நிலைகள் உள்ளன?: மூன்று நிலைகள் உள்ளன. முதல் நிலை டெங்குவால் பாதிக்கப்படுவோருக்கு, டெங்கு வைரஸ் பாதிப்பதால், மூன்று முதல் ஏழு நாட்கள் வரை, காய்ச்சல் இருக்கும். மற்றப்படி பெரிய பாதிப்புகள் இருக்காது.

இக்காய்ச்சல் வந்துபோன சில நாட்கள் இடைவெளியில், மீண்டும் டெங்கு வைரஸ் தாக்குதலுக்கு ஆளாவோர், காய்ச்சலின் இரண்டாம் நிலையில் உள்ளவர்களாக கருதப்படுவர். இவர்களுக்கு, ரத்தம் உறைவதற்கு தேவையான தட்டணுக்களின் எண்ணிக்கை குறைந்து, வாய், மூக்கு போன்ற பகுதிகளில் ரத்தபோக்கு ஏற்படும். இந்நிலை முற்றியவர்கள், டெங்குவின் மூன்றாம் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இவர்களுக்கு, ரத்தபோக்கின் காரணமாக, ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை குறைந்து, ரத்த அழுத்தம், நாடித்துடிப்பு குறைந்து, மயக்க நிலையை அடைவர். தோலில் ஆங்காங்கே சிகப்பு புள்ளிகள் உண்டாகும்.

டெங்கு தாக்குதலுக்கு ஆளாகி, இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலையில் உள்ளவர்களுக்கு தான் உயிரிழக்கும் அபாயம் அதிகம்.

ஆனால், தற்போது, டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுவோரில், 90 சதவீதம் பேருக்கு, டெங்குவின் முதல் நிலை பாதிப்பு மட்டுமே உள்ளதால், பொதுமக்கள் பீதியடைய தேவையில்லை.

-- http://www.nidur.info/data/index.php?option=com_content&%AF%8D&Itemid=69

இராஜகிரியார் said...

எனக்கு இன்று வந்த e-mail...

தமிழக மின்சாரப் பிரச்சினைக்கான உண்மைக் காரணமும், அதற்கான தீர்வும்


தமிழகத்தின் மின் பற்றாக்குறை என்பது இன்றைய தேதியில் சுமார் 4000 - 4500 மெகாவாட்டாக இருக்கிறது. 2013 ஆம் ஆண்டில் இந்தப் பற்றாக்குறை 5000 - 5500 மெகாவாட்டாகவும், 2014 இல் இது 6200 மெகாவாட்டாகவும், 2015 இல் இது 7300 மெகாவாட்டாகவும் கூடியிருக்கும் என்பது மின் நிபுணர்களின் கணிப்பு[1].
இந்த சூழ்நிலையில், தமிழகத்தில் அரசுக்கு சொந்தமான மூன்று மின் உற்பத்தி நிலையங்கள் பழுதடைந்த நிலையில் கேட்பாரற்றுக் கிடக்கின்றன.
மின் உற்பத்தியைத் தொடங்கும் நிலையில் உள்ள மூன்று புதிய மின் உற்பத்தி நிலையங்களை (என்ன காரணத்திற்கோ) இன்றைய நெருக்கடியான காலகட்டத்திலும் மின்சாரத்தை உற்பத்தி செய்ய விடாமல் தமிழ்நாடு அரசு நிறுத்தி வைத்திருக்கிறது.
தமிழ்நாடு மின்வாரியத்துக்கு சொந்தமான குத்தாலம் (தஞ்சை மாவட்டம்), வழுதூர் 1 மற்றும் 2 (ராமநாதபுரம் மாவட்டம்) ஆகிய எரிவாயு மின் நிலையங்களில் அடிக்கடி எந்திரங்கள் பழுதடைவதும், பல மாதங்களுக்குப் பழுது நீக்கப்படாமல் இருப்பதும் வாடிக்கையாக இருக்கிறது.
குத்தாலம் மின் நிலையம் 101 மெகாவாட் திறனையும், வழுதூர் 1 மற்றும் 2 மின் நிலையங்கள் 95 மற்றும் 92 மெகாவாட் திறனைக் கொண்டிருகின்றன. இந்த மூன்று மின் நிலையங்களுமே முழுமையாக செயல்பட்டால் 288 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும்.
இன்றைய தேதியில் இந்த மின் நிலையங்கள் பழுதடைந்துள்ளன. அவற்றின் பழுது நீக்கப்படாமல் அவற்றின் மின் உற்பத்தி முடங்கிக் கிடக்கிறது. அவற்றில் உள்ள பழுதை நீக்க பல மாதங்களாகத் தமிழக அரசு முயற்சி எடுக்க மறுத்து வருகிறது. இதனால் கிட்டத்தட்ட 288 மெகாவாட் மின்சாரத்தை நாம் இழந்து கொண்டிருக்கிறோம். இந்த மின்நிலையங்கள் அன்றாடம் உபயோகிக்க வேண்டிய இயற்கை எரிவாயுவிற்காக, மின் உற்பத்தி செய்யப்படாமல் இருக்கும் இந்தக் காலகட்டத்திலும் ஒவ்வொரு நாளும் 71 லட்ச ரூபாயை தமிழ்நாடு மின் வாரியம் GAIL நிறுவனத்திற்குக் கட்டிக்கொண்டிருக்கிறது.
2007 இல் வட சென்னை மற்றும் மேட்டூர் மின் நிலையங்களில் 2X600 மற்றும் 1X600 என்ற 1800 மெகாவாட் திறனுள்ள அனல் மின் உற்பத்தி அலகுகளை அமைக்க REC நிறுவனத்தின் உதவியுடன் தமிழ்நாடு அரசு திட்டமிட்டது.
வடசென்னை முதல் அலகிற்கான பணி 2008 பிப்ரவரியில் துவங்கியது. அதன் கட்டுமானப் பணி 2011 மே மாதத்தில் நிறைவு பெற வேண்டும். அதுபோலவே வடசென்னை இரண்டாவது அலகின் பணி 2008 ஆகஸ்டில் தொடங்கியது. 2011 நவம்பர் மாதம் அது முடிவடைய வேண்டும்.
வடசென்னை திட்டத்தைப் போலவே, மேட்டூர் மின் நிலையத்தில் திட்டமிடப்பட்ட 600 மெகாவாட்டிற்கான பணி 2008 ஜூன் மாதம் தொடங்கியது. 2011 செப்டம்பரில் அது நிறைவு பெற வேண்டும்.
இவை அனைத்தும் ஏற்கனவே உள்ள மின் நிலையங்களில் மேற்கொள்ளப்படும் விரிவாக்கத் திட்டங்கள்தாம் (expansion plans) என்பதால் இவற்றை அமைத்து, இயக்க குறைந்த காலமே போதுமானது.

இராஜகிரியார் said...

தொடர்ச்சி...

சென்னையின் அருகே உள்ள வள்ளூரில் 3X500 மெகாவாட் மின் உற்பத்தி நிலையத்தினை மத்திய அரசு நிறுவனமான NTPC-யின் துணையுடன் நிறுவ 2002 ஆம் ஆண்டில் தமிழக அரசு ஒப்பந்தம் செய்துகொண்டது. இதன் உற்பத்தித் திறனான 1500 மெகாவாட்டில் 1041 மெகாவாட் மின்சாரம் தமிழகத்திற்குக் கிடைக்கும் என்பது உடன்படிக்கை. ஆனால் இந்தத் திட்டம் 2007 ஆம் ஆண்டு வரை கிடப்பில் போடப்பட்டது. கடைசியில், 2007 ஆகஸ்டு மாதம் அதன் கட்டுமானப் பணிகள் தொடங்கின. 2010 அக்டோபரில் முதல் அலகும், 2011 மார்ச்சில் இரண்டாவது அலகும், 2012 செப்டம்பரில் மூன்றாவது அலகும் உற்பத்தியைத் தொடங்க வேண்டும்.
இன்றைய தேதியில், மேட்டூரில் உள்ள 600 மெகாவாட் அலகும், வடசென்னையின் இரண்டாவது அலகான 600 மெகாவாட்டும், வள்ளூரில் உள்ள முதலாவது அலகான 500 மெகாவாட்டும் முடிவடைந்துள்ளன. 2012 மார்ச் – மே மாதங்களில் அவை முழுமையாக பரிசோதனை செய்யப்பட்டு மின்சாரக் கட்டமைப்பில் இணைக்கப்பட்டுள்ளன (synchronised). எனினும் என்ன காரணத்தினாலோ தமிழக அரசு அவற்றில் இருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்வதை நிறுத்தி வைத்திருக்கிறது. இதன் காரணமாக, நாம் 1547 மெகாவாட் மின்சாரத்தை இழந்து நிற்கிறோம்.
ஆக, தமிழக அரசு நினைத்தால் இன்றே 1835 மெகாவாட் மின்சாரத்தை (1547 + 288) உடனடியாக உற்பத்தி செய்ய முடியும். இந்த மின்சாரம் அரசுக்கு சொந்தமான மின் நிலையங்களில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரமாதலால், தனியாரிடம் இருந்து வாங்கும் கொள்ளை விலை மின்சாரத்தைப் போலல்லாமல் குறைந்த விலையில் கிடைக்கும் மின்சாரமாகும். எனினும், தமிழக அரசு இந்த மின்சாரத்தை உற்பத்தி செய்வதைத் தட்டிக் கழித்து வருகிறது.
நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷனும், தமிழ்நாடு மின்சார வாரியமும் இணைந்து தூத்துக்குடியில் 2 X 500 மெகாவாட் மின் உற்பத்தி அலகுகளை நிறுவும் பணியினை 2008 மே மாதத்தில் துவக்கின. முதலாவது அலகு ஜூன் 2013 இலும், இரண்டாவது அலகு மார்ச் 2012 இலும் உற்பத்தியைத் தொடங்கியிருக்க வேண்டும். இந்தத் திட்டத்திலிருந்து தமிழகத்திற்கு சுமார் 387 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும். ஆனால், இந்தப் பணியும் நிறைவேற்றப்படாமல் காலம் கடத்தப்பட்டு வருகிறது.
நெய்வேலியில் உள்ள முதலாவது மின் நிலையத்தின் விரிவாக்கமான 2 X 250 மெகாவாட் மின் உற்பத்தி அலகுகளில் இருந்து தமிழ்நாட்டிற்கு 225 மெகாவாட் கிடைக்க வேண்டும். மத்திய அரசின் கட்டுப்பாட்டில் முடிக்கப்படாமல் இருக்கும் இந்த மின் உற்பத்தி அலகுகளை துரிதமாக முடிக்க வேண்டும் என்ற கோரிக்கையை இன்றுவரை தமிழக அரசு வைக்காமல் இருக்கிறது.
ஆந்திர மாநிலம் சிம்மத்ரி அனல் மின் நிலையத்தின் 1000 மெகாவாட் திறனுள்ள முதல் இரண்டு அலகுகளில் இருந்து தமிழகத்துக்குக் கிடைக்க வேண்டிய 190 மெகாவாட் மின்சாரத்தை (காட்கில் ஃபார்முலா) சட்டத்திற்குப் புறம்பாக மத்திய அரசானது ஆந்திர மாநிலத்திற்கே தாரை வார்த்திருக்கிறது. எனினும் இந்த 190 மெகாவாட் மின்சாரத்திற்கான தனது உரிமையை தமிழக அரசானது மத்திய அரசிடமிருந்து கேட்டுப் பெற இன்றளவும் முயற்சி செய்யவில்லை.
ஆக, தமிழக அரசின் எதிர்மறை நடைமுறை காரணமாக, இன்று நாம் கிட்டத்தட்ட 2025 மெகாவாட் (1835 + சிம்மத்ரி 190) மின்சாரத்தை இழந்து நிற்கிறோம்.
இந்தத் திட்டங்களை சரியாக கையாண்டாலேயே இன்றைய பற்றாக்குறையான 4000 மெகாவாட்டில் பாதியை சரிசெய்துவிட முடியும். என்றாலும்கூட, இதற்கான நடவடிக்கைகளை எடுக்காமல் பிரச்சினையை முற்றவிட்டு, தமிழக மக்களைக் கடும் துயரில் ஆழ்த்தி அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.
தனக்கு சொந்தமான மின் நிலையங்களில் இருந்து குறைந்த விலையில் உற்பத்தி செய்ய முடிகின்ற மின்சாரத்தை உற்பத்தி செய்யாமல், கூடுதல் விலையில் தனியாரால் விற்கப்படும் மின்சாரத்தை வாங்கினால் ஒழிய தமிழகத்தின் மின்சாரப் பற்றாக்குறையைத் தீர்க்க இயலாது என்ற வாதத்தை அது முன்வைத்து வருகிறது.

இராஜகிரியார் said...
This comment has been removed by the author.
suvanappiriyan said...

சகோ ராஜகிரியார்!

//தமிழக மின்சாரப் பிரச்சினைக்கான உண்மைக் காரணமும், அதற்கான தீர்வும்//

உபயோகமான தகவலைப் பகிர்ந்தமைக்கு நன்றி!

Nasar said...

// அமெரிக்காவில் திரி மைல் தீவு, ரஷ்யாவில் செர்நோபிள் நிலையம், ஜப்பானில் புகுஷிமா அணுமின் உலைகள் மட்டுமே சற்று பாதுகாப்பற்றவையாக கருதப்படுகின்றன.//

அதாவது விபத்து நடக்காதவரை பாதுகாப்பானது ...விபத்து நடந்துவிட்டால்
பாதுகாப்பற்றவை அப்படித்தானே..!!!சிரிப்பை அடக்கமுடியவில்லை ..
அப்புறம் சவூதி கூட 25 அணுமின் நிலையங்களை கட்டப்போவதாக கேள்வி உண்மையா ?!
// ஆம்...எதில்தான் ஆபத்தில்லை. எதையும் துணிவோடு எதிர் கொள்வோம். வேறு வழியில்லை......//
நீங்க சொன்னா " நோ அப்பில் " அப்புறம் கங்கையை பத்தி ஏன் பாய் கவலைப்படணும்..??!!
கடைசியாக நான் சொல்வது என்னன்னா அணுமின் நிலையத்தால் நமக்கு லாபத்தை விட
நழ்டம் அதிகம்,மக்கள் தொகை அதிகமுள்ள நம் நாட்டில் அணு உலை விபத்து ஏற்பட்டால்
ஊயிர் இழப்பு மிக அதிகமாக இருக்கும் உ.தா.போபால் 'யூனியன் கார்பைட்" விபத்து ...
அதிக பிரயோஜனம் இல்லாத நமீபியா " கலஹரி " பாலைவனத்தை படுசுத்தமாக
பராமரிக்கும் அந்த நாடு எங்கே..பிரயோசனமுள்ள கங்கையை " கலீஜ் " ஆக்கி வைத்த எங்கே..வெட்ககேடு .........
6650 கி.மீ நிளம் 10 நாடுகளில் வளையவரும் " நைல் நதி " சுத்தம் பாரீர் ...
2507 கி.மீ நிளம் பெரும்பகுதி இந்தியாவிலும் முடிவில் கொஞ்சமாக "பத்மா ' என்றபெயரில் பங்களாதேஷிலும் வளையவரும் புனித நதி [?!] கங்காவின் "கலீஜ் " பாரீர் ..
இதுதான் இந்தியா
கங்காவில் ஒரு முக்கு போட்டால் பாவம் தீருதோ இல்லையோ ஆனா சரும வியாதிகள் நிச்சயமாக வரும் புற்று உட்பட [யப்பா இத நா சொல்லல கவருமெண்டு ரிப்போர்ட் சொல்லுது]

suvanappiriyan said...

சகோ நாசர்!

//நீங்க சொன்னா " நோ அப்பில் //"

அணு உலையை நான் ஆதரிக்க வில்லை. கட்டி விட்டார்கள். இப்பொழுது வேறு வழி என்ன? இடித்து தரை மட்டமாக்க வேண்டியது. அல்லது உச்சகட்ட பாதுகாப்போடு செயல்படுத்த வேண்டியது. இந்த இரண்டு நிலையில் ஒன்றைத்தான் நாம் எடுக்க முடியும்.

//கங்காவில் ஒரு முக்கு போட்டால் பாவம் தீருதோ இல்லையோ ஆனா சரும வியாதிகள் நிச்சயமாக வரும் புற்று உட்பட [யப்பா இத நா சொல்லல கவருமெண்டு ரிப்போர்ட் சொல்லுது] //

நானும் அவ்வாறு சொல்லவில்லை. அரசு அறிக்கைதான் கூறுகிறது. :-)

துரைடேனியல் said...

பயமாகவும் இருக்கிறது. ஆனால் மின்சாரமும் தேவையாக இருக்கிறது. என்னதான் செய்ய? நீங்கள் சொல்வது போல் தைரியமாய் பிரச்சினையை எதிர்கொள்ள வேண்டியதுதான்.

Unknown said...

கிழியும் சார்வாகனின் இஸ்லாமிய அறிவு :

சார்வாகன் சொல்கிறார்,

****வணக்கம் நண்பர்களே,
ஒரு மூமின் ஆண் யார் யார் முன்னால் நிர்வாணமாக இருக்கலாம் என்வும் அல்லாஹ் குரானில் கூறுகிறான் .அது பற்றியும் அறிவோம்
//24:58. ஈமான் கொண்டவர்களே! உங்கள் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர் (அடிமை)களும், உங்களிலுள்ள பருவம் அடையாச் சிறுவர்களும் (உங்கள் முன் வர நினைத்தால்) மூன்று நேரங்களில் உங்களிடம் அனுமதி கோர வேண்டும்; ஃபஜ்ரு தொழுகைக்கு முன்னரும், நீங்கள் (மேல் மிச்சமான உங்கள் உடைகளைக் களைந்திருக்கும் “ளுஹர்” நேரத்திலும், இஷாத் தொழுகைக்குப் பின்னரும்-ஆக இம்மூன்று நேரங்களும் உங்களுக்காக (அமையப் பெற்றுள்ள) மூன்று அந்தரங்க வேளைகளாகும் - இவற்றைத் தவிர (மற்ற நேரங்களில் மேல்கூறிய அடிமைகளும், குழந்தைகளும் அனுமதியின்றியே உங்கள் முன் வருவது) உங்கள் மீதும் அவர்கள் மீதும் குற்றமில்லை; இவர்கள் அடிக்கடி உங்களிடமும் உங்களில் ஒருவர் மற்றவரிடம் வரவேண்டியவர்கள் என்பதினால்; இவ்வாறு, அல்லாஹ் தன் வசனங்களை உங்களுக்கு விவரிக்கின்றான்; மேலும் அல்லாஹ் (யாவற்றையும்) நன்கறிந்தவன்; ஞானம் மிக்கவன்.//*********

இதில் என்ன கூறப்பட்டுள்ளது என்று சாதரணமாக கூறி விடலாம்...

திறந்த வீட்டுல ஏதோ நுழைந்த மாதிரி இன்று பல பேர் வீடுகளில் நுழைவார்கள்..இது வீட்டினுள் இருப்பவர்களுக்கு நிச்சயம் சங்கடத்தை தரும் ..ஏனெனில் அவரவர் வீட்டில் அவரவர்கள் விருப்ப படி ஆண்கள் எனில் பனியனுடனும், பெண்கள் எனில் பர்தா அணியாமலும் இருப்பார்கள்...அடுத்தவர்கள் சொல்லாமல் கொள்ளாமல் நுழைந்தால் யாருக்கு என்றாலும் சங்கடமே ..அது சார்வாகனின் குடும்பத்தார் ஆயினும்...

இதற்கு தான் அல்லாஹ் குறிப்பிட்ட நேரங்களை தடை விதிக்கிறான்...காலையில் தன்னை மறந்து உறங்கி கொண்டிருக்க கூடிய நேரத்திலும் ,உண்டுவிட்டு ஓய்வு எடுக்க கூடிய மதிய நேரத்திலும்..உறங்க செல்லும் நேரத்திலும்..நமக்கு உரிமையானவர்கள் ஆனாலும் அனுமதி கேட்கவேண்டும் என்கிறான்...மற்ற நேரங்களில் அனுமதி கேட்க வேண்டிய தேவை இல்லை...

இது எவ்வளவு அழகான ஒரு சட்டம்...உறவநினர்களே ஆனாலும் அனுமதி கேட்டு உள்ளே வர வேண்டும் என்கிற அருமையான வழிமுறையில் ...

இதில் எங்கு ஒரு மூமின் ஆண் யார் யார் முன்னால் நிர்வாணமாக இருக்கலாம் என்று வருகிறது...

சார்வாகன் உங்கள் சிந்தனை சிறக்கட்டும்....

இன்னும் கிழியும் சார்வாகனின் இஸ்லாமிய அறிவு....இன்ஷா அல்லாஹ்.....

நன்றியுடன்
நாகூர் மீரான்

***********************************

suvanappiriyan said...

திரு துரை டேனியல்!

//பயமாகவும் இருக்கிறது. ஆனால் மின்சாரமும் தேவையாக இருக்கிறது. என்னதான் செய்ய? நீங்கள் சொல்வது போல் தைரியமாய் பிரச்சினையை எதிர்கொள்ள வேண்டியதுதான்.//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

Unknown said...

கிழியும் சார்வாகனின் இஸ்லாமிய அறிவு : 2

சார்வாகன் சொல்கிறார்,

****//மூமின் பெண் யார் முன்னால் ஃபர்தா இல்லாமல் இருக்க்லாம்?

24:31. இன்னும்; முஃமினான பெண்களுக்கும் நீர் கூறுவீராக: அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும்; தங்கள் அலங்காரத்தை அதினின்று (சாதாரணமாக வெளியில்) தெரியக் கூடியதைத் தவிர (வேறு எதையும்) வெளிக் காட்டலாகாது; இன்னும் தங்கள் முன்றானைகளால் அவர்கள் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும்; மேலும், (முஃமினான பெண்கள்) தம் கணவர்கள், அல்லது தம் தந்தையர்கள், அல்லது தம் கணவர்களின் தந்தையர்கள் அல்லது தம் புதல்வர்கள் அல்லது தம் கணவர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரர்கள் அல்லது தம் சகோதரர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரிகளின் புதல்வர்கள், அல்லது தங்கள் பெண்கள், அல்லது தம் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்கள், அல்லது ஆடவர்களில் தம்மை அண்டி வாழும் (பெண்களை விரும்ப முடியாத அளவு வயதானவர்கள்) பெண்களின் மறைவான அங்கங்களைப் பற்றி அறிந்து கொள்ளாத சிறுவர்கள் ஆகிய இவர்களைத் தவிர, (வேறு ஆண்களுக்குத்) தங்களுடைய அலங்காரத்தை வெளிப்படுத்தக் கூடாது; மேலும், தாங்கள் மறைத்து வைக்கும் அலங்காரத்திலிருந்து வெளிப்படுமாறு தங்கள் கால்களை (பூமியில்) தட்டி நடக்க வேண்டாம்; மேலும், முஃமின்களே! (இதில் உங்களிடம் ஏதேனும் தவறு நேரிட்டிருப்பின்,) நீங்கள் தவ்பா செய்து (பிழை பொறுக்கத் தேடி), நீங்கள் வெற்றி பெறும் பொருட்டு, நீங்கள் அனைவரும் அல்லாஹ்வின் பக்கம் திரும்புங்கள்.//**********

மேற்கூறிய வசனத்தை கவனமாக படித்தால் இது அலங்காரம் பற்றிய வசனம் என்பதும் , சார்வாகன் கூறுவதை போல் பர்தா பற்றிய வசனம் அல்ல என்பதும் புரியும்...

இந்த வசனத்தில் ஜீனத் என்ற சொல் பயன்படுத்த பட்டுள்ளது..ஜீனத் என்றால் அலங்காரத்தையே குறிக்கும்... அலங்காரம் என்பது உடல் உறுப்புகள் அல்லாத உபரியான ஆபரணம் ,பூ ,மேக்கப் போன்றவை...

தன்னுடைய உபரியான அலங்காரதையே யார் யார் முன்னிலையில் வெளிபடுத்தலாம் ..என்று தான் இந்த வசனம் ஒரு பட்டியல் தருகிறது

//தங்கள் அலங்காரத்தை அதினின்று (சாதாரணமாக வெளியில்) தெரியக் கூடியதைத் தவிர (வேறு எதையும்) வெளிக் காட்டலாகாது;//

உதாரணதுக்கு கழுத்தில் போடுகிற தங்க மாலை ஒரு அலங்காரம் ....கைகளில் போடுகிற மோதிரமும் அலங்காரம்...அனால் கழுத்தில் உள்ளதை மறைக்கலாம் .விரலில் போடுவதை மறைக்க தேவை இல்லை என்கிறது இவ்வசனம்...

பர்தா என்பது அலங்காரம் அல்ல ...அது சட்டம்...

பர்தாவுக்கும் அலங்காரத்திற்கும் வித்தியாசம் தெரியாத சார்வாகனின் சிந்தனையை அவர்களின் சகாகளே பாராட்ட தகுதி பெற்றவர்கள்...

சிறக்கட்டும் சார்வாகனின் சிந்தனைகள்....

இன்னும் கிழியும் சார்வாகனின் இஸ்லாமிய அறிவு....இன்ஷா அல்லாஹ்.....

நன்றியுடன்
நாகூர் மீரான்

***********************************

suvanappiriyan said...

சகோ நாகூர் மீரான்!

//இதில் எங்கு ஒரு மூமின் ஆண் யார் யார் முன்னால் நிர்வாணமாக இருக்கலாம் என்று வருகிறது...//

முகமது நபியே வாழ்ந்ததற்கு ஆதாரம் இல்லை என்று காமெடி பண்ணுகிறவரிடம் எதை விளக்க முடியும் நாம்? இருந்தாலும் உங்கள் முயற்சி வெற்றியடைய வாழ்த்துக்கள்.

Unknown said...

மீண்டும்.. மீண்டும் குட்டு வாங்கும் சார்வாகன் :

சார்வாகன் சொல்லுகிறார்...

****மூமின்கள் வெட்டி ஒட்டி பொருள் சொல்வார்கள் என்பதை மீரான் அழகிய முறையில் நிரூபிக்கிறார்.என்ன சொல்ல வருகிறார். 24. 30&31 தான் பெண்கள் உடலை மூட சொல்லும் வசனம். *****

இங்கு மீண்டும் தன்னுடைய தவறான வாதத்தையே முன் வைக்கிறார்...

இவரு தெரிஞ்சி பேசுறாரா ?? இல்ல தெரியாம பேசுராரானே தெரியல....தெரிஞ்சிக்கலாம் அப்டினும் பேசுற மாதிரிம் தெரியல...இதுக்கு ஒரு முற்று புள்ளி வைக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்...

24:30&31 இந்த இரு வசனங்களை சேர்த்து படித்தோம் என்றால் அல்லாஹ் ஒழுக்ககேடு போன்ற தவறான செயலுக்கு எப்படி தடை போடுகிறான் என்று தெரியும்...

24:30.(நபியே!) முஃமின்களான ஆடவர்களுக்கு நீர் கூறுவீராக் அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும்; அது அவர்களுக்கு மிகப் பரிசத்தமானதாகும்; நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவற்றை நன்கு தெரிந்தவன்.

24:31.இன்னும்; முஃமினான பெண்களுக்கும் நீர் கூறுவீராக் அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும்; தங்கள் அழகலங்காரத்தை அதினின்று (சாதாரணமாக வெளியில்) தெரியக் கூடியதைத் தவிர (வேறு எதையும்) வெளிக் காட்டலாகாது; இன்னும் தங்கள் முன்றானைகளால் அவர்கள் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும்; மேலும், (முஃமினான பெண்கள்) தம் கணவர்கள், அல்லது தம் தந்தையர்கள், அல்லது தம் கணவர்களின் தந்தையர்கள் அல்லது தம் புதல்வர்கள் அல்லது தம் கணவர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரர்கள் அல்லது தம் சகோதரர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரிகளின் புதல்வர்கள், அல்லது தங்கள் பெண்கள், அல்லது தம் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்கள், அல்லது ஆடவர்களில் தம்மை அண்டி வாழும் (பெண்களை விரும்ப முடியாத அளவு வயதானவர்கள்) பெண்களின் மறைவான அங்கங்களைப் பற்றி அறிந்து கொள்ளாத சிறுவர்கள் ஆகிய இவர்களைத் தவிர, (வேறு ஆண்களுக்குத்) தங்களுடைய அழகலங்காரத்தை வெளிப்படுத்தக் கூடாது; மேலும், தாங்கள் மறைத்து வைக்கும் அழகலங்காரத்திலிருந்து வெளிப்படுமாறு தங்கள் கால்களை (பூமியில்) தட்டி நடக்க வேண்டாம்; மேலும், முஃமின்களே! (இதில் உங்களிடம் ஏதேனும் தவறு நேரிட்டிருப்பின்,) நீங்கள் தவ்பா செய்து (பிழை பொறுக்கத் தேடி), நீங்கள் வெற்றி பெறும் பொருட்டு, நீங்கள் அனைவரும் அல்லாஹ்வின் பக்கம் திரும்புங்கள்.

யாராக இருந்தாலும் விபசாரத்திற்கு முதல் செயல் பார்வை..அதையே அல்லாஹ் முதலில் இரு வசனங்களிலும் ஆணுக்கும் பெண்ணுக்கும் தடை செய்கிறான்...பின்பு விபச்சாரத்தின் இறுதி, வெட்க தலம் மூலமாக செய்வது...இவை இரண்டும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொதுவானது என்பதால் இரண்டு வசனங்களிலும் தெளிவு படுத்துகிறான்...பின்பு உபரியாக பெண்களுக்கு கவர்ச்சி அலங்காரம் பற்றி அதிகம் கூறுகிறான்...ஏனெனில் கவர்ச்சி அலங்காரம் ஆண்கள் செய்வது இல்லை ...இந்த அலங்காரம் தான் ஆசையை தூண்டக்கூடியதாக இருப்பதால் பெண்களுக்கு அலங்காரம் சம்பந்தமாக ஒழுங்கு படுத்துவதே,வரையறை விதிப்பதே சரியானதும் ஒழுக்க கேட்டை தடுக்க கூடியதும் ஆகும்..கீழ்காணும் வசனங்களை கவனியுங்கள்

//மேலும், தாங்கள் மறைத்து வைக்கும் அழகலங்காரத்திலிருந்து வெளிப்படுமாறு தங்கள் கால்களை (பூமியில்) தட்டி நடக்க வேண்டாம்;//

என்ன ஒரு அருமையான சட்டம்....ஒழுக்ககேட்டை வேரறுக்கும் சட்டம்.

இதை விளங்க தெரியாம மொட்ட தலைக்கும் மொலங்காளுக்கும் முடிச்சி போடுகிறீரே...

இதுக்கு மேலையும் விவரமா விளக்கனும்னா...என்னால முடியல....

உண்மைலே எனக்கு தான் கண்ணை கட்டுகிறது...

இன்ஷா அல்லாஹ்...இன்னும் கிழியும்....

நன்றியுடன்
நாகூர் மீரான்

ராவணன் said...

அண்ணாச்சி...அங்க ஒங்க ஆளுங்க யாராவது வேலை செஞ்சாங்களா?

எதுக்குன்னா...

எங்கயாவது விபத்து என்றால் எனக்கு ஒங்க நெனப்புதான்.

ராவணன் said...

///முகமது நபியே வாழ்ந்ததற்கு ஆதாரம் இல்லை என்று காமெடி பண்ணுகிறவரிடம் எதை விளக்க முடியும் நாம்?////

இவரு யாரு அண்ணாச்சி..?

நம்ம முனியாண்டி கோயில் பூசாரியா அண்ணாச்சி?