Followers

Thursday, February 28, 2013

புதுச்சேரியில் அன்று இருந்த சாதிப் பிரச்னைகள்.

நமது நாட்டில் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர்களைப் பார்த்து சில நண்பர்கள் விமரிசனங்களை வைக்கின்றனர். அவர்கள் கூறுவதாவது 'நமது பாரத நாடு பழம் பெருமை வாய்ந்த கலாசாரத்துக்கு சொந்தமானது. இந்த நாட்டில் அருமையான வாழ்வு திட்டம் இருக்க அரபு நாட்டு வாழ்க்கை முறையை நீங்கள் ஏன் தேர்ந்தெடுத்தீர்கள்?' என்ற கேள்வி பரவலாக வைக்கப்படுகிறது.

எந்த ஒரு மனிதனும் தனது தாய் நாட்டு கலாசாரத்தை விட்டுக் கொடுக்க முனைய மாட்டான். தனது தாய் தந்தையர் எந்த மதத்தை பின் பற்றி வாழ்கிறார்களோ அதிலேயே நிலைத்திருக்கத்தான் கூடியவரை முயற்சிப்பான். ஏனெனில் ஒருவன் தனது தாய் தந்தையர் மதத்தை விட்டு வேறொரு மதத்திற்கு செல்லும் போது மிகப்பெரிய போராட்டத்தை சந்திக்க வேண்டி வரும். பழைய சொந்தங்கள் அனைவராலும் வெறுக்கப்படுவர். அவன் மதம் மாறிய புதிய மதத்திலும் அவனுக்கு பரிச்சயப்பட்ட நபர்கள் அவ்வளவு சுலபமாகக் கிடைத்து விட மாட்டார்கள். தற்போது சில இயக்கங்கள் இதற்காக ஒரு அமைப்பையே தற்போது உருவாக்கி அவர்களின் பிரச்னைகளை ஓரளவு சமாளிக்கின்றனர். ஆனால் ஒரு ஆயிரம் வருடங்களுக்கு முன்பு இது போன்ற அமைப்புகளெல்லாம் இல்லை. அந்த நேரங்களில் மதம் மாறிய பல நபர்கள் மிகுந்த தொல்லைகளுக்கு உள்ளாக்கப்பட்டிருப்பர். இந்த தொல்லைகளை எல்லாம் சகித்துக் கொண்டு ஏன் எங்களின் முன்னோர்கள் இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும்? அதற்கான காரணம் என்ன? என்ற கேள்வி எழுவது இயல்பே!

அன்றைய புதுச்சேரியில் இந்து மதம் எந்த அளவு சாதி வேற்றுமைகளால் சிக்குண்டு இருந்தது என்பதை இந்த கட்டுரை மிகத் தெளிவாக விளக்குகிறது. கத்தியை காட்டி இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளச் செய்தனர் என்று பிரசாரம் செய்து வரும் பலருக்கு இந்த கட்டுரையை ஊன்றி படிக்க கேட்டுக் கொள்கிறேன்.

-----------------------------------------

புதுச்சேரி வாழ்சாதிகள்

1778ஆம் ஆண்டு துவங்கி 1792ஆம் ஆண்டு வரையிலான வீராநாயக்கரின் நாட்குறிப்பு புதுச் சேரி வாழ் சாதிகளை அறியப் பெரிதும் உதவுகிறது. மேலும் சாதிகளுக்கிடையே உள்ள தொடர்பு, முரண்பாடுகள் போன்ற செய்திகளும் இடம்பெறு கின்றன. சாதிகளுக்குள் ஏற்பட்ட உட்பூசல்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன. வெள்ளாளர், கோமுட்டி, கைகோளர், செட்டி, கருமர், அகம்படையர், முதலி, நாயக்கர், சாடர், பிள்ளை, கவரை, சக்கிலி, இடையர், மேளக்காரர், காசுக்காரர், பவளக்காரர் எனப் பல சாதிகளைப்பற்றிய பதிவுகள் இந்நாட்குறிப்பில் உள்ளன.

இச்சாதிகள் வலங்கை சாதி, இடங்கை சாதி எனவும் பிரிக்கப்பட்டிருந்தன. பொதுவாக வலங்கை சாதியினர் இடங்கை சாதியினரைத் தமக்குக் கீழ்ப் பட்டவர்களாகவே கருதினர். சில நேரங்களில் வலங்கை சாதியினர் பெறும் உரிமைகளை இடங் கையினர் கோரும்போது முரண்பாடுகளும் சச்சரவுகளும் ஏற்படுகின்றன.

நாட்குறிப்பின்படி மேளக்காரர், செட்டி, கம்மாளர், கருமர், சக்கிலி போன்றவர்கள் இடங்கை சாதியினர் என்றும் பிள்ளை, கவரை, கோமுட்டி, கைகோளர், முதலி, அகம்படையர் போன்றவர்கள் வலங்கை சாதியினர் என்றும் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

மேலும் வீராநாயக்கர் மார்ச் மாதம் 2-ஆம் தேதி 1785ஆம் ஆண்டு நாட்குறிப்பில் வலங்கை, இடங்கை சச்சரவைத் தீர்க்கும்படியான பொறுப்பு ஆனந்தரங்கம் பிள்ளையின் தம்பிமகனான ரங்கப்ப திருவேங்கடம் பிள்ளையிடம் கொடுக்கப்பட்டதாகப் பதிவுசெய்கிறார்.

சாதிகளின் நடமாட்ட உரிமையும், மறுப்பும்

பிரெஞ்சுக்காரர்களின் ஆட்சியில் புதுச்சேரி அழகும், பொலிவும் பெற்றது எனலாம். பிரெஞ்சு நாட்டில் உள்ளது போன்ற நேரான, சரியாகப் பராமரிக்கப்பட்ட சாலைகள் இருந்தன. ஆயினும், சென்னையிலிருந்து புதுச்சேரிக்கு வரும் சாலை, சாவடித்தெரு, இன்னும் சில தெருக்கள் மட்டுமே பொதுவழிகளாகக் கருதப்பட்டன. மற்ற அனைத்துத் தெருக்களும் சாதியின் பெயரைக்கொண்டு வழங்கப் பட்டன. உதாரணமாக, வெள்ளாளத்தெரு, பிராமணத் தெரு, பள்ளத்தெரு, செட்டித்தெரு, யாதவர் தெரு, கோமுட்டித்தெரு, முதலித்தெரு, கைகோளர் தெரு போன்றவற்றைக் கூறலாம். பெரும்பாலும் மக்கள் அவரவர் சாதியின் தெருக்களிலேயே குடியிருந்தனர்.

ஒரு சாதியினரின் தெருவுக்குள் மற்ற சாதியினர் செல்லும்போது சச்சரவுகள் ஏற்பட்டுள்ளன. குடை யுடன் செல்லும்போதும், திருமண ஊர்வலங்கள் செல்லும்போதும் மற்ற சாதியினரை மதிக்காததாகக் கருதப்பட்டது.

1785ஆம் ஆண்டு டிசம்பர் 12ஆம் தேதி நாட் குறிப்பின்படி வரதராச பெருமாள் கோயில் தேர் இடங்கை சாதியினர் தெருவுக்குள் செல்லக் கூடாது என வலங்கை சாதியினர் பெரும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர். இதனால் இடங்கை, வலங்கை சாதிகளுக்கிடையே மோதல் ஏற்பட்டது. இப்பிரச்சினை கவர்னர் செனரல் கோசிஜினிடம் கொண்டு செல்லப் பட்டது. இப்பிரச்சினை பெரிதானதால் கவர்னர் ஊர்வலத்தை நிறுத்தும்படி உத்தரவிட்டார்.

1789ஆம் ஆண்டு பிப்ரவரி 15ஆம் தேதி நாட் குறிப்பில் வலங்கை சாதியினரான யாதவருடைய தெருவில் இடங்கை சாதியினரான திருவம்பல செட்டி மகன் பல்லக்கில் சென்றார். இதற்கு வலங்கை சாதியினர் பெரும் எதிர்ப்பைத் தெரிவித்தனர்.

வலங்கை சாதியினர் இடங்கை சாதியினரின் தெருவுக்குள் செல்லும்போது அதிகமான சச்சரவு ஏற்படவில்லை. இவ்வாறு குடிகள் சாதியின் பெயரால் நடமாட்ட உரிமையை இழந்திருந்தனர்.

பல்லக்கு உபயோகம்

பதினெட்டாம் நூற்றாண்டில் வாகனப் போக்கு வரத்து மிகவும் குறைவாகக் காணப்பட்டது. பெரும் பாலான பொதுமக்கள் நடந்தே தங்கள் பயணத்தை மேற்கொண்டனர். சிலர் பல்லக்கு, குதிரை, மாட்டு வண்டி போன்றவற்றையும் பயன்படுத்தினர்.

இந்நாட்குறிப்புகள் சில, பல்லக்கு உபயோ கத்தைப் பதிவுசெய்கின்றன. 1785ஆம் ஆண்டு மே 14ஆம் தேதி இடங்கை சாதியைச் சேர்ந்த தேவரா செட்டி என்பவர் திருமண ஊர்வலத்தில் பல்லக்கு உபயோகித்தார். இதனை வலங்கை சாதியினர் கடுமையாக எதிர்த்தனர். கவர்னர் கோட்டேனஸ் இப்பிரச்சினையை விசாரிக்கையில், பல்லக்கு உபயோகிப்பது தங்களது உரிமை என்றும் இதனை இடங்கையர் உபயோகிக்கக்கூடாது என்றும் பிரச்சினை செய்தனர். இறுதிவரை சுமூக தீர்வு ஏற்படாத காரணத்தால், கவர்னர் அனைத்துப் பல்லக்கு ஊர்வலத்தையும் நிறுத்த உத்தரவிட்டார்.

பின்பு 1791ஆம் ஆண்டு ஜூலை 8ஆம் தேதி வலங்கை சாதியினரான முத்துவிஜய திருவேங்கிடம் பிள்ளையின் மகன் திருமண ஊர்வலம் பதிவு செய்யப் பட்டுள்ளது. திருமணம் வெகு விமரிசையாக பச்சைப் பல்லக்கில் யானையின் மேல் அமர்ந்து சகல தெருக் களிலும் ஊர்வலம் கொண்டு செல்லப்பட்டது. ஒரு சச்சரவும் இன்றி ஊர்வலம் நடந்ததாக நாட்குறிப்பு கூறுகிறது. இது வலங்கையாருக்குக் கொடுக்கப் பட்ட உரிமை இடங்கையாருக்கு மறுக்கப்பட்டதைத் தெரிவிக்கிறது.

வெள்ளைக் குடை சச்சரவு

நாட்குறிப்பு வெள்ளைக்கொடி, குடை, உப யோகத்தில் வலங்கை, இடங்கையாருக்கிடையே சச்சரவு ஏற்பட்டதைப் பதிவு செய்துள்ளது. 1788 ஜனவரி 14 ஆம் தேதி நாட்குறிப்பில் இடங்கை சாதி யினரான பொன்னப்ப செட்டியின் மகன் ஒரு பட்டுக்குடையும், அழகிய மணவாள செட்டி மகன் ஒரு குடையும் பிடித்துக்கொண்டு வலங்கை சாதி யினர் தெருவில் சென்றனர். இதைப் பார்த்த மகா நாட்டார்கள் மிகவும் கோபம் கொண்டனர். மறு நாள் 30 வலங்கையார் கவர்னர் செனரல் கனுவே யிடம் முறையிட்டனர். இதன்படி கனுவே இரு வரையும் சிறையிலடைத்தார்.

மற்றொரு சமயம் வலங்கையினரான சுப்புராய பிள்ளை என்பவர் குடைபிடித்துக்கொண்டு செட்டித் தெருவுக்குள் சென்றார். அப்போது செட்டிகள் செனரலிடம் முறையிட, அவர் விசாரித்தார். சுப்புராய பிள்ளை செனரலிடம் தன் தவறுக்கு மன்னிப்பு கேட்டவுடன் மன்னிக்கப்பட்டுக் கூட்டம் கலைக்கப்பட்டது. இவ்வாறு குடை உபயோகத்தில் சச்சரவு ஏற்பட்டுள்ளது.

நகரா

நகரா என்பது பெருமுரசு வகைகளுள் ஒன்று. இந்த வாத்தியம் தற்போதும் சில இந்துக் கோயில் களிலும் இஸ்லாமியப் பள்ளிகளிலும் காணப்படுகிறது. இதன் ஓசை இனியதாக இல்லாவிட்டாலும், ஒலி அதிக தூரம் வரை செல்கிறது. இதனால் நகரா செய்தி அறிவிக்கும் கருவியாகச் செயல்பட்டது.

1785ஆம் ஆண்டு ஜூலை 29ஆம் தேதி நாட் குறிப்பில் நகரா வாத்தியத்தைப் பற்றிய செய்தி உள்ளது. வலங்கை, இடங்கை சாதியினருக்குத் தனித்தனியே கோயில்கள் உள்ளன. இதில் இடங்கை சாதியினர் கோவிலில் நகரா முழங்கும் சப்தம் கேட்டதும் வலங்கை சாதியினர் திரண்டு வந்து தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர். ‘நகரா வாத்தியத்தை இயக்கும் உரிமை வலங்கை சாதி யினராகிய எங்களுக்கு மட்டும்!’ என சச்சரவு செய்தனர். செனரல் சுலியாக் இப்பிரச்சினையை விசாரிக்கையில் எந்தவொரு தீர்வும் ஏற்படாததால், நகரா வாசிக்க இருதரப்பினர்களின் கோவில்களிலும் தடைசெய்தார்.

சாதித்தலைவர்

நாட்குறிப்பின் வாயிலாக ஒவ்வொரு சாதிக்கும் சாதித்தலைவர் இருந்ததை அறியமுடிகிறது. இவர்களில் இடங்கை சாதித்தலைவர் நாட்டார் எனவும், வலங்கை சாதித்தலைவர் மகாநாட்டார் எனவும் அழைக்கப்பட்டனர். புதுச்சேரியில் பதினெட்டு மகாநாட்டாரும் பல நாட்டாரும் இருந்ததாகச் செய்திகள் உள்ளன. அந்தந்தச் சாதி மக்கள் இணைந்து தங்கள் தலைவர்களைத் தேர்வு செய்தனர். தலைமை துபாசி இவர்களைப் பதவியில் அமர்த்துவார்.

தங்களது சாதிக்குள் ஏற்படும் சச்சரவுகளை சாதித்தலைவர் தீர்த்துவைப்பார். வரிவசூல் செய்து கம்பெனியாருக்கு அளிப்பது போன்ற பணிகளையும் இவர்கள் செய்துவந்தனர்.

இவர்கள் தங்களது சாதி உரிமைகளை நிலை நாட்டுவதில் பெரும் கவனம் கொண்டிருந்தனர். வலங்கையராகிய மகாநாட்டார்கள் வெள்ளைக் கொடி, குடை உபயோகித்தல், நகரா வாசித்தல், ஊர்வலங்கள் செல்லுதல் போன்றவற்றில் தங்களது சாதியப் பெருமையை நிலைநாட்டுவதில் பெரும் பங்கு வகித்தனர்.

1785ஆம் ஆண்டு மார்ச் 21ஆம் தேதி நாட் குறிப்பில் கவர்னர் குத்தான்சோ மற்றும் மகா நாட்டார்களுக்கிடையிலான சந்திப்பு பதிவு செய்யப் பட்டுள்ளது. மகாநாட்டார்கள் பரிசுகொடுத்து கவர்னரை வாழ்த்தி மகிழ்வித்த செய்தியும் இடம்பெற்றுள்ளது.

1791 ஆகஸ்டு 23ஆம் தேதி கடைவீதிகளில் கடையடைப்பு நடந்தது. இதற்கான காரணத்தை உடனே அறிந்து பதிலளிக்குமாறு சாதித் தலைவர்கள் உத்தரவிடப்பட்டனர்.

1791 டிசம்பர் 1ஆம் தேதி நாட்குறிப்பில் மேயர் சவாரியேர் சாதித்தலைவர்களை முனிசிபலிலே கூடிவரச் செய்தனர். புதுச்சேரி மக்களின் பொது நலனுக்காக பிரெஞ்சு அரசு ரூ.16,000 செலவு செய்த தாகவும், அதனால் இதில் பாதிச் செலவுப் பணத்தைப் புதுச்சேரி மக்களிடம் வசூலித்துத் தரும்படியாகவும் உத்தரவிடப்பட்டனர். இவ்வாறு மக்களின் அனைத்து நடவடிக்கைகளிலும் சாதித்தலைவர்கள் பங்கு பெற்றனர்.

குழுநியமனம்

வீராநாயக்கர் நாட்குறிப்பில் 1787 ஆம் ஆண்டு டிசம்பர் 14 தேதியில் அரசால் நியமிக்கப்பட்ட குழுவைப்பற்றிய செய்தி உள்ளது. இதில் சிவில் நீதிமன்றத் தலைவர், தமிழ்ச் சாதிய முறை ஐரோப்பியர் களுக்கு விளங்காத காரணத்தால் எட்டு பேர் கொண்ட குழுவை நியமித்தார். இக்குழுவில் தமிழரும், தமிழ்க் கிறிஸ்தவர்களும் இருந்ததாகப் பதிவு உள்ளது. சாதிய முறை, சாதியக் கட்டமைப்பு, சாதிகளின் பாரம்பரிய உரிமைகள் ஆகியவற்றைப் பற்றிய அறிக்கையினைக் கொடுக்கும்படியாகச் செய்தி உள்ளது.

இவை பிரஞ்சுக்காரர்கள் சாதிய வேறுபாடு களைக் களைய முயலாமல் சாதிகளின் முன்பிருந்த வழக்கப்படி செயல்பட நிலைப்பட்டனர் என்பது தெளிவாகிறது.

தேவரடியார்கள்

தேவராயர் என்றால் இறைப்பணிக்காகத் தங்களை அர்ப்பணித்தவர் எனப்படும். கோவிலில் நடனமாடுவது, விளக்கு ஏற்றுவது, பாடல்கள் பாடுவது என இருந்தனர். பின் நாட்களில் இவர்களின் செல்வாக்கு குறைய வீட்டு விழாக்கள், பண்டிகை நாட்கள், பிரஞ்சுக்காரர்களை வரவேற்று ஆடுவது, பாடுவது, கலை நிகழ்ச்சிகள் நிகழ்த்துவது இவர்கள் வழக்கமானது.

நாட்குறிப்பில் இவர்களைப் பற்றிய பதிவுகள் அதிகம் உள்ளன. வலங்கை இடங்கை என்னும் சாதிப்பிரிவு தேவரடியார்கள் மத்தியிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

1788 ஜூலை 16 ஆம் தேதி நாட்குறிப்பில் வலங்கையிடங்கை தாசிகளுக்கிடையேயான சச்சரவு பதிவு செய்யப்பட்டுள்ளது. ராசப்பஐயரின் மகள் திருமண வரவேற்பு மேளதாளங்கள், வண்ண விளக்குகள், தாசிகளின் நடன நிகழ்ச்சிகளுடன் வெகு சிறப்பாக நடந்தது. செனரல் கனுவேயும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அப்போது இடங்கை சாதிப் பிரிவைச் சேர்ந்த ஒரு தாசி மகுடி வாசித்துக் கொண்டு சற்று நேரம் ஒரு பாம்பை ஆட்டிக் கொண்டு மறுபடி தன் கழுத்தில் பாம்பைச் சுற்றிக்கொண்டு நாட்டியம் செய்தாள். இது அனை வரும் பாராட்டும்படியாக இருந்தது. இது வலங்கை தாசிகளிடையே கோபத்தை ஏற்படுத்தியது. அவர்கள் உடனே கிளம்பிச் சென்று விட்டனர். பின் நிகழ்ச்சி நடத்துவோர் அனைவரும் இடங்கை தாசிகளை அனுப்பிவிட்டு வலங்கை தாசிகளை அழைத்து நாட்டியம் ஆடச் சொன்னார்கள். இவ்வாறு இடங்கை, வலங்கை சாதிப் பிரிவு தேவரடியார் மத்தியிலும் இருந்தது தெளிவாகிறது.

இவ்வாறு, பதினெட்டாம் நூற்றாண்டின் ஒரு முக்கிய ஆதாரமான இரண்டாம் வீராநாயக்கர் நாட்குறிப்பு சாதியைக் குறித்த பல தகவல்களைத் தெரிவிக்கிறது. புதுச்சேரி வாழ்சாதிகள், வலங்கை, இடங்கை சாதிகள், சாதிகளுக்கிடையேயான சச்சரவுகள், சாதித்தலைவர்கள் மற்றும் அவர்களின் பணிகள், சாதியின் பெயரில் தெருக்கள், தாசி களிடையே சாதிய உணர்வு, சாதிகளுக்காக உரிமைகள் மற்றும் தடைகள் போன்றவற்றை அறிய முடிகிறது. இவ்வாறு இரண்டாம் வீராநாயக்கர் நாட்குறிப்பு ஒரு சிறந்த முதல்நிலை ஆதாரமாகச் செயல்படுகிறது.

இரண்டாம் வீராநாயக்கர் நாட்குறிப்பை முன்வைத்து...
பா.ரூத்மெர்சி ஹெலினா
நன்றி:கீற்று

Sunday, February 24, 2013

இந்தியன் முஜாஹிதீன் அமைப்பு யாருடையது? கட்ஜூ



எங்கு பாம் வெடித்தாலும் உடன் 'இந்தியன் முஜாஹிதீன்' என்ற அமைப்பிடமிருந்து தகவல் வந்ததாக நமது காவல் துறையும், புலனாய்வு அமைப்புகளும், இந்துத்வாக்களும் செய்திகளை கசிய விடுவர். 'இந்தியன் முஜாஹிதீன்' என்ற அமைப்பை உருவாக்கியது யார் என்பதை நீதிபதி கட்ஜூ மிக அழகாக விளக்குகிறார். பார்த்து தெளிவு பெறுங்கள்.

--------------------------------------------------------

மும்பை: "பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட குற்றவாளி, 15 வயதுடையவராக இருந்தாலும், அவரை சிறாராக கருதக்கூடாது' என, மகாராஷ்டிரா மாநில அரசு நியமித்த, விசாரணை கமிட்டி பரிந்துரை செய்துள்ளது.

பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோருக்கு எதிராக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, விசாரணை நடத்தி, அறிக்கை தாக்கல் செய்ய, நீதிபதி, சந்திரசேகர் தர்மாதிகாரி கமிட்டியை, மகாராஷ்டிரா அரசு நியமித்தது. விசாரணை நடத்திய கமிட்டி, முதல் இடைக்கால அறிக்கையை, 2010ம் ஆண்டு டிசம்பரிலும், இரண்டாவது அறிக்கையை, 2011, செப்டம்பரிலும் தாக்கல் செய்தது. மூன்றாவது அறிக்கையை, இம்மாதம், 16ம் தேதி தாக்கல் செய்தது.

இந்த அறிக்கையில், பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க, எடுக்க வேண்டிய பல்வேறு நடவடிக்கைகளை சுட்டி காட்டியிருந்தது.இந்நிலையில், மும்பை ஐகோõர்ட்டில், பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுப்பது குறித்து, தொடரப்பட்ட பொது நல மனு மீதான விசாரணையின் போது, மேற்கண்ட கமிட்டியின் பரிந்துரை அறிக்கையின் பிரதி தாக்கல் செய்யப்பட்டது. நீதிபதி சந்திரசேகர் கமிட்டி தன் பரிந்துரையில் கூறியிருப்பதாவது:

பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டவர், 15 வயதுடையவராக இருந்தாலும், அவரை சிறாராக பார்க்க கூடாது. பொதுவாக பெண்களுக்கு எதிரான குற்றங்கள் உருவாவதற்கு, இணைய தளங்களில் வலம் வரும் ஆபாச படங்களும், முறைகேடான உறவுகளை சித்தரிக்கும் காட்சிகளும் காரணம். இவை எளிதாக கிடைப்பதால், இளம் வயதினர் மத்தியில் தவறான எண்ணத்தை தோற்றுவிக்கிறது. இதுவே குற்ற செயல்களுக்கு காரணமாக அமைகிறது.இதை, உடனடியாக தடுக்க வேண்டும். பெண்களுக்கு எதிராக குற்றங்களை செய்து தண்டிக்கப் பட்டவர்கள் பற்றிய விவரங்களை பகிரங்க படுத்த வேண்டும்.

இது போன்ற குற்றங்கள் மீண்டும் நடைபெறாமல் தடுக்கவும், மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், இதை செய்ய வேண்டும். பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டு தண்டிக்கப்பட்டவர்களை , அரசியல் கட்சிகள், தேர்தலில் போட்டியிட டிக்கெட் தரக்கூடாது. பள்ளிகளில், தங்களுக்கு எதிராக நடந்த குற்றங்களை, மாணவியர் புகாராக தெரிவிக்க, குறை தீர்ப்பு மையங்களை அமைக்க வேண்டும்.இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

-தினமலர்
23-02-2013

இதைத்தானே இஸ்லாமும் அன்றே சொன்னது. 18 வயது என்பதை நாமாகவே முடிவெடுத்து கொண்டு இன்று அதனை திருத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். ஒரு மனிதன் அவன் குழந்தை பெறும் பக்குவத்தை அவனது உடல் அடைந்து விட்டாலே அவன் மேஜராகி விடுகிறான் என்பதுதான் இஸ்லாமிய சட்டம். இஸ்லாமிய சட்டம் இந்த காலத்துக்கு ஒத்து வராது என்று ஒரு பக்கம் சொல்லிக் கொண்டே இஸ்லாமிய சட்டங்களை ஒவ்வொன்றாக நமது நாடு அமுல்படுத்தி வருவது ஒரு விந்தை அல்லவா!

மேலும் சமீபத்தில் ஆசிட் வீச்சில் இறந்த அந்த இரண்டு பெண்மணிகளுக்கு பகரமாக சம்பந்தப்பட்ட நபர்களின் முகத்திலும் அதே போல் ஆசிட் வீசி கொல்ல வேண்டும் என்ற கருத்தும் தற்போது பரவலாக வைக்கப்படுகிறது. அதாவது 'கண்ணுக்கு கண்' என்ற இஸ்லாமிய குற்றவியல் சட்டத்தை அமுல்படுத்தச் சொல்லி பலரும் கோரிக்கை வைக்கின்றனர். இதுவும் கூட விந்தையல்லவா! இஸ்லாமிய சட்டங்கள் எக்காலததுக்கும் எல்லா நாட்டு மக்களுக்கு பொருந்தக் கூடியதே என்பது நிரூபணம் ஆகிறது அல்லவா?

Thursday, February 21, 2013

இன வெறி - சிறுகதை

'அம்மா பஸ் வந்துடுச்சு! நான் காலேஜூக்கு போயிட்டு வர்ரேன்'



'நல்லபடியா போய்ட்டு வாப்பா'



காலையிலிருந்து மகனை கல்லூரிக்கு அனுப்புவதற்குள் ஜீனத்துக்கு போதும் போதும் என்றாகி விடுகிறது. சுடு தண்ணீர் வைப்பது. காலை பசியார செய்வது என்று ஏக பிசியாக காலைப் பொழுது சென்று விடும். தனது கணவன் காதருக்கும் சேர்த்து காலை உணவு தயார் பண்ணுவதால் சோர்ந்து விடுகிறார் ஜீனத்.



"வீட்டோடு ஒரு பொண்ணை வேலைக்கு வச்சுக்கோ என்று எத்தனை தடவை சொல்லியிருக்கேன். கேட்க மாட்டேங்கிறீயே"...



மனைவி காலை நேரங்களில் படும் சிரமங்களைப் பார்த்து ஆறுதலாக இந்த வார்த்தைகளை சொன்னார் காதர்.



'"வீட்டு வேலைக்கா..நல்லா இருக்கே...அடுப்படி வேலைகளெல்லாம் நாம தான் பார்க்கணும். இல்லலேண்னா எனக்கு சுத்தப் படாது"


"அப்போ கஷ்டப்படு. எனக்கென்ன' என்று சிரித்துக் கொண்டே தனது அலுவலகத்துக்கு செல்ல இரு சக்கர வாகனத்தை இயக்கினார் காதர்.



காதருக்கு சவுதியிலும், குவைத்திலும், மலேசியாவிலும் அலுவலகங்கள் உள்ளது. அங்கிருந்து நம்மவர்கள் தரும் பொருட்களை உரிய விலாசங்களில் சேர்ப்பிப்பது இவர் நடத்தும் நிறுவனத்தின் முக்கிய வேலைகளில் ஒன்று. ஓரளவு வசதியான வாழ்க்கை. ஒரே மகன் பஷீர் என்று பிரச்னையில்லாமல் வாழ்க்கை ஓடிக் கொண்டிருக்கிறது.



கல்லூரிக்கு சென்ற பஷீர் மாலையில் வகுப்புகள் முடிவுறவே கல்லூரி வாகனத்தை நோக்கி நண்பன் அம்ஜத் தோடு சென்று கொண்டிருந்தான். சிறு வயதிலிருந்தே பஷீரும் அம்ஜத்தும் இணை பிரியாத நண்பர்கள். பள்ளியில் தொடங்கிய நட்பு இன்று கல்லூரி வரை தொடர்கிறது. ஆனால் இருவருக்குமே பல வகையில் ஒத்தே வராது. பஷீர் மென்மையான சுபாவம் உள்ளவன். அம்ஜத்தோ சற்று முரடன். இவனது முரட்டு சுபாவத்தால் பல இடங்களில் பிரச்னைகளும் வந்ததுண்டு. அங்கெல்லாம் பஷீர் சென்று தனது நண்பனுக்காக வாதாடி பிரச்னைகளை தீர்த்து வைப்பான்.



'ஏண்டா..உன் முரட்டு சுபாவத்தை நீ மாத்திக்கவே மாட்டீயா......'



'எனக்கு மட்டும் ஆசையா என்ன? பிறப்போடு வந்த சுபாவத்தை மாத்த முடியுமாடா..'



"சும்மா பொறப்பு, இறப்பு என்று ஏதாவது ரீல் உடாதே... மனிதன் நினைத்தால் தனது சுபாவங்களை மாற்றிக் கொள்ள முடியும. எதிலுமே மனது வைக்க வேண்டும்"


"யப்பா...கருத்து கந்தசாமி. உன்னோட அறுவை வர வர ஜாஸ்தியாகி கிட்டே வருது. கொஞ்சம் நிறுத்தறியா"



'ம்ஊஹூம்...உன்னை திருத்தவே முடியாது'



கல்லூரி வாகனத்தில் அனைவரும் ஏற ஆரம்பித்தனர். பஷீரும் அம்ஜத்தும் அருகருகே அமர்ந்து கொண்டனர்.



முன் சீட்டில் இரண்டு மாணவிகள் அமர்ந்தனர். இது கடைசி பஸ் என்பதால் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாகவே இருந்தது. பஸ்ஸூக்கான கட்டணத்தை கறாராகக் கறந்து விடும் கல்லூரி நிர்வாகம் அதற்குள்ள வசதிகளை மட்டும் செய்து தருவதில்லை. இடப் பற்றாக் குறையால் பல மாணவ மாணவிகளும் நின்று கொண்டே வந்தனர். பேரூந்தும் புறப்பட்டது. பஷீரின் வீடும் அம்ஜத்தின் வீடும் வர எப்படியும் ஒரு மணி நேரமாகும்.



முன் சீட்டில் அமர்ந்திருந்த ஒரு மாணவியின் சடை இவர்கள் பக்கம் விழ சிரித்துக் கொண்டே அம்ஜத் அந்த மாணவியின் முடியைத் தொட்டான்.



'டேய்..என்னடா பண்றே'



"பஷீர்...இதை எல்லாம் கண்டுக்காதே...வாழ்க்கை என்றால் ஜாலியா இருக்கணும்டா' என்று சொல்லிக் கொண்டே சீட்டின் இடைவெளியில் கைகளை விட்டான். அந்த மாணவியோ இவனின் சில்மிஷத்தை தெரிந்து கொண்டு நெளிய ஆரம்பித்தாள். ஒரு முறை கோபமாக திரும்பி 'என்ன?' என்று கேட்டாள். பஷீருக்கோ பயத்தில் முகம் முழுவதும் வேர்வைத் துளிகள் அரும்பத் தொடங்கின. அம்ஜத்தோ எதுவும் நடக்காத மாதிரி சிரித்துக் கொண்டிருந்தான்..



இதற்குள் அம்ஜத்தின் சேட்டைகளால் அந்த மாணவி நெளிவதைப் பார்த்து ஒரு மாணவன் அதே கல்லூரியில் பயிலும் அந்த பெண்ணின் அண்ணன் ராஜாவிடம் விபரத்தை சொன்னான். அந்த மாணவன் சொன்னதைக் கேட்டவுடன் ராஜாவுக்கு கோபம் தலைக்கேறியது. பின் சீட்டிலிருந்து முன்னேறி வந்த ராஜா 'டேய் என்னடா என் தங்கச்சிகிட்டே வம்பு பண்றே' என்று கேட்டான்.



'நான் ஒன்னுமே பண்ணலப்பா...'



'கிண்டலா...ஏய் இவன் ஏதும் வம்பு பண்ணினானா'



அந்த மாணவி ஒரு வித பயத்துடன் 'ஆம்' என்று தலையாட்டினாள். அடுத்த நிமிடம் அம்ஜத்தின் சட்டை காலரை பிடித்தான் ராஜா. அவ்வளவுதான். ராஜாவுக்கு ஆதரவாக ஒரு குரூப்பும் அம்ஜத்துக்கு ஆதரவாக ஒரு குரூப்பும் பேரூந்தில் திரண்டது. நிலைமையை புரிந்து கொண்ட ஓட்டுனர் வண்டியை ஓரமாக்கி நிறுத்தினார். பலரும் அவசர அவசரமாக பஸ்ஸை விட்டு இறங்க ஆரம்பித்தனர். பஷீரும் இறங்கி விட்டான். அதற்குள் இரண்டு கோஷ்டியாக பிரிந்து ஒருவரையொருவர் அடித்துக் கொள்ள ஆரம்பித்தனர். பஷீரும் மற்றும் சில நண்பர்களும் கைகலப்பை நிறுத்த முயற்சித்தனர். ஆனால் பலனில்லை.



அம்ஜத் ஏற்கெனவே பலரிடம் தகராறு உள்ளதால் அதை எல்லாம் இதுதான் சமயம் என்று பல மாணவர்கள் பழி தீர்த்துக் கொண்டனர். நிலைமை விபரீதமாவதை உணர்ந்த அம்ஜத் தன்னைக் காத்துக் கொள்ள இருக்கைக்கு கீழே இருந்த ஒரு இரும்பு கம்பியை எடுத்தான். அம்ஜத்தை பிடிக்க ராஜா முன்னேறவும் கோபம் தாங்காமல் ராஜாவின் வயிற்றில் அந்த இரும்பு கம்பியை சொருகினான். நுனி கூராக இருந்ததால் வயிற்றிலிருந்து ரத்தம் வர ஆரம்பித்தது. ரத்தம் வருவதைப் பார்த்த ராஜா பயத்தில் உடன் மூர்ச்சையானான். மயங்கி விழுந்ததை இறந்து விட்டதாக எண்ணி பயந்த அம்ஜத் பேரூந்திலிருந்து இறங்கி ஓட ஆரம்பித்தான். ராஜாவின் நிலையைப் பார்த்த பஷீர் அவனது வயிற்றில் துணியால் ஒரு கட்டு போட்டு 'அண்ணே வண்டியை சீக்கிரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு போங்க' என்று கூறினான். ஓட்டுனரும் மிக விரைவாக அருகில் இருக்கும் அரசு ஆஸ்பத்திரிக்கு பேரூந்தை கொண்டு சென்றார். மற்ற மாணவர்களும் பஷீரும் சேர்ந்து ராஜாவை தூக்கிக் கொண்டு அவசர பிரிவை நோக்கி ஓடினர்.



அவசர சிகிச்சைப் பிரிவில் ராஜாவை அனுமதித்து விட்டு பஷீர் ராஜாவின் குடும்பத்துக்கு போன் பண்ணி விபரங்களைச் சொன்னான். அங்கிருந்து அழுது கொண்டே ராஜாவின் குடும்பத்தினர் மருத்துவ மனையை நெருங்கினர்.



'"யார் பையனோட பெற்றோர்?"



'?நாங்க தாங்க டாக்டர். பையன் எப்படி இருக்கான் டாக்டர்'



"ரத்தம் அதிகம் வெளியானதால் சற்று நிலை சீரியஸ்தான். நாங்க முயற்சிக்கிறோம்' என்று சொல்லி விட்டு ராஜாவின் பெற்றோர்களிடம் சில பேப்பர்களில் கையெழுத்து வாங்கிக் கொண்டது மருத்துவ நிர்வாகம்.



மற்ற மாணவர்கள் எல்லாம் கல்லூரி வாகனத்தில் அவரவர் வீடுகளுக்கு அனுப்பப் பட்டனர். காவல் துறையினரும் மருத்துவ மனைக்கு வந்து வழக்கு பதிவு செய்து கொண்டனர். பஷீரும் நடந்த விபரங்களை எல்லாம் சொன்னான். சில மாணவர்களும் தங்கள் தரப்பு பிரச்னைகளை சொன்னார்கள். அம்ஜத் மேல் கொலை முயற்சி என்ற பிரிவில் வழக்கு பதிவு செய்து கைது செய்ய புறப்பட்டனர். பஷீரும் ராஜாவின் பெற்றோரிடம் 'பார்த்துக்கோங்க...நான் வீட்டுக்கு போயிட்டு காலையில வருகிறேன்' என்று கிளம்பினான்.



இரவு மணி பத்து



"கடவுள் கிருபையால உங்க பையன் அபாய கட்டத்தை தாண்டி விட்டார். இன்னும் சிறிது நேரம் கழித்து நீங்கள் பையனை பார்க்கலாம்"'



'நன்றி டாக்டர்'



இரவு பதினோரு மணி...



பஷீரின் வீட்டுக் கதவு மெல்லிதாக தட்டப்பட்டது. ஆஸ்பத்திரியிலிருந்து அப்பொழுதுதான் வந்த பஷீர் இந்த நேரத்தில் யார் என்ற யோசனையோடு கதவை திறந்தான். வெளியே வெளிறிய முகத்தோடு அம்ஜத். 'ஏண்டா இப்படி பண்ணினே! இப்போ அவன் ஆபத்தான நிலையிலே கிடக்கிறான்டா"



"தெரியாம நடந்து போச்சுடா...சற்று நேரத்துக்கு முன்னால போலீஸ் என் வீட்டுக்கு வந்தது. அதனால தான் காலையில வக்கீலோட போய்க்கிலாம் என்று உன் வீட்டில் தங்க வந்தேன்"



'ஐயோ அப்பாவுக்கு தெரிஞ்சா பிரச்னையாயிடும்டா. நீ போலீஸில் சென்று சரணடைந்து விடு'



"இரவு நேரங்கள்ல போனா லாக்கப்புல தள்ளிடுவாங்க பஷீர். சில நேரங்களில் அடிக்கவும் செய்வார்கள். நம்ம போலீஸைப் பற்றி உனக்கு தெரியாதா.. காலையில் 8 மணிக்கு நான் கிளம்பிடுறேன்டா"



"சரி சரி சத்தம் போடாம மாடிக்கு என் ரூமுக்கு போ' அரை மனத்தோடு அவனை வீட்டுக்குள் அனுமதித்து கதவை தாளிட்டான்.



நண்பர்கள் இருவரும் பேசிக் கொண்டதை காதர் தனது ரூமிலிருந்து பார்த்துக் கொண்டிருந்தார். இவனை நமது வீட்டில் தங்க வைத்தால் தனது குடும்பத்துக்கும் பிரச்னை என்பதால் காவல் நிலையத்துக்கு தனது செல் போனிலிருந்து அம்ஜத்தைப் பற்றிய தகவலை கொடுத்தார்.



அரை மணி நேரத்தில் போலீஸ் காதர் வீட்டின் அழைப்பு மணியை அழுததியது. காதர் கதவை திறந்து 'மாடியில் இருக்கான் கொண்டு போங்க' என்றார்.



போலீஸ் மாடிக்கு சென்றது. அப்போதுதான் படுக்கையில் படுத்த அம்ஜத்தை இரண்டு காவலர்கள் மடக்கி பிடித்து கையில் விலங்கிட்டனர். நடப்பது ஒன்றுமே பஷீருக்கும் அம்ஜத்துக்கும் விளங்கவில்லை. அம்ஜத் நமது வீட்டில் உள்ளது போலீஸாருக்கு எப்படி தெரிந்தது? என்ற யோசனையில் ஆழ்ந்தான் பஷீர்.



அம்ஜத்தை ஜீப்பில் ஏற்றிய காவலர்கள் உடன் இடத்தை காலி செய்தனர். அந்த நடுநிசியிலும் வீட்டைச் சுற்றி ஊர் மக்கள் கூடி ஆளாளுக்கு தங்கள் மனத்தில் தோன்றியதை எல்லாம் பேசிக் கொண்டிருந்தனர். சிறிது நேரத்தில் கூட்டம் களைந்து அந்த தெருவே அமைதியானது.



'பஷீர்...போலீஸ் தேடும் ஒரு குற்றவாளியை நாம் மறைத்து வைக்கலாமா'



'தவறுதாம்பா...ஆனால் அவன் காலையில சரண் அடைஞ்சுட்றேன்னு சொன்னானே..'



'அம்ஜத்தோடு சேர வேண்டாம் என்று நான் பலமுறை சொல்லியுள்ளேன்'



'கொஞ்சம் முரடன். ஆனால் அவன் நல்லவம்பா'



"யார் நல்லவன். படிக்கப் போற இடத்துல கூட படிக்கும் மாணவிகளை கலாட்டா பண்ணுபவன்தான் நல்லவனா! அவன் நம் வீட்டில் தங்குவது பிரச்னையாகும் என்பதால் நான்தான் போன் போட்டு போலீஸை வரவழைத்தேன்"'



'இது நம்பிக்கை துரோகம்பா...உதவி என்று கேட்டு வந்தவனை இப்படி பண்ணிட்டீங்களே'



'குற்றவாளிக்கு பரிந்து பேசுகிறாயா'



'அவன் காலையில சரண் அடையிறேன்டு சொன்னானே'



"குற்றத்தை செய்து விட்டு அவன் விருப்பத்துக்கு காவல் நிலையம் செல்வானோ. அதற்கு நாம் உதவி செய்ய வேண்டுமோ"



இவர்களின் காரசரமான வாக்கு வாதத்தை கேட்டுக் கொண்டே தனது கையில் உள்ள நபி மொழித் தொகுப்பு அஹமதோடு வந்தார் ஆமினா.



"இங்கே பார் பஷீர். அப்பா சொல்வதுதான் சரி. அம்ஜத் நமது எல்லோருடைய பார்வையிலும் குற்றவாளி. நமக்கு தெரிந்தவன் நண்பன் என்பதால் நாம் அவனை ஆதரிக்கக் கூடாது. இதை நமது அரசும் அனுமதிக்காது. நமது மார்க்கமும் அனுமதிக்கவில்லை.' என்று சொல்லிக் கொண்டே 'இந்தா இந்த நபி மொழித் தொகுப்பில் இனவெறி என்ற தலைப்பில் உள்ள நபி மொழி மொழியைப் படித்துப் பார்' என்று அவனிடம் அந்த புத்தகத்தைக் கொடுத்தார் ஆமினா.



நபி மொழித் தொகுப்பில் உள்ள அந்த நபி மொழியை படிக்க ஆரம்பித்தான் பஷீர்..



ஒரு முறை புசைலா என்ற சஹாபி பெண்மணி நபி அவர்களிடம் வந்து "இறைத்தூதரே நான் என் சமூகத்தை நேசிப்பது இன வெறியா" என்று கேட்டார்கள். அதற்கு நபி அவர்கள் "தன் சமூகத்தை ஒருவன் நேசிப்பது இன வெறி அல்ல. மாறாக தன் சமூகத்தை சார்ந்தவன் வரம்பு மீறி அநீதியை செய்யும்போது அவன் செய்வது தவறு என்று தெரிந்தும் அவன் தன் சமூகத்தைச் சார்ந்தவன் என்பதற்காக அவனுக்கு உதவினால் அதுவே இனவெறி" என்றார்கள்.- நூல்: அஹ்மத்



படித்து முடித்தவுடன் தனது தாயை பார்த்தான். 'நல்ல நேரத்தில் எனக்கு அருமையான செய்தியை கொண்டு வந்தீர்கள். நான் தவறு செய்திருப்பேன். நல்ல வேளையாக இறைவன் என்னைக் காப்பாற்றி விட்டான். அப்பா செய்தது நூற்றுக்கு நூறு சரியே! சாரிப்பா உங்களை தப்பா நினைச்சுட்டேன்"



"பரவாயில்லப்பா..இவ்வாறு நமது நண்பன், நமது இனம் என்ற காரணம் கூறி தவறு செய்பவர்களை ஆதரிப்பதுதான் சமூகத்தில் குற்றங்கள் அதிகரிக்கவும் காரணம. இனியாவது கவனமாக இரு"


நடுநிசியாகி விட்டதால் மூவரும் தங்கள் படுக்கைகளுக்கு செல்ல ஆரம்பித்தனர்.





Thursday, February 14, 2013

இவர்களெல்லாம் தீவிரவாதிகளாம்! சொல்வது யார்?

10 வயது, 12 வயது, 17 வயது சிறுவர்களையும் பெணகளையும் ஆளில்லா விமானம் மூலம் பாகிஸ்தானிலும், ஆப்கானிஸ்தானிலும், எமனிலும் குண்டுகளை போட்டு கொல்லும் அமெரிக்காவே!

இவர்கள்தான் தீவிரவாதிகளா? இவர்கள்தான் மனித குல விரோதிகளா? இந்த சிறுவர்களும், பெண்களும், முதியவர்களும் உங்களை என்ன செய்தார்கள்? வேற்று கண்டத்தில் எத்தனையோ ஆயிரம் மைல்களுக்கு அப்பால் இருக்கும் அமெரிக்காவே! உனக்கு ஆப்கானிஸ்தானைப் பற்றியும், பாகிஸ்தானைப் பற்றியும், ஏமனைப் பற்றியும், பாலஸ்தீனைப் பற்றியும் என்ன கவலை. நாட்கள் இப்படியே சென்று கொண்டிருக்காது. இறந்த அந்த உயிர்களும், கை கால்களை இழந்த அந்த சிறுவர்களின் சாபமும் உங்களை சும்மா விடாது. இன்றில்லா விட்டாலும் என்றாவது ஒரு நாள் இதற்கெல்லாம் பதில் சொல்லியே தீர வேண்டும்.

இத்தனை கொடூரங்களையும் அந்த அப்பாவி மக்களின் மேல் செலுத்தி விட்டு உலகமெங்கும் இஸ்லாமியர்களால்தான் தீவிரவாதம் பரவுகிறது என்று நாக் கூசாமல் பேசித் திரியும் அற்பப் பதர்களே! அமெரிக்கா தனது நேட்டோ படைகளோடு உலகம் எங்கும் நடத்தி வரும் தீவிரவாத்தை எதில் சேர்க்கப் போகிறீர்கள்? மேற்கத்திய நாடுகளின் தீவிரவாதத்தை பற்றி பேசக் கூட உங்கள் நா எழவில்லையே! இதுதான் நடுநிலையா? இஸ்லாமியர்களை தீவிரவாதத்தோடு சம்பந்தப்படுத்தி கதை கட்டுவதற்கு முன்பு சற்று மேற்கத்திய நாடுகளின் தீவிரவாத்தையும் அவர்கள் செய்யும் அத்து மீறல்களையும் சற்றே நடுநிலை என்று ஒன்று உங்களுக்கு இருக்குமானால் சீர் தூக்கி பாருங்கள்.



List of children killed by drone strikes in Pakistan
January 24, 2013
Name | Age | Gender
Noor Aziz | 8 | male
Abdul Wasit | 17 | male
Noor Syed | 8 | male
Wajid Noor | 9 | male
Syed Wali Shah | 7 | male
Ayeesha | 3 | female
Qari Alamzeb | 14| male
Shoaib | 8 | male
Hayatullah KhaMohammad | 16 | male
Tariq Aziz | 16 | male
Sanaullah Jan | 17 | male
Maezol Khan | 8 | female
Nasir Khan | male
Naeem Khan | male
Naeemullah | male
Mohammad Tahir | 16 | male
Azizul Wahab | 15 | male
Fazal Wahab | 16 | male
Ziauddin | 16 | male
Mohammad Yunus | 16 | male
Fazal Hakim | 19 | male
Ilyas | 13 | male
Sohail | 7 | male
Asadullah | 9 | male
khalilullah | 9 | male
Noor Mohammad | 8 | male
Khalid | 12 | male
Saifullah | 9 | male
Mashooq Jan | 15 | male
Nawab | 17 | male
Sultanat Khan | 16 | male
Ziaur Rahman | 13 | male
Noor Mohammad | 15 | male
Mohammad Yaas Khan | 16 | male
Qari Alamzeb | 14 | male
Ziaur Rahman | 17 | male
Abdullah | 18 | male
Ikramullah Zada | 17 | male
Inayatur Rehman | 16 | male
Shahbuddin | 15 | male
Yahya Khan | 16 |male
Rahatullah |17 | male
Mohammad Salim | 11 | male
Shahjehan | 15 | male
Gul Sher Khan | 15 | male
Bakht Muneer | 14 | male
Numair | 14 | male
Mashooq Khan | 16 | male
Ihsanullah | 16 | male
Luqman | 12 | male
Jannatullah | 13 | male
Ismail | 12 | male
Taseel Khan | 18 | male
Zaheeruddin | 16 | male
Qari Ishaq | 19 | male
Jamshed Khan | 14 | male
Alam Nabi | 11 | male
Qari Abdul Karim | 19 | male
Rahmatullah | 14 | male
Abdus Samad | 17 | male
Siraj | 16 | male
Saeedullah | 17 | male
Abdul Waris | 16 | male
Darvesh | 13 | male
Ameer Said | 15 | male
Shaukat | 14 | male
Inayatur Rahman | 17 | male
Salman | 12 | male
Fazal Wahab | 18 | male
Baacha Rahman | 13 | male
Wali-ur-Rahman | 17 | male
Iftikhar | 17 | male
Inayatullah | 15 | male
Mashooq Khan | 16 | male
Ihsanullah | 16 | male
Luqman | 12 | male
Jannatullah | 13 | male
Ismail | 12 | male
Abdul Waris | 16 | male
Darvesh | 13 | male
Ameer Said | 15 | male
Shaukat | 14 | male
Inayatur Rahman | 17 | male
Adnan | 16 | male
Najibullah | 13 | male
Naeemullah | 17 | male
Hizbullah | 10 | male
Kitab Gul | 12 | male
Wilayat Khan | 11 | male
Zabihullah | 16 | male
Shehzad Gul | 11 | male
Shabir | 15 | male
Qari Sharifullah | 17 | male
Shafiullah | 16 | male
Nimatullah | 14 | male
Shakirullah | 16 | male
Talha | 8 | male



وَلَا تَحْسَبَنَّ اللَّهَ غَافِلًا عَمَّا يَعْمَلُ الظَّالِمُونَ ۚ إِنَّمَا يُؤَخِّرُهُمْ لِيَوْمٍ تَشْخَصُ فِيهِ الْأَبْصَارُ

"மேலும் அக்கிரமக்காரர்கள் செய்து கொண்டிருப்பதைப் பற்றி அல்லாஹ் பராமுகமாக இருக்கிறான் என்று நபியே! நீர் நிச்சயமாக எண்ண வேண்டாம்; அவர்களுக்கு தண்டனையை தாமதப் படுத்துவதெல்லாம், கண்கள் விரைத்துப் பார்த்துக் கொண்டேயிருக்கும் அந்த மறுமை நாளுக்காகத்தான்."

குர்ஆன்:14:42

Saturday, February 09, 2013

சம்பிக்க ரணவக்கவின் சரித்திரப் புரட்டு!



இலங்கை முஸ்லிம்கள் மீது பெரும் பான்மை சமூகத்தினர் வெறுப்புக் கொள்ளும் விதத்தில் அவதூறுகள் பரப்பப்பட்டு வருகின்றன. இந்த நாட்டின் பெரும்பான்மை மக்களில் அதிகமானனோர் நல்ல மக்களாவர். ஒரு சின்னஞ் சிறு குழுவினர் முஸ்லிம்கள் மீது வெறுப்பேற்றும் வண்ணம் அவதூறு பரப்பி முஸ்லிம்களுக்கு எதிராக நாடு தழுவிய இனக்கலவரம் ஒன்றை ஏற்படுத்துவதற்கு முயற்சித்து வருகின்றனர்.

மஸ்ஜித்களுக்கு எதிராகச் செயற்படுதல், முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்களுக்கும், கல்வி நிலையங்களுக்கும் சிக்கலை உண்டுபண்ணுதல் என இவர்களது தேசத் தூரோகச் செயல்கள் நகர்ந்து கொண்டிருக்கின்றன. இது கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து வருவதை அண்மைய நிகழ்வுகள் மூலம் நாம் அறியமுடிகின்றது.

இந்த நாட்டின் எதிர்க்கட்சியினரும் இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் எதிராகப் பேசி சிங்கள இனவாத சக்திகளைக் கவரும் மனநிலைக்கு மாறியுள்ளனர். இஸ்லாமிய ஷரீஆ சட்டம் காட்டுமிராண்டித்தனமானது என்றும் முஸ்லிம்கள் விரும்பாத இன்னும் சில கருத்துக்களையும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசிய பேச்சுக்கள் இதனையே உணர்த்துகின்றன. எனவே, இத்தகைய அவதூறுகளுக்கு எதிராக முஸ்லிம் சமூகம் ஓரணியில் திரண்டு நல்லெண்ணம் வளர்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியமாகும்.

ஜாதிக ஹெல உருமயவின் சிரேஷ்ட உறுப்பினரும் தற்போதைய பொதுஜன ஐக்கிய முன்னனி அரசாகங்கத்தின் அமைச்சருமான பாடலீ சம்பிக ரணவக்க எழுதியுள்ள “அல் ஜிஹாத், அல் கைதா இஸ்லாமிய அடிப்படை வாதத்தின் கடந்த காலம், தற்காலம், எதிர்காலம்” என்ற நூலில் பெரும் சரித்திரப் புரட்டைச் செய்துள்ளார்.

“வடக்கிலிருந்து துரத்தப்பட்ட முஸ்லிம்களது சொத்துக்களை புலிகள் கைப்பற்றிக் கொண்டது போல் தப்பி வந்த அந்த முஸ்லிம்கள் புத்தளத்திலும் கல்பிட்டியிலும் உள்ள சிங்களவர்களது சொத்து, செல்வங்களைக் கைப்பற்றிக் கொண்டார்கள். (பக்கம் 278)”

இப்படி ஒரு அண்டப்புழுகை தனது நூலில் அமைச்சர் என்ற உயர் அந்தஸ்தில் இருந்து கொண்டு பதிவு செய்துள்ளார். புலிகளால் விரட்டப்பட்ட முஸ்லிம்கள் உண்ண உணவில்லாது அடுத்தகட்ட வாழ்க்கைக்கே வழிதெரியாமல் வந்தவர்கள். எப்படி சிங்கள மக்களது சொத்துக்களை அபகரித்தார்கள்? புலிகள் ஆயுத முனையில் முஸ்லிம்களை வெளியேற்றியது போல் சிங்கள மக்களை முஸ்லிம்கள் எதைக் கொண்டு வெளியேற்றினார்கள்? புலிகள் முஸ்லிம்களை வெளியேற்றியதை உலகமே அறியும்! சிங்கள மக்களது சொத்துக்களை முஸ்லிம்கள் அபகரித்தார்கள் என்று இவர் மட்டும்தான் சொல்கின்றார். அப்படி முஸ்லிம்கள் அபகரித்திருந்தால் சிங்களவர்கள் சும்மா இருந்திருப்பார்களா? பிரச்சினை வந்திருக்காதா? குறைந்த பட்சம் பொலீஸிலாவது முறைப்பாடு செய்யாமல் இருந்திருப்பார்களா? நமது கண்ணுக்கு முன்னால் நடந்த உண்மை நிகழ்வுகள் குறித்தே இப்படி பொய்யை அவிழ்துவிட்டவர் கடந்த காலம், எதிர்காலம் பற்றிப் பேசினால் எவ்வளவு பெரிய பொய்களையும், கற்பனைகளையும் வெளியிடுவார் என்பதை எவரும் எளிதாக யூகிக்கலாம்.

புலிகளால் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டதை ஒத்துக்கொள்ளும் இவர், புலிகளுக்கும் முஸ்லிம்களுக்குமிடையில் தொடர்பிருந்ததாக சித்தரிக்க முற்படுவது அடுத்த அண்டப்புழுகாகும்.

தமிழ் மொழியை தாய்மொழியாகக் கொண்ட முஸ்லிம்கள் புலிகளுடன் இணையாமல் நாட்டுக்கு விசுவாசமாகவே நடந்து கொண்டனர். முஸ்லிம்கள் புலிகளுக்கு உதவாத காரணத்தினால்தான் வடக்கிலிந்து முழுமையாக விரட்டப்பட்டார்கள். இந்தத் தியாகத்தை சம்பிக்கவோ, அவர் சார்ந்த அமைப்பினரோ இந்த நாட்டுக்காக செய்திருப்பார்களா?

புலிகள் கிழக்கிலிருந்து முஸ்லிம்களை வெளியேற்ற முற்பட்டனர். அதற்காக காத்தான்குடி, ஏறாவூர், வாழைச்சேனை என முஸ்லிம்கள் கொடூரமாகக் கொல்லப்பட்டனர். கடத்தல், கப்பம் கோரல், கொலை செய்தல் என எல்லா இன்னல்களையும் தாங்கிக் கொண்டு கிழக்கிலேயே முஸ்லிம்கள் வாழ்ந்தனர். அன்று முஸ்லிம்கள் உயிருக்குப் பயந்து வெளியேறியிருந்தால் புலிகளின் தமிழ் ஈழக் கனவு நனவாகியிருக்கும். பிரபா-கருணா பிரிவும் தவிர்க்கப்பட்டிருக்கும். இன்று வடகிழக்கு தனி நாடாக மாறியிருக்கும். முஸ்லிம்களது உயிர்த் தியாகத்தால்தான் இன்று இது ஒன்றுபட்ட ஒரு தனி தேசமாக திகழ்கின்றது. இந்தத் தியாகத்தைச் செய்த முஸ்லிம்களைத்தான் புலிகளுடன் சேர்ந்தவர்கள் என்றும் தேசப் பற்றில்லாதவர்கள் என்றும் சம்பிக்க சாடி வருகின்றார்.

இந் நாட்டில் புலிகள் நடாத்திய முக்கியமான பல தாக்குதல் சம்பவங்களுக்குப் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த பலரும் துணை போயுள்ளனர். பணத்துக்காக பல முக்கிய அதிகாரிகளே புலிகளுக்கு உதவியுள்ளனர். ஆனால், முஸ்லிம்கள் இத்தகைய ஈனச் செயல்களில் ஈடுபட்டதில்லை. ஒரு கட்டத்தில் “சிங்கள கொட்டியா” (சிங்களப் புலிகள்) என்ற சொல் பயன்படுத்தப்படும் அளவுக்கு சிங்கள மக்கள் சிலரது உதவி புலிகளுக்குக் கிடைத்துள்ளது. இப்படியிருக்க முஸ்லிம்களுக்குப் புலிகளுடன் தொடர்பிருந்ததாகவும் முஸ்லிம்கள் தேசத் துரோகிகள் என்றும் சம்பிக்க கூறுவது வேடிக்கையாகவும் வேதனையாகவும் உள்ளது.

கடாபி இலங்கை வந்த போது இலங்கையை ஒரு இஸ்லாமிய நாடாக மாற்ற வேண்டும் என்று பேசினாராம். கடாபி நாற்பது வருடம் ஆட்சி செய்த லிபியாவையே அவர் இஸ்லாமிய நாடாக மாற்றாத போது இலங்கையை இஸ்லாமிய நாடாக மாற்ற வேண்டும் என்று அவர் எப்படிப் பேசுவார் என்றெல்லாம் யோசிக்காமல் சம்பிக்க போன்றவர்கள் கிணற்றுத் தவளைகள் போல் சிந்திப்பது கேள்விக்குறியாயுள்ளது.

முஹம்மத் இப்னு காஸிம் இந்தியா வந்த போது 5000 பிக்குகளைக் கொன்றார் என்றொரு தகவலையும் அவர் குறிப்பிட்டு முஸ்லிம்கள் மீது வெறுப்பேற்றுகின்றார். இந்தியாவை முஸ்லிம்கள் 800 வருடங்கள் ஆண்டுள்ளார்கள். இருந்தும் அங்கே முஸ்லிம்கள் பெரும்பான்மையாக மாறவில்லை. இந்தியா வந்த முஹம்மத் இப்னு காஸிம் பிக்குகளைக் கொன்று குவித்திருந்தால் ஆலயங்களை அழித்திருந்தால் 800 வருடங்கள் இது நடந்திருந்தால் எச்ச சொச்சங்கள் கூட இல்லாத அளவுக்கு அங்கு சிலை வணக்கம் அழிக்கப்பட்டிருக்குமே! ஏன் அப்படி நடக்கவில்லை? என்று இந்த சிந்தனைச் சூனியங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டாமா?

உண்மை என்னவென்றால், இந்தியாவை ஆண்ட முஸ்லிமல்லாத மன்னர்களை விட முஸ்லிம் ஆட்சியாளர்கள் இந்திய மக்களுடன் நல்ல முறையில் நடந்து கொண்டதால்தான் சிறு தொகையினராக இருந்த முஸ்லிம்கள் பெரும்பான்மை மக்களை 800 வருடங்கள் ஆள முடிந்தது. இல்லையென்றால் பிரிட்டிஷை விரட்டியதை விட வேகமாக முஸ்லிம் ஆட்சியாளர்களை இந்திய மக்கள் விரட்டியிருப்பார்கள். ஆயுத பலத்தை விட ஆள்பலமே மேலோங்கியிருந்த அந்தக் காலகட்டத்தில் முஸ்லிம்களது ஆட்சியை அவர்கள் அங்கீகரிக்கும் அளவுக்கு முஸ்லிம் மன்னர்கள் நாட்டு மக்களுடன் நல்ல முறையில் நடந்து கொண்டனர் என்பதுதான் உண்மை வரலாறாகும்.

இஸ்லாம் பரவுவதற்கு காமமும் பணமும் தான் காரணம் என்று வக்கிர வார்த்தையால் தாக்கியுள்ளார் சம்பிக்க!

“சிலருக்கு அரபிகளது வியாபார மற்றும் காம கலாசாரத்துடன் இணைவதற்கு பாரம்பரிய பௌத்த மதம் தடையாக இருந்தது. உதாரணமாக மலாயாவின் அரசன் (1400 ஆம் வருடம்) பல மனைவியரை வைத்துக் கொண்டு காம சுமகம் பெற பௌத்தம் தடையாக இருந்ததனால் அவன் இஸ்லாத்திற்குள் சென்றான். இஸ்லாம் அப்பகுதிகளில் அப்படித்தான் பரவியது.” (பக்கம் 55)

இது அப்பட்டமான பொய் என்பதற்கு நடைமுறை உலகே சான்றாகும். சில பௌத்த துறவிகள் துறவி ஆடையை அணிந்து கொண்டே காம லீலைகளில் ஈடுபட்ட நிகழ்வுகள் பத்திரிகைகளில் வெளிவருகின்றன. இப்படியிருக்கும் போது ஒரு மன்னன் காமத்துக்காக மதத்தை மாற்ற வேண்டுமா? சம்பிக்க கூட பல பெண்களுடன் வாழ்க்கை நடாத்த விரும்பினால் சட்டபூர்வமாக திருமணம் செய்யாமல் எத்தனை பெண்களுடனும் வாழ எந்த நாட்டிலும் தடையில்லை. இதிலிருந்து இது இவரது கீழ்த்தரமான வக்கிர புத்தியால் எழுந்த கற்பனை என்பது வெள்ளிடை மழை.

இவர் சொல்வது உண்மையென்றால் இஸ்லாத்திற்கு வந்தவர்கள் எல்லோரும் பலதார மணம் புரிந்து வாழ்ந்திருக்க வேண்டும். அப்படியும் நடக்கவில்லை. இன்று ஐரோப்பாவில் வெகு வேகமாக இஸ்லாம் பரவி வருகின்றது. அங்கு காமத்துக்கு எந்தத் தடையும் இல்லை. ஆட்டம், பாட்டு, கூத்து, ஆபாசம் என்று அலைபவர்களைக் கூட இஸ்லாம் கவருகின்றது. அவர்கள் இஸ்லாத்திற்கு வந்த பின்னர் பழைய காம வாழ்க்கை வாழ முடியாது என்று நன்றாகத் தெரிந்திருந்தும் வருகின்றார்கள்! இப்படியிருக்க சம்பிக்க கூறும் கூற்று எவ்வளவு பெரிய பொய்யென்பது சிந்திக்க வேண்டிய விடயமாகும்.

காமத்தைக் காட்டி மதத்தைப் பரப்புவதென்றால் முஸ்லிம்களும் ஆண்-பெண் வேறுபாடின்றி அரைகுறை ஆடையுடன் கலந்து கொஞ்சிக் குலாவும் மதக் கிரியைகளையும் அங்கீகரித்திருப்பர். வேறெந்த மதத்திலும் கடைப்பிடிக்கப்படாத அளவுக்கு ஆண்-பெண் கலப்பில்லாத, கவர்ச்சியான ஆடையமைப்பில்லாத ஆட்டம், பாட்டு, கூத்து போன்றவற்றை அங்கீகரிக்காத சமூகமாக முஸ்லிம் சமூகம் இருப்பதை நடுநிலை மக்கள் சிந்தித்துப் பார்த்து இவரின் கோர முகத்தைப் புரிந்துகொள்ள வேண்டும்.

இவர் தனது நூலில் அரபு மத்ரஸாக்கள், குர்ஆன் மத்ரஸாக்களைக் கூட தீவிரவாதத்தின் மையங்களாகச் சித்தரித்துள்ளார். இத்தகைய கருத்துக்கள் இனங்களுக்கு மத்தியில் தப்பெண்ணங்களை வளர்ப்பதினாலும் எதிர்காலத்தில் இனக்கலவரங்களுக்குக் காரணமாக அமைவதாலும் இது போன்ற கருத்துக்களையுடைய நூற்களை அரசு தடைசெய்ய வேண்டும்.

தேசிய ஒற்றுமையையும் புரிந்துணர்வையும் சீர்குலைக்க எத்தணிக்கும் இத்தகைய தேசத் துரோகக் குற்றவாளிகள் மீது நீதித்துறை தமது கவனத்தைத் திருப்ப வேண்டும்.

இவரது இந்த சிந்தனையை உள்வாங்கிய ஒரு குழு முஸ்லிம்களது கடைகளில் பொருட்களை வாங்க வேண்டாம் எனப் பிரச்சாரம் செய்து வருகின்றது. ஒரு கலவரத்தை உண்டுபண்ண சதி செய்து வருகின்றது. கல்விக் கூடங்களில் கூட சில நெருக்கடிகளை முஸ்லிம் மாணவர்கள் சந்திக்கும் இக்கட்டான நிலையும் ஏற்பட்டு வருகின்றது.

எனவே, முஸ்லிம் சமூகப் புத்திஜீவிகள், அரசியல் தலைமைகள் இது குறித்து நிதானமான தூரநோக்குப் பார்வையுடன் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாக மாறியுள்ளது.

சம்பிக்கவின் இது போன்ற கருத்துக்கள் ஐம்பது அல்லது நூறு வருடங்களின் பின் சரித்திரமாக மாறலாம். இன்றில்லாவிட்டாலும் எதிர்காலத்தில் கூட இந்நூல் இனக்கலவரங்களை உண்டுபண்ணும். எனவே, இக்கருத்துக்களுக்கான மறுப்புக்களைப் பதிவு செய்ய வேண்டியுள்ளது. இது போன்ற நூற்களுக்கு எதிராக வழக்குகளைத் தொடுத்து அதையும் ஒரு பதிவாக்க வேண்டியுள்ளது. இராமர் கோயிலை இடித்துவிட்டு அந்த இடத்தில் பாபர் மசூதி கட்டப்பட்டது என்ற தவறான சரித்திரம்தான் டிசம்பர் 6 பாபர் மசூதி இடிக்கப்பட அடித்தளமானது. இது போன்று எதிர்காலத்தில் இலங்கையில் பிரச்சினைகள் எழாமல் இருக்க மறுப்புக்களும் பதியப்பட வேண்டும். இது குறித்து முஸ்லிம் புத்திஜீவிகள் கவனம் செலுத்த வேண்டும் என பணிவாய் வேண்டிக் கொள்கின்றோம்…..

இவ்விடயத்தில் அனைத்துத் தரப்பினரையும் அல்லாஹ் ஒன்றிணைப்பானாக!

- S.H.M. இஸ்மாயில் ஸலஃபி
– ஆசிரியர்: உண்மை உதயம் மாதஇதழ்

சிங்கள மொழி தெரிந்தவர்கள் இந்த கட்டுரையை மொழி பெயர்த்து சிங்களவர்கள் மத்தியில் பரப்ப வேண்டும். ஒரு பொய்யை இன்று பதிந்து விட்டால் இன்னும் 10 வருடங்களில் அது வரலாறாக பதியப்பட்டு விடும் கொடுமையை பல இடங்களில் பார்த்து வருகிறோம். சிங்கள மக்களுக்கு தேவையற்ற அச்சத்தை உண்டு பண்ணி குழப்பம் விளைவிக்க பலர் முயன்று வருகின்றனர். இந்துக்களும், முஸ்லிம்களும், கிறித்தவர்களும், பவுத்தர்களும் பகையை மறந்து நட்பு சூழல் உருவாவதை சில நாச காரா சக்திகள் விரும்புவதில்லை. அதற்கு பலியாகி விடாமல் நாம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய தருணம் இது.

--------------------------------------------------------------------

//நீங்கள் நினைப்பதுபோல் கிறிஸ்தவ பாதிரி எவரும் எரித்துக் கொல்லப்படவில்லை. நீங்கள் குறிப்பிடுவது ஆஸ்திரேலியாவிலிருந்து இங்கு வந்து வனவாசிகளிடையே மத மாற்றம் செய்வதில் ஈடுபட்டவர் தமது மகனுடன் வண்டிக்குள் உறங்குகையில் தீப்பற்றி எரிந்த சம்பவம். அவரது பிரசார வேனில் வெப்பத்தைத் தணிப்பதற்காகக் கூரையிலும் வேனுக்குள் தரையிலும் வைக்கோல் பரப்பப்பட்டிருக்கும்.//

இவ்வளவு அப்பட்டமாக நடந்த ஒரு கொலையை மலர் மன்னன் என்ற ஒருவரால்தான் விபத்து என்று சமாளித்து எழுத முடியும். இதையே மாற்றி எழுதுபவர்கள் 2000 வருடங்களுக்கு முன்பு எந்த மாதிரியான சரித்திர புரட்டுகளை அரங்கேற்றியிருப்பார்கள் என்று சொல்லத் தேவையில்லை. வாழ்க பாரதம். வெல்க மலர்மன்னனின் சமாளிப்புகள்.:-(

திண்ணையில் மலர் மன்னன் எழுதிய ஒரு கருத்துக்கு நான் இட்ட பின்னூட்டமே இது. இந்துத்வா வாதிகள் எந்த அளவு தங்கள் தவறை மறைக்க எவ்வளவு பெரிய பொய்களை வேண்டுமானாலும் அரங்கேற்ற துணிய மாட்டார்கள் என்பதற்கு இது ஒரு சான்று.

அடுத்து அப்சல் குருவை தூக்கில் போட்டாகி விட்டது. அவன் உண்மையிலேயே எனது நாட்டின் பாராளுமன்றத்தை தாக்க வந்திருந்தால் தூக்கில் போட மிக தகுதியான நபரே. ஆனால் சமூக ஆர்வலர்கள் சொல்வது போல் இது பிஜேபி செய்த அரசியல் நாடகம் என்றால் இதற்கான விலையை இந்த உலகத்தில் பெறா விட்டாலும் மறுமையில் பெற்றுக் கொள்வார்கள். நாம் அனைவரும் கண்டிப்பாக அங்கு சமூகமளித்திருப்போம்.

----------------------------------------------------------

அப்சல் குரு மீதான விசாரணை மற்றும் நீதிமன்ற தீர்ப்பு குறித்து அருந்ததி ராய் எழுப்பிய பதிமூன்று கேள்விகள்.

http://www.guardian.co.uk/world/2006/dec/15/india.kashmir

கேள்வி 1 : இந்த தாக்குதல் நடப்பதற்கு பல மாதங்கள் முன்பிருந்தே பாராளுமன்றத்தின் மீது பெரும் தாக்குதல் நடக்க விருக்கிறது என்று காவல்துறையும் அரசாங்கமும் சொல்லிக் கொண்டேயிருந்தது. 12 டிசம்பர் 2001 அன்று பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் ஒரு தனிப்பட்ட கூட்டத்தில் பாராளுமன்றம் மீது பெரும் தாக்குதல் நடக்கவிருக்கிறது என்று கூறினார். டிசர்பர் 13 அன்று பாராளுமன்றம் தாக்கபட்டது. இத்தனை எச்சரிக்கைகள், பாதுகாப்பு நடைமுறைகள் அங்கு இருந்தபோதும், எப்படி வெடிப் பொருட்களுடனான அம்பாசிடர் கார் பாராளுமன்ற வளாகத்துல் நுழைந்தது?


கேள்வி 2 : இந்த தாக்குதல் நடந்த சில தினங்களில் டெல்லி காவல்துறை இந்த தாக்குதல் ஜைஸ்-ஏ-முகம்மது மற்றும் லக்சர் ஏ தோய்பா ஆகிய இரு இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை என்று அறிவித்தது. இந்த தாக்குதலை 1998 காந்தகார் விமான கடத்தலில் ஈடுபட்ட முகமது தான் செய்தார் என்று காவல்துறை மிக துள்ளியமாக தெரிவித்தது. (இதனை பின்பு சிபிஐ மறுத்தது) இவைகளில் எவையும் நீதிமன்றத்தில் நிறுபிக்கபடவில்லை. இப்படி கூறிய காவல்துறையின் சிறப்பு புலனாய்வு பிரிவிடம் என்ன சான்றுகள் இருந்தது?

கேள்வி 3: இந்த மொத்த தாக்குதல்களும் பாராளுமன்றத்தின் கண்கானிப்பு காமிராக்களில் பதிவாகியிருந்தது. காங்கிரஸ் எம்பி கபில் சிபில் அவர்கள் இந்த தாக்குதல்களில் பதிவுகள் எல்லாம் பாராளுமன்றத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும் காட்டப்பட வேண்டும் என்றார். அவரது வாதத்தை ராஜ்ய சபாவின் துணை தலைவர் நஜ்மா ஹெப்பதுல்லா ஆதரித்தார், மேலும் இந்த தாக்குதல்கள் தொடர்பான விபரங்கள் அனைத்திலும் பல குழப்பங்கள் உள்ளது என்றார் அவர். பாராளுமன்ற காங்கிரஸ் அவை தலைவர் ப்ரியரஞ்சன் தாஸ்முன்சி அவர்கள் , “நான் அந்த காரில் இருந்து ஆறு பேர் இறங்கியதை பார்த்தேன், ஆனால் ஐந்து பேர் மட்டுமே சுட்டுக் கொல்லப்பட்டனர், கண்கானிப்பு காமிராவின் பதிவில் ஆறு பேர் இறங்கியது பதிவாகியுள்ளது.” என்றார். தாஸ்முன்சி கூறுவது சரி என்றால் ஏன் காவல்துறை ஐந்து பேர் தான் இருந்தார்கள் என்று கூறுகிறது? அப்படி என்றால் யார் அந்த ஆறாவது நபர்? அவர் இப்பொழுது எங்கே இருக்கிறார்? அந்த கண்கானிப்பு காமிராவின் பதிவு ஏன் இந்த வழக்கு விசாரனையில் சாட்சியமாக அளிக்கபடவில்லை? இந்த பதிவை ஏன் பொதுமக்கள் பார்வைக்கு அவர்கள் வெளியிடவில்லை?

கேள்வி 4 : இப்படியாக சில கேள்விகளை பாராளுமன்ற் உறுப்பினர்கள் எழுப்பியவுடன் ஏன் அவை ஒத்திவைக்கபட்டது?

கேள்வி 5 : டிசம்பர் 13 தாக்குதல் நடந்து சில தினங்கள் கழித்து இந்திய அரசு இந்த தாக்குதல்களில் பாகிஸ்தானின் தலையீடு இருப்பது தொடர்பாக மறுக்கமுடியாத சாட்சியஙக்ள் உள்ளது என்று அறிவித்தது. அதனால் உடன் இந்திய பாகிஸ்தான் எல்லையில் ஐந்து லட்சம் ராணுவ துருப்புகளை அனுப்பினார்கள். பெரும் அணு ஆயுத போர் சூழல் நோக்கி இந்திய துணை கண்டமே நகர்த்தப்பட்டது. அப்சலை சித்தரவதை செய்து பெற்ற வாக்குமூலங்கள் (இந்த வாக்குமூலங்களை கூட அதன் பின் உச்ச நீதிமன்றம் நிராகரித்தது) தவிர்த்து அப்படி எந்த அசைக்க முடியாத சாட்சியம் அரசிடன் இருந்தது?

கேள்வி 6 : எல்லை நோக்கிய இந்த படைகள் அனுப்புதல் என்பது தாக்குதல்களுக்கு வெகு முன்பாகவே தொடங்கப்பட்டதா?

கேள்வி 7: இந்த ராணுவ படைகள் எல்லையில் குவிப்பு ஏறக்குறைய ஒரு ஆண்டுக்கு மேலாக தொடர்ந்தது, அதற்கு மொத்தம் எவ்வளவு செலவானது? இந்த நடவடிக்கைகளில் எத்தனை ராணுவ வீரர்கள் பலியானார்கள்? கண்ணிவெடிகள் கையாண்டதில் மொத்தன் எத்தனை ரானுவ வீரர்கள் மற்றும் பொது மக்கள் இறந்தார்கள்? தொடர் ராணுவ வாகணங்கள் இந்த கிராமங்களில் வழியே சென்றதால் எத்தனை கிராமவாசிகள் தங்களின் வீடுகளை, வயல்களை இழந்தார்கள்? இந்த விவசாயிகளின் வயல்களில் எத்தனை கண்ணிவெடிகள் புதைக்கபட்டது?

கேள்வி 8 : ஒரு குற்றப்புலனாய்வில் சம்பவம் நடந்த இடத்தில் கிடைத்த தடையங்கள் எவ்வாறு குற்றம் சாட்டபட்டவருடன் தொடர்புடையவை என்பதை நிறுவுவது காவல்துறையின் பணி. காவல்துறை எவ்வாறு அப்சல் குருவை வந்தடைந்தது? கிலானியின் வாக்குமூலங்களின் வழிதான் நாங்கள் அப்சல் குருவை நெருங்கினோம் என்றது சிறப்பு புலனாய்வு பிரிவு. ஆனால் கிலானியை கைது செய்வதற்கு முன்பாகவே ஸ்ரீநகர் காவல்துறை அப்சல் குருவை தேடும் நடவடிக்கைகளை ஆரம்பித்துவிட்டது. எந்த வகையில் சிறப்பு புலனாய்வு பிரிவு அப்சல் குருவையும் டிசம்பர் 13 அயும் இனைத்தது?

கேள்வி 9 : அப்சல் குரு ஒரு சரணடைந்த தீவிரவாதி அவர் தொடர்ச்சியாக இந்திய ராணுவத்துடன் (STF-J&K)தொடர்பில் இருந்தவர் என்பதை நீதிமன்றமே ஆமோதித்தது, இந்திய ராணுவத்தின் நேரடி கண்காணிப்பில் இருந்த ஒருவர் எப்படி இத்தனை பெரும் தாக்குதல் நடவடிக்கையை திட்டமிட்டார்?

கேள்வி 10 : லக்சர் ஏ தோய்பா, ஜைஸ் ஏ முகம்மது போன்ற அமைப்புகள் இந்தியா மீது ஒரு தாக்குதலை தொடுக்க STF-ன் நேரடி தொரட்பில், கண்காணிப்பில் உள்ள ஒருவரை இந்த பெரும் சதியின் முக்கிய தொடர்பாளராக தேர்வு செய்யுமா?

கேள்வி 11 : தன்னிடம் தாரிக் என்பவர் முகமத் என்பவரை அறிமுகம் செய்து “இவரை நீ தில்லிக்கு அழைத்து செல்” என்று கூறியதாக நீதிமன்றத்தில் அப்சல் குரு தெரிவித்தார். தாரிக் காஷ்மீர் STF-ல் பணியாற்றியவர், தாரிக்கின் பெயர் காவல்துறையின் குற்றப்பத்திரிக்கையில் இடம்பெற்றுள்ளது. யார் இந்த தாரிக், அவர் இப்பொழுது எங்கே இருக்கிறார்?

கேள்வி 13 : டிசம்பர் 19, 2001, தாக்குதல் நடந்து ஆறு தினங்கள் கழித்து மகாராஷ்டிரத்தின் தானே பகுதி காவல்துறை கண்கானிப்பாளர் எஸ்.எம்.சாங்காரி பாராளுமன்ற தாக்குதல்களில் கொல்லபட்ட ஒருவரை லக்‌ஷர் ஏ தோய்பாவின் முகமத் யாசின் ஃபதே என்று அடையாளம் காண்பித்தார், இவரை மும்பையில் நவம்பர் 2000ல் கைது செய்த்தாகவும், கைது செய்தவுடன் முகமத்தை ஜம்மு காஷ்மீர் காவல்துறை வசம் ஒப்படைத்ததாகவும் தெரிவித்தார். இதற்கு சான்றாக அவர் மிக விரிவான விவரனைகளையும் அளித்தார். காவல்துறை கண்காணிப்பாளர் சாங்கிரி கூறுவது சரி என்றால் ஜம்மு காஷ்மீர் காவல்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஒருவர் எப்படி பாராளுமன்ற தாக்குதலில் ஈடுபட்டிருக்க முடியும்? அவர் சொல்வது தவறு என்றால், முகமத் யாசின் இப்பொழுது எங்கே இருக்கிறார்?

கேள்வி 13 : பாராளுமன்ற தாக்குதலில் கொல்லபட்ட ஐந்து தீவிரவாதிகள் யார் என்பது பற்றிய விபரங்கள் ஏன் இன்றுவரை வெளியிடப்படவில்லை?

இந்த கேள்விகள் எல்லாம் மிக நியாயமான கேள்விகள், இந்த பாராளுமன்ற தாக்குதல்கள் தொடர்பான அருந்ததி ராய் அவர்களின் முழு கட்டுரையை வாசித்தால் இந்த விஷயங்கள் இன்னும் குவிமையம் பெறும். இவை பெரும் ஆய்வு செய்து கேட்கபட்ட கேள்விகள் அல்ல மாறாக அந்த நேரத்தில் இந்திய பத்திரிக்கைகள் மற்றும் அரசியல் வாதிகளில் பேச்சுகளை தொடர்ந்து கேட்கும் எவருக்கும் இந்த கேள்விகள் கொஞ்சம் யோசித்தாலே வருபவையே. பாராளுமன்ற தாக்குதல் தொடர்பான இந்த கேள்விகளுக்கு இன்று வரை எந்த பதிலும் இல்லாமல் அவை இந்தியாவின் மீது மிதந்தவண்ணம் உள்ளது, இன்று அந்த கேள்விகள் எல்லாம் ஒரு கருமேகமாக தில்லியின் திகார் சிறைச்சாலை மீது ஒரு சாரல் மழையாக பொழியக்கூடும்.

http://www.amuthukrishnan.com/index.php?option=com_content&view=article&id=259%3A-13--13-&catid=22%3A-1&Itemid=52

Thursday, February 07, 2013

அமெரிக்காவில் முஸ்லிம் பல்கலைக் கழகம்!



ஜெய்துனா கல்லூரி கலிபோர்னியாவில் திறக்கப்பட்டுள்ளது. இது முதல் இஸ்லாமிய கல்லூரி என்பதும் குறிப்பிடத்தக்கது.


---------------------------------------------------------

பலராலும் பார்க்கப்பட்ட புதிய தலைமுறை பிஜேயின் பேட்டி.





Wednesday, February 06, 2013

டோண்டு ராகவன் இன்று நம்மிடம் இல்லை!

டோண்டு ராகவன் இன்று நம்மிடம் இல்லை!



நம்மோடு இணைய விவாதங்களில் பலமுறை கலந்து கொண்ட டோண்டு ராகவன் அவர்கள் இன்று நம்மிடம் இல்லை. அதிர்ச்சியான செய்தி. இந்த வயதிலும் பதிவுகள் எழுதுவதிலும அதற்கு பதில் தருவதிலும் மிகவும் சுறுசுறுப்பாக இருந்தவர். இவரிடம் எனக்கு பல மாற்றுக் கருத்துக்கள் இருந்தாலும் பழகுவதற்கு மிக இனிமையானவர். சென்னை மீனம்பாக்கத்தில் எனது தாத்தா ஹஜ் முடிந்து வந்தபோது அழைக்க சென்றிருந்தேன். அப்பொழுது அலை பேசியில் அழைத்து அவரோடு சுமார் இரண்டு மணி நேரம் பேசிக் கொண்டிருந்தேன். தாத்தாவைப் பார்த்தவுடன் மரியாதை நிமித்தமாக காலை தொட்டு ஆசீர்வாதம் வாங்கினார். இதை சற்றும் எதிர்பார்க்காத தாத்தா சற்று அதிர்ச்சி அடைந்தார். 'மனிதனுக்கு மனிதன் இவ்வாறு காலைத் தொட்டு வணங்குவது தவறு என்று நீ உனது நண்பருக்கு சொல்லக் கூடாதா?' என்று கேட்டார். 'அது அவர்கள் கலாசாரம். இதை பெரிதுபடுத்தாதீர்கள்' என்று நான் சொன்னாலும் அவர் சமாதானம் அடையவில்லை. தாத்தாவிடம் ராகவன் சார் இறந்த செய்தியை இன்னும் சொல்லவில்லை.

இணையத்தில் போலி டோண்டு விவகாரத்தில் மிக உக்கிரமாக பணி புரிந்து பிரச்னையை முடிவுக்கு கொண்டு வந்ததை பழைய பதிவர்கள் இன்றும் ஞாபகம் வைத்திருக்கலாம். திரு டோண்டுவை 'டோண்டு சார்' என்று கூப்பிட்டதற்காக போலி டோண்டுவிடமிருந்து காட்டமான அர்ச்சனைகளை பெற்றேன். :-). பிரஞ்ச்,ஜெர்மனி,ஆங்கிலம், தமிழ் என்று பல மொழிகளையும் சரளமாக எழுத வல்லவர். மொழி பெயர்ப்பு வேலைகளில் நிறைய சம்பாதிததார். எதையும் ஒளிவு மறைவின்றி போட்டு உடைத்து விடுவார். இதனால் பார்ப்பனர்களிலேயே பலருக்கு டோண்டு சாரை பிடிக்காது. பழகுவதற்கு மிக இனிமையான மனிதர்.

அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தவருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

“நீங்கள் எதை விட்டும் விரண்டு ஓடுகிறீர்களோ, அந்த மரணம் நிச்சயமாக உங்களை சந்திக்கும்"
-குர்ஆன் 62:8

"ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுவைப்பதாகவே இருக்கிறது; பரீட்சைக்காக கெடுதியையும், நன்மையையும் கொண்டு நாம் உங்களைச் சோதிக்கிறோம். பின்னர், நம்மிடமே நீங்கள் மீட்கப்படுவீர்கள்” -குர்ஆன் 21:35

“நீங்கள் எங்கிருந்தபோதிலும் உங்களை மரணம் அடைந்தே தீரும்; நீங்கள் மிகவும் உறுதியாகக் கட்டப்பட்ட கோட்டைகளில் இருந்த போதிலும் சரியே!”
-குர்ஆன் 4:78

"அவர்களுக்கு நாம் செல்வத்தையும் சந்ததிகளையும் அதிகமாகக் கொடுத்திருப்பது பற்றி அவர்கள் என்ன எண்ணிக்கொண்டார்கள்? அவர்களுக்கு நன்மைகளில் நாம் விரைந்து வழங்குகிறோம் என்று அவர்கள் எண்ணிக் கொண்டார்களா? அவ்வாறல்ல அவர்கள் இதை உணர்வதில்லை."
-குர்ஆன் 23:55,56

"இன்னும், நீங்கள் நிரந்தரமாக இருப்போம் என்று, (அழகிய வேலைப்பாடுகள் மிக்க) மாளிகைகளை அமைத்துக் கொள்கின்றீர்களா?"
-குர்ஆன் 26:129

இது போன்ற திடீர் மரணங்கள் எல்லாம் நமக்கு இறைவனைப் பற்றிய அச்சத்தை அதிகமாக்க வேண்டும். நமக்கும் ஒரு நாள் இது போன்ற மரணம் நிகழப் போகிறதே...அதற்கான நன்மையான காரியங்களை நாம் செய்திருக்கிறோமா என்று ஒவ்வொருவரும் தனக்குத் தானே கேட்டுக் கொள்ள வேண்டும்.
---------------------------------------------------------------

டோண்டு ராகவன் அவர்களுடன் ஒரு சந்திப்பு!


இரண்டு நாட்களுக்கு முன்பு புனித ஹஜ் பயணம் முடித்து வரும் என் தாத்தாவை அழைப்பதற்காக சென்னை சென்றிருந்தேன். இதுவரை முகம் தெரியாமல் இணையத்தின் மூலமே தொடர்பு கொண்டிருக்கும் ஒரு சில வலைப்பதிவர்களை சந்தித்தால் என்ன? என்ற எண்ணம் வரவே நமது டோண்டு ராகவன் சாருக்கு தொலை பேசினேன். டோண்டு சார் 15 நிமிடத்தில் பன்னாட்டு விமான நிலையத்தில் ஆஜர்.

விமானம் ஏழரைக்கு சென்னையை அடைந்தது. இமிக்ரேஷன் முடிந்து தாத்தா வெளியாக 9.30 ஆகி விட்டது. இடைப்பட்ட இந்த இரண்டு மணி நேரத்தை நம் ராகவன் சாரோடு கழித்தேன். முதல் சந்திப்பு என்றாலும் நெடுநாள் பழகியது போல் மிகவும் இயல்பாக பேசினார். மதத்தால் கலாச்சாரத்தால் வேறுபட்டிருந்தாலும் இணையத் தமிழ் எங்கள் இருவரையும் இணைத்துள்ளது. இருந்த இரண்டு மணி நேரத்தில் மனிதர் சளைக்காமல் பல விபரங்களை சொல்லிக் கொண்டும் என்னிடம் சில கேள்விகள் கேட்டுக் கொண்டும் இருந்தார். சிலருக்கு வயது ஏற ஏற இளமை கூடிக் கொண்டு போகும் என்பது இதுதானோ!

டோண்டு ராகவன் பற்றி முன்பு நான் இட்ட பதிவு

http://suvanappiriyan.blogspot.com/2007/02/blog-post_04.html

-------------------------------------------------------------------

நான் இட்ட பதிவுக்கு பதிலாக டோண்டு சார் இட்ட பதிவு

முந்தா நேற்று (01.02.2007) அவரிடமிருந்து காலை 7.15 அளவில் ஃபோன் வந்தது. தான் சென்னை விமான நிலையத்தில் பன்னாட்டு வருகைகள் அருகில் வெளியே நிற்பதாகவும் தன்னை வந்து நான் பார்க்க முடியுமா என்று கேட்டார். அவர் தனது அன்னை வழி தாத்தாவை ரிசீவ் செய்ய நிற்பதாகவும் கூறினார். எங்கள் வீட்டிலிருந்து ஏர்போர்ட் ரொம்ப தூரம் இல்லை, 5 கிலோமீட்டர்கள் சாலை வழியே, 2 கிலோமீட்டர்கள் மட்டுமே, நீங்கள் காக்கையாக இருக்கும் பட்சத்தில்.

ஆட்டோ எடுத்து சென்று அவரைச் சந்தித்தேன். அப்போது மணி காலை 7.30. சுவனப்பிரியன் என்னை அடையாளம் கண்டு கொண்டார். மனிதர் ஆறடி உயரத்துக்கு நல்ல ஆஜானுபாகுவாக இருந்தார். சவுதி ஃப்ளைட் வந்து விட்டிருந்தது. அதில்தான் அவர் தாத்தா தனது ஹஜ்ஜை முடித்து கொண்டு வந்திருந்தார். ஆனால் உள்ளேயே பல ஃபார்மாலிட்டீஸ்கள். கிட்டத்தட்ட 2 மணி நேரம் போல ஆகிவிட்டது. அவர் வெளியே வரும்போது மணி 9.30.


எங்களின் சந்திப்பு சம்பந்தமாக ராகவன் அவர்கள் போட்ட பதிவு இங்கே
http://www.dondu.blogspot.com/2007/02/blog-post.html

Tuesday, February 05, 2013

நமது நாடு எங்கே போய்க் கொண்டிருக்கிறது?



ராஜபாளையம்: விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் வன்னியம்பட்டி அருகே ஒருதலை காதலால், பள்ளி மாணவி எரித்து கொலை செய்யப்பட்டார். இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட, இரு குழந்தைகளின் தந்தை மீது, மண்ணெண்ணெய் தெறித்ததில், அவரும் கருகி இறந்தார்.

சினிமாக்களில் காதலை புனிதமாக்கி இது போன்ற கிறுக்கர்களை உருவாக்கியதுதான் மிச்சம். வாழ வேண்டிய அந்த குருத்து இன்று கருகி விட்டது. வெளியில் வந்த செய்தி இது. வெளியில் வராமல் மண்ணுக்குள் புதைக்கப்படும் நிகழ்வுகள் ஏராளம். மாணவியை இழந்து தவிக்கும் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

-----------------------------------------------------------




பீகார் மாநிலத்தில் பகவல்பூர் என்னும் இடத்தில் ஒரு பெண் கற்பழிக்கப்பட்டு தூக்கில் தொங்கவிட்டு கொல்லப்பட்டுள்ளார். இந்த பெண் தலித் சமூகத்தை சேர்ந்தவர். டெல்லி மாணவிக்காக குரல் கொடுத்த எவருமே இந்த அபலைப் பெண்ணுக்கு ஒரு அசைவைக் கூட காட்டவில்லை. கற்பழிப்பை கண்டிப்பதில் கூட சாதி வித்தியாசம் பார்க்கும் நாடு நமது நாடாகத்தான் இருக்கும்.

-----------------------------------------------------------

சென்ற மாதத்தில் மட்டும் நமது அண்டை மாநிலங்களில் நடந்த கற்பழிப்பு கொடூரங்கள். கடுமையான சட்டங்களை அமுல்படுத்துவதின் மூலமும் ஆபாச சினிமாக்களை தடை செய்வதன் மூலமாகவும் இந்த கொடுமைகளை ஓரளவு கட்டுக்குள் கொண்டு வரலாம். இந்த நாட்டில் உழைக்கும் சாதியில் பிறந்ததுதான் இந்த பெண்கள் செய்த குற்றமா?

Man gets life term till death for kidnapping, raping minor
A 40-year-old man was sentenced to life imprisonment till death by a local court for raping a minor girl repeatedly for nearly a week after kidnapping her. Gwalior: A 40-year-old man was sentenced to life imprisonment till death by a local court for raping a minor girl repeatedly for nearly a week after kidnapping her.
By Zee NewsPosted at January 25 2013, 5:13 pm

Tags: Madhya Pradesh, Minor, Rape, Life Imprisonment
Minor girl alleges molestation by judicial officer
A judicial officer has been accused of engaging in an obscene act with a minor girl. Gonda: A judicial officer has been accused of engaging in an obscene act with a minor girl, with the Civil Bar Association on Thursday threatening to boycott the court of the magistrate concerned until action was taken against him in the matter. According to Dinesh Kumar Pandey, the secretary of the lawyers` body, a 13-year-old girl has complained to their president that the said magistrate locked her inside a room and tried to engage in an obscene act with her when she went to him on January 21 to record her statement in a case of kidnapping. Gonda SP Navneet Rana said that he had written to the Gonda district judge regarding the incident and was awaiting his orders before taking any steps.
By Zee NewsPosted at January 24 2013, 2:12 pm

Tags: Uttar Pradesh, Molestation, Minor gir, Judicial officer
Fast track court acquits man accused of raping girl
A 38-year-old man, accused of kidnapping and raping a girl has been acquitted by a fast track court here after the alleged victim deposed that she had lodged the complaint against him under duress from her family. New Delhi: A 38-year-old man, accused of kidnapping and raping a girl has been acquitted by a fast track court here after the alleged victim deposed that she had lodged the complaint against him under duress from her family. The judgement was passed by one of the special fast track courts set up here to try exclusively the cases of sexual offences. Additional Sessions Judge Yogesh Khanna let off Faridabad resident Shakil Ahmed saying "nothing incriminating" has been said against the accused by the girl or her parents in their statements to prove the charges against him.
By Zee NewsPosted at January 21 2013, 2:40 pm
Tags: Rape, Fast track court, Delhi

Girl gang-raped, filmed and thrown out of moving car in Punjab
A woman has alleged that she was raped by two men after being abducted from Chandigarh and later thrown out of a car in Bathinda district, police said. Bathinda: Another incident of gang rape came to light in north India when a woman was thrown out of a moving car after being forced upon for two days in Punjab. A man and two women kidnapped the victim, who had gone to Chandigarh for a job interview, on Friday (January 18) on the pretext of asking directions, after which she was drugged and raped at a deserted location. The accused then drugged her again and threw her out of a moving car near Bathinda on Sunday (January 20), where she was found and taken to a local hospital.
By Zee NewsPosted at January 21 2013, 10:55 am
Tags: Punjab, Gangrape, Girl gang-raped

Thane youth jailed for abduction of teenage girl
A 21-year-old youth was sentenced to 18-month rigorous imprisonment by a local court after he was found guilty of kidnapping a teenage girl and taking her to Delhi in 2011. Thane: A 21-year-old youth was sentenced to 18-month rigorous imprisonment by a local court after he was found guilty of kidnapping a teenage girl and taking her to Delhi in 2011.
By Zee NewsPosted at January 19 2013, 10:41 pm
Tags: Maharashtra, teenage girl, abduction
Thane youth jailed for abduction of teenage girl
A 21-year-old youth was sentenced to 18-month rigorous imprisonment after he was found guilty of kidnapping a teenage girl and taking her to Delhi in 2011. Thane: A 21-year-old youth was sentenced to 18-month rigorous imprisonment by a local court after he was found guilty of kidnapping a teenage girl and taking her to Delhi in 2011. Thane Additional Sessions Judge A A Sayeed convicted Ravi Kanchan Agrasen on Thursday after he allegedly abducted the minor, a tenth grade student whom he befriended on an earlier trip to Delhi after which they exchanged numbers and kept in regular touch. According to prosecution, 0n July 9, 2011, the accused wooed the girl and took her to Mumbai Central, from where they boarded a train to Delhi.
By Zee NewsPosted at January 19 2013, 12:08 pm
Tags: Mumbai, Thane youth, Thane teenager

Minor dalit girl kidnapped in Moga
A case has been registered against an unidentified youth for allegedly kidnapping a minor Dalit girl here, police said Friday. Moga: A case has been registered against an unidentified youth for allegedly kidnapping a minor Dalit girl here, police said Friday.
By Zee NewsPosted at January 18 2013, 2:58 pm
Tags: Moga, Punjab, Dalit Girl Kidnapping

Police draw flak for crackdown on young lovers in Odisha
Young girls & boys were made to kneel down in front of police station for allegedly "kissing, cuddling & holding hands" in public places by cops. Jajpur: Young girls and boys were made to kneel down in front of police station for allegedly "kissing, cuddling and holding hands" in public places by cops in Jajpur district, sparking criticism from activists. While women organisations and human rights body alleged that it was violation of rights, police claimed the the "drive is being undertaken taken to avoid complications like rape, murder or kidnapping of young girls". The incident took place yesterday when the Jajpur police "caught" at least three couples, all college students, from a park at Jajpur town.
By Zee NewsPosted at January 16 2013, 10:39 pm
Tags: Jajpur district, girls and boys, public places, Odisha police

My husband should be hanged, demands rapist`s wife
The wife of a serial offender, who allegedly raped and murdered a minor girl following release from jail after serving sentence in similar offences, says her husband should be "hanged for the heinous crime." Shirdi: The wife of a serial offender, who allegedly raped and murdered a minor girl following release from jail after serving sentence in similar offences, says her husband should be "hanged for the heinous crime." "My husband has committed a heinous crime and he should be punished as soon as possible. He should be hanged to death," said 28-year-old Sarika Salve, the wife of Sunil Suresh alias Pappu Salve (32) who was arrested two days ago for kidnapping, raping and then murdering a nine-year-old girl in Shirdi town of Maharashtra`s Ahmednagar district on December 28 last year.
By Zee NewsPosted at January 14 2013, 6:47 pm
Tags: Maharshtra, Rape, Husband, wife, hang

Minor girl kidnapped, 4 youths arrested in Odisha
Four youths, including two engineering students, were arrested for allegedly kidnapping a minor girl who was rescued by the police in Jajpur district. Jajpur (Odisha): Four youths, including two engineering students, were arrested for allegedly kidnapping a minor girl who was rescued by the police in Jajpur district, police said on Monday. The 14-year-old girl who was abducted and confined to an abandoned house at Sapanpur under Jajpur municipal town limits was rescued by the police yesterday. The youths aged around 20 years were arrested from the spot, they said. While the principal accused, Raghunath Behera alias Dipu, managed to escape, those arrested were identified as Kharavela Rout of Sanabazar, Debiprasad Samal of Sanabazar, Manas Bhattacharya of Ambikai and Chiranjit Rout of Srirampur. While Kharavela and Debiprasad are engineering students, Manas and Chiranjit are studying in a private ITI.
By Zee NewsPosted at January 14 2013, 1:13 pm
Tags: Odisha, Minor girl, Kidnap, rape

http://www.india.com/topic/kidnapping+girl/page/2.html


Sunday, February 03, 2013

சினிமா வீழ்ந்தால் தமிழகம் நிமிரும்!



ஒரு வழியாக விஸ்வரூபம் பிரச்னைகள் முடிந்து வெளியிட தயாராக உள்ளது. பிராமணர் சங்கம் இடையில் ஒரு காட்சியை நீக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார்களாம். அது அவர்களின் உரிமை. இப்படியே போனால் நாங்கள் எப்படி படம் எடுப்பது என்ற வாதமும் வைக்கப்படுகிறது. இந்த கூத்தாடிகளின் வருமானத்துக்காக மற்றவர்கள் பலிகடா ஆக வேண்டுமா என்று நாமும் அவர்களைப் பார்த்து கேட்கலாம். இது போன்ற பிரச்னைகளால் சினிமா தொழில் படுத்து விடும் என்று நினைக்கலாம். அப்படி ஒரு நிகழ்வு நடந்தால் அது தமிழகத்துக்கு ஒரு விடிவு காலமாகவே அமையும். இன்று வரை சமூகம் சீரழிந்ததற்கு முக்கிய காரணம் இந்த சினிமா என்றால் மிகையாகாது. சமூகத்துக்கு இந்த சினிமாவால் விளைந்த நன்மைகள் என்று தேடிப் பார்த்தாலும் கிடைக்காது. எனவே சினிமா வீழ்ந்தால் தமிழகம் நிமிரும் என்றால் அது மிகையில்லை.


இது ஒரு படம் தானே! ஏன் இந்த அளவு எதிர்ப்பு என்று பலரும் யோசிக்கலாம். வேறு நாட்டவருக்கு இந்த இஸ்லாத்தின் மகிமை தெரிய வாய்ப்பில்லை. ஆனால் ஆண்டாண்டு காலமாக சாதியின் கோரப் பிடியில் சிக்கித் தவித்த இந்த பாரத நாட்டில் இஸ்லாம் என்று நுழைந்ததோ அன்றே வர்ணாசிரமத்துக்கு சாவு மணி அடிக்கப்பட்டது. எங்கு செல்வது என்று திக்குத தெரியாமல் தவித்த அந்த மக்களை அன்பாக அரவணைத்துக் கொண்டது இஸ்லாம். அந்த மக்களுக்கு மதம் மாறிய இஸ்லாமியருக்கு வழி வழியாக அதே இன்பம் இன்று வரை கிடைத்து வருகிறது. வேத நூலான குர்ஆன் மற்றவர்களுக்கு ஒரு சாதாரண புத்தகமாக தெரியலாம். ஆனால் முஸ்லிம்களுக்கோ தனது வாழ்க்கையை அமைத்துக் கொள்ளும் சட்ட புத்தகம்.

இந்து மதத்தை பலமுறை கேலி செய்துள்ளார். நாங்கள் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லையே? நீங்கள் ஏன் கொதிக்கிறீர்கள்? என்று வாதம் வைக்கப்படுகிறது. இந்து மக்களில் 90 சதவீதமான பேர் தங்களின் வேதத்தின்படி வாழ்க்கையை அமைத்துக் கொள்ளவில்லை. விரும்புவதும் இல்லை. அந்த வேதங்கள் இறைவன் அருளியதுதானா என்ற நம்பிக்கையும் பலருக்கு இருக்கவில்லை. நாத்திகனாகவும் ஆத்திகனாவும் இருந்து கொள்ள இந்து மதம் அனுமதிக்கிறது. ஆனால் குர்ஆனை இறை வேதம் என்று நம்பவில்லை என்றால் அவன் இஸ்லாத்திலிருந்து வெளியேறி விடுவதாக இஸ்லாத்தின் கட்டளை. கமல் தனது மதத்தின் குறைகளை பொதுவில் வைப்பதற்கும் இஸ்லாத்தை வம்புக்கிழுப்பதற்கும் நிறைய வித்தியாகம் உள்ளது. தாலிபான்களின் நடவடிக்கைகள் இஸ்லாத்துக்கு மாற்றமாக உள்ளதாக கதை பிண்ணனி அமைந்திருந்து பிறகு அந்த இளைஞன் குர்ஆனின் வசனங்களை படித்து திருந்துவதாக காட்சி அமைத்திருந்தால் முஸ்லிம்களும் வரவேற்றிருப்பர். ஆனால் இவரோ தீவிரவாத செயல்களுக்கு குர்ஆனின் வசனங்களும் இஸ்லாமிய சட்ட திட்டங்களுமே காரணம் என்பதை மிக லாவகமாக புகுத்துகிறார். இஸ்லாமியர்களிலும் நாத்திகர்கள் உருவாக வேண்டும் என்று கனவு காண்கிறார். அமெரிக்காவை புகழ்ந்து தனது ஆஸ்கார் கனவை நனவாக்கத் துடிக்கிறார். இது அனைத்துமே கானல் நீர்தான் என்பதை சில காலம் கழித்து புரிந்து கொள்வார்.

சமீபத்தில் விஸ்வரூபம் சம்பந்தமாக நான் படித்த சில விமரிசனங்களை அப்படியே காப்பி பேஸ்ட் செய்கிறேன். படிதது கருத்துக்களை பகிருங்கள்.

-----------------------------------------------------------

விஸ்வரூபம் 100/100

டக்ளஸ் அண்ணே,

கமல் கோய்ச்சிக்கிட்டு தமியகத்தை விட்டு அமெரிக்காவுக்கு ஓடிப் போகப் போறதும் இல்லை;

ரசினி காந்து 'தோ வர்றேன் தோ வர்றேன்னனு' சொல்லிட்டு அரசியலுக்கு வரப்போறதும் இல்லை.

இது சினிமாண்ணே... டிக்கிட்டு வாங்கினோமா, பார்த்தமான்னு போய்ட்டே இருக்கணும்.

000

"டேய் மவனே, நம்மள ஏசப்பா காப்பாத்திட்டாரு. கை விடலை. அல்லேலுயா. இல்லைன்னா துப்பாக்கிக்கும் இதே கதிதான் ஆகி இருக்கும்." எஸ். ஏ. சந்திர சேகர் இப்படி இளைய தளபதியிடம் சொல்லி இருக்க சான்ஸ் நிறைய இருக்கு!

000

"கமல்ஹாசன், ஒபாமாவிடம் சூட்கேஸ் வாங்கிய புகைப்பட ஆதாரம் என்னிடம் இருக்கிறது!"
விஸ்வரூபம் படத்துக்கான ஓசி டிக்கெட் கிடைக்கவில்லையென்றால், சு.சாமி இப்படியும் சொல்லக்கூடும்.

விஸ்வரூபம் : பட விமர்சனம் :

சினிமாட்டிக்கா சொல்லணும்னா, சரியான சிச்சுவேஷன்!
மிகச் சரியான லொகேஷன்!
மெட்டுக்குப் பாட்டா, பாட்டுக்கு மெட்டான்னு மக்களால கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு மெஸ்மரைசிங் மெலடி.
நான் இந்தியனா, தமிழனா, அமெரிக்கனா, இடியட் இந்துவா அல்லது முட்டாள் முசுலீமா என நம்மையே குழப்பிவிடும் அற்புதமான எடிட்டிங்.
ட்விஸ்ட்டுமேல ட்விஸ்ட்டா வந்த திரைக்கதை அமைப்பு.
இந்துக்களும் முசுலீம்களுக்குமான அந்தர் பல்ட்டி ஸ்டண்ட்.
"இந்தியா இடம் கொடுக்கலைன்னா நான் அமெரிக்கா போறேன்" போன்ற சென்டிமென்ட் வசனங்கள்.
கோலிவுட்டில் கோலி விளையாடிய ஹாலிவுட் தமிழ்ப்படம். ஃபன்டாஸ்டிக் ப்ரிமியர்.
நாம முட்டாளா இருந்தா, இந்தப் படத்துக்கு கண்டிப்பா, மார்க் 100/100.

000

கோர்ட்டு தீர்ப்பு மட்டும் வராமல் இருந்திருந்தால், "விஸ்வரூபம் படத்தைப் பார்த்தால் கிட்னிக்கு மிகவும் நல்லது," போன்ற அறிவுபூர்வமான விஞ்ஞான விளக்கங்களை நம்ம 'பாஞ்சி நாள் புகழ் நாராசாமி' அறிவிக்க வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டிருக்கலாம்!

000

http://puthiyapaaamaran.blogspot.com/2013/01/100100.html

--------------------------------------------------------------

Noorul Amin

“மெல்லிய இதயம் உள்ளோர்க்கு ஒரு எச்சரிக்கை: தினம் உலகச் செய்திகளில் காணும் வன்முறைக் காட்சிகள் சில எம் படத்திலும் கதைக்கேற்ப சித்தரிக்கப்பட்டுள்ளது. திடமனதுடன் காண்க.” என்கிற வாசகத்தோடு ஆரம்பிக்கிறது விஸ்வரூபம். இங்கு வாசிக்கும்/கேட்கும் என்ற சொல் இல்லாமல் “காணும்” என்கிற சொல்லின் பின்னால்தான் கமல் தன் பாசிச பரப்புரையை கட்டமைக்கிறார். பொதுவாக செய்திகளில் கழுத்தறுப்பது தூக்கிலிடுவது போன்ற வன்முறை காட்சிகள் காணொளியாகவோ புகைப்படமாகவோ காண்பிக்கப்படுவதில்லை. அப்படியே காட்டப்பட்டாலும் சில இடங்கள் மறைக்கப்பட்டிருக்கும் .இவற்றை எந்த செய்தி ஊடகங்களில் “கண்டார்” என்பதை கமல்தான் விளக்க வேண்டும். அவர் செய்திகளில் “கண்ட” கருவருத்தல் காட்சியை உன்னைப் போல் ஒருவன் படத்தில் காட்சிப்படுத்தாமல் வசனம் மூலமாக சொல்லத் தெரிந்த கமலுக்குக்கு விஸ்வரூபத்தில் பல செய்திகளை காட்சிப் படுத்தம் தேவையை அவரது ஹாலிவுட் தாகம் ஏற்படுத்தியிருக்கிறது பாவம். அல்லது படத்திற்கு நிதியுதவி செய்ததாக சந்தேகிக்கப்படும் அவரது ரகசிய முதலாளிகளின் ஏகாதிபத்திய அரிப்பிற்கு இதமாக சொறிந்துவிட கமல் தன் கலை விரலகளை பயன்படுத்தியிருக்கலாம்.

இங்கு ஒரு சிறிய நினைவுறுத்தல். ஹாலிவுட் இயக்குனர் குவெண்டின் டாரண்டினோ ஒரு பேட்டியில் கில் பில் படத்தில் சில வன்முறை காட்சிகளை அனிமேஷனில் காட்டும் உத்தியை ஒரு இந்திய திரைப்படத்தில் இருந்து எடுத்துக் கொண்டதாக சொல்லியிருக்கிறார். அந்த படம் ஆளவந்தான். ஹாலிவுட் இயக்குநகளே வியக்கும் வண்ணம் தன் படங்களின் காட்சிகளை அமைக்கும் திறம் படைத்த கமல் கழுத்தறுப்பு, தூக்கிலிடும் காட்சிகளை அப்பட்டமாக காண்பித்தது தற்செயலானது அல்ல. ஏற்கனவே ஹேராம் படத்தில் ஒரு முஸலிம் வன்முறையாளன் ராணி முகர்ஜியின் கழுத்தை அறுக்கும் காட்சி தத்ரூபமாக எடுக்கப்பட்டதும் தற்செயலாக இருக்க வாய்ப்பில்லை.

தேவர் மகன், விருமாண்டி போன்ற படங்களில் தலையை வெட்டும், கையை வெட்டும் காட்சிகளை கமல் வைத்திருந்தாலும் அந்த படங்களின் இயக்குனர் கமல் இல்லை. அந்த படங்களின் காட்சிகள் உண்மைச் செய்திகளின் அடிப்படையில் அமைக்கப் பட்டதாகவும் அதற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும் கூறப்படாததால் அவை கற்பனையானவை என புறந்தள்ளிவிடலாம்.

நிருபமா (பூஜா குமார்) படத்தின் ஆரம்பத்திலேயே ”மிடில் கிளாஸ் ஊழல்” என்று எதை கூறுகிறார் என்று ஒரு குழப்பம் ஏற்படுகிறது. ஒரு காலத்தில் லோ கிளாஸ் ஆக இருந்தவர்களையெல்லாம் இடஓதுக்கீடு இன்று மிடில் கிளாஸ் ஆக்கியிருக்கிறது. ஒருவேளை இதைதான் மிடில் கிளாஸ் ஊழல் என படத்தின் இயக்குனர் குறிப்பிடுகிறாரோ?

பணத்தை வங்கியில் போடாமல் இரும்பு பெட்டியில் ஏன் வைக்கிறாய் என்கிற நிருபமாவின் கேள்விக்கு அமேரிக்க வங்கிகளின் மேல் எனக்கு நம்பிக்கை உண்டு ஆனால் என்னுடைய மத்திய கிழக்கு வாடிக்கையாளர்கள் மேல் அமேரிக்க வங்கிகளுக்கு நம்பிக்கையில்லையே என தீபக் பதிலளிக்கிறான். அமேரிக்காவின் மிகபெரிய வங்கியான சிட்டி வங்கியின் கணிசமான பங்குகளை வைத்திருப்பது சவுதி இளவரசர்களில் ஒருவரான அல் வலித் பின் தலால் என்பதை அறியாத மக்களுக்கு இந்த வசனம் ஆச்சரியமளிக்காமல் இருக்கலாம். எனக்கு சற்று வியப்பை தந்தது என்னவோ உண்மைதான். அந்த காட்சியியை தொடர்ந்து ஓசாமா கொல்லப்பட்டதை குறித்து அமேரிக்க அதிபர் ஓபாமாவின் உரை வருகிறது.. அப்போது விஸ்வநாத் “மனுஷாளோட சாவை இப்படியா தீபாவளி மாதிரி கொண்டாடுறது” என தன் எதிர்ப்பை தெரிவிக்கிறார்.. மேலும் அங்கு ஆண்ட்ரியா “அசுராளக் கொன்னா கொண்டாடதானே செய்வா?” என கேட்க அதற்கு சேகர் கபூரின் பதில். ”அத அசுரனோட அண்ணன், தம்பி, பொண்டாட்டி புள்ளைகிட்ட சொல்லு பாப்போம்” என்கிறார். இங்கு ஒசாமாவின் சாவை பார்ப்பன பெண்ணான ஆண்ட்ரியா கொண்டாடுகிறாள், பார்ப்பனரான சேகர் கபூர் நடுநிலை வகிக்கிறார். பார்ப்பன பெயரில் வாழும் முஸ்லிமான கமல் மட்டும் வருத்தம் தெரிவிக்கிறார்.. இதற்கு அடுத்த காட்சியிலேயே கமல் பள்ளிவாசலுக்கு சென்று தொழுவது காட்டப் படுகிறது.. அதாவது என்னதான் இந்திய உளவு அமைப்பான ரா வின் அதிகாரியாக இருந்தாலும், விஸ்வநாத் என்கிற இந்துப் பெயரில் வாழ்ந்தாலும், அமேரிக்க மண்ணில் பிழைப்பு நடத்தினாலும் ஒரு (இந்திய) முஸ்லிம் ஓசாமா போன்ற பயங்கரவாதிகள் கொல்லப்பட்டால் வருத்தப்படத்தான் செய்வான் என்னும் பாசிச கருத்துருவாக்கத்தை சப்தமில்லாமல் செய்கிறார் கமல்..

பின்னர் கமல் ஒரு முஸ்லிம் என தெரிந்த பிறகு தீபக் கமலிடம் நீ முஸ்லிமா? அதன் பிறகு நம்முடைய பிரச்சினையை மூன்றாவது மனிதன் பேச வேண்டாமே என அவளை (தன் மனைவியை) தனியாக இழுத்து செல்லும் கமலைப் பார்த்து ”அவள தொட்டன்னா கையை உடைச்சுடுவேன்” என மிரட்டும்போது ஒரு இந்து பெண்ணை முஸ்லிமான நீ எப்படி தொடலாம் என்னும் துணைக் கேள்வி தொக்கி நிற்கிறது.. குஜராத் கலவரத்தின்போது முஸ்லிம் ஆண்களை காதலித்து மணந்த இந்துப் பெண்களை இந்துத்துவ தீவிரவாதிகள் குறி வைத்து கொன்ற செய்திகள் நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை. ஆனால் நிருபமா கமலுடன் உடல் ரீதியாக கணவன் மனைவியாக வாழாத (வாழந்திருந்தால் கமல் முஸ்லிமா என்கிற சந்தேகம் என்றோ வந்திருக்குமே) காரணத்தினாலும். அவளே கமலுடன் வாழவிரும்பாத காரணத்தினாலும் மன்னிக்கப் படுகிறாள்.

வாயில் ஒட்டுவதற்கான டேப்பை கமல் வீட்டு கத்திரியை எடுத்து வெட்டும் தீவிரவாதியை பார்த்து ”எங்காத்து கத்திரியால உன் டேப்பை ஏன் வெட்டற” என நிருபமா சொல்லும் தீண்டாமை வசனங்கள் வேறு இடைச் செருகலாக வருகின்றன. தன்னை எதுவும் செய்யும்முன் துஆ செய்யவேண்டும் என் கோரிக்கை விடுத்து கைக்கட்டுகளை அவிழ்த்த பிறகு அந்த இடத்தில் இருக்கும் தீவிரவாதிகளை அடித்து வீழ்த்தும் காட்சிகளையும் அங்கு பின்னணியில் வரும் “யாரென்று தெரிகிறதா. இவன் தீ என்று புரிகிறதா” எனும் பஞ்ச் பாடலையும் பார்த்து ஒரு முஸ்லிமை வீரனாக காட்டிருக்கிறாரே என்று புளகாங்கிதமடைந்து விடுவார்கள் இந்த முட்டாள் துலுக்கர்கள் (காலம்காலமாக தமிழ்நாட்டில் இருக்கும் ஒரு வழக்குச் சொல்தான்) என்ற கணக்கில்தான் இது முஸ்லிகளுக்கு எதிரான படம் இல்லையென மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வந்திருக்கிறார் கமல். ..

கமல் தீவிரவாதியின் பிடியில் இருந்து தப்பித்து சென்றபின் “இத்தனை பேர் இருக்கும்போது எப்படி அவன் தப்பிச்சு போனான்?” என்கிற கேள்விக்கு உமரின் பதில் ”மறந்துட்டியா? இதில் என்ன ஆச்சரியம்? அவன் ட்ரெயினிங் குடுத்த்து அல் காய்தாவிற்கே?” ஒரு இந்திய/தமிழ் முஸ்லிமை நம்பிக்கையோடு ரா போன்ற அமைப்புகளில் சேர்த்துக் கொண்டாலும் அவன் வாய்ப்பு கிடைத்தால உளவு பார்க்கும் வேலையை விடுத்து அல் காயிதாீபோன்ற தீவிரவாத அமைப்புகளுக்கே பயிற்சி அளிப்பான். ஆப்கான்/அரேபிய முஸ்லிம் தீவிரவாதிகளை விட புத்திசாலியான தமிழ் முஸ்லிம் தீவிரவாதி (அவன் ரா உளவாளியாகவே இருந்தாலும்) ஆபத்தானவன் என்கிற கருத்துருவாக்கத்தை ஏற்படும் முயற்சியாகவே இதை பார்க்க வேண்டியிருக்கிறது.

தாலிபான் தீவிரவாதி உமரின் அறிமுக காட்சியில் அவன் தனது செயற்கை கண்னை பொறுத்துகிறான். உண்மையான தாலிபான் தலைவன் முல்லா உமருக்கும் ஒற்றைக் கண்தான். என்று செய்திகளில் படித்தது நினைவிற்கு வருவதை தவிர்க்க முடியவில்லை. இந்த கதை கற்பனையல்ல உண்மைதான் என நிறுவும் முயற்சியாகதான் இதை பார்க்க வேண்டியிருக்கிறது.,

அமேரிக்காவில் வாழும் எல்லா இஸ்லாமிய தீவிரவாதிகளும் தமிழ் பேசுகிறார்கள். விஸ்வநாத்தையும் நிருபமாவையும் கடத்தி செல்லும் காட்சிகளில் மட்டும் யெல்லா யெல்லா (நட நட) என அரபியில் கதைக்கிறார்கள் (ஒருவேளை வளைகுடா நாடுகளுக்கு வேலைக்கு போன தமிழ்நாட்டு தீவிரவாதிகள் எல்லாம் அமேரிக்காவில குடியேறிவிட்டார்களோ என்னவோ?) ஆப்கான் தீவிரவாதி ஒருவன் தமிழ் பேசுவது ஒரு லாஜிக் ஓட்டையாக மட்டுமே பார்க்கப்பட்டிருக்கும். சமீபத்தில் வந்த சிறுத்தை என்கிற மசாலா படத்தில் கூட ஆந்திராவில் நடக்கும் கதையில் எல்லோரும் தமிழ் பேசுவதை ஒரு விளக்க செய்தியை போட்டு ஏற்க வைத்திருப்பார்கள். பல ஆஸ்கர் விருதுகளை வென்ற ஸ்லம்டாக் மில்லியனர் படத்தில் கூட மும்பையின் தாராவியின் குடிசைப் பகுதியில் வளரும் குழந்தைகள் சரளமாக ஆங்கிலம் பேசியதை உலகத்தின் பெரும்பாலான ரசிகர்கள் ஏற்றுக்கொண்டார்கள். ஆகவே ஆப்கன் தீவிரவாதி தமிழ் பேசுவதற்கான காரணியை விளக்கும் உரையாடலின் பின்னால் உள்ள அரசியலை புரிந்துகொள்வதில் சிரமமேற்படவில்லை.

”நீங்க எங்கே தமிழ் கத்துகிட்டிங்க?”

”தமிழ்நாட்டுல! ஒரு வருஷம் ஒளிஞ்சுகிட்டுருந்தேன். கோயம்புத்தூர், மதுரை, அயோத்தியா. அகமதாபாத்.” இதில் அயோத்தியாவையும், அகமதாபாதையும் எப்போது தமிழ்நாட்டில் சேர்த்தார்கள் என்று தெரியவில்லை.

இந்த நான்கு நகரங்களில் கடந்த காலங்க்ளில் குண்டுவெடிப்புகள் நடந்திருக்கின்றன. தமிழ்நாட்டில் நடந்த குண்டுவெடிப்புகளுக்கும் வடநாட்டில் நடந்த குண்டுவெடிப்புகளுக்கும் தொடர்பு இல்லாததாகவே நம்ப பட்டிருக்கிறது. இவற்றிற்கு எல்லாம் தொடர்பு உண்டு என நம்ப வைக்கும் முயற்சியன்றி வேறென்ன?

தமிழ்நாட்டில் உமர் மட்டும்தான் சுற்றினானா அல்லது அவன் அல்லக்கைகளும் சுற்றினார்களா?. சுற்றாத பட்ச்ததில் அவர்கள் எப்படி தமிழ் பேசுகிறார்கள்? முற்றிலும் அந்நியமான ஒரு மொழியை ஒரே வருடத்தில் கற்றுக் கொள்வது என்பது சாத்தியமே இல்லை. இது என் சொந்த அனுபவம். நான் தமிழ், ஹிந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளை சரளமாகவும். தெலுங்கு, கன்னடம் ஒரளவிற்கு நன்றாக பேசுவேன். ஆனால் எனக்கு முற்றிலும் அந்நியமான் மொழியான அரபு மொழியை ஒரு வருடத்திற்கு மேலாகவும் சவுதி அரேபியாவில் வேலை பார்த்தும் கற்றுக் கொள்ளமுடியவில்லை; நான் இரண்டு வருடம் ஜெர்மனியில் இருந்து கற்றுக் கொண்ட ஜெர்மன் மொழி பயிற்சி இல்லாததால் சுத்தமாக மற்ந்தேவிட்டது. இதில் ஆபகானி ஒருவன் ஒரே வருடத்தில் தமிழ் போன்ற ஒரு பழமை வாய்ந்த மொழியை கற்றுக் கொண்டானாம். கேக்குறவன் கேனப் பயலா இருந்தா கார்ல் மார்க்ஸோட பேரன்தான் கமலஹாசன்னு சொல்லுவாங்க போல..

ஆப்கன் தீவிரவாதிகளை தமிழ்நாட்டில் வாழும் முஸ்லிம்களுடன் தொடர்பு படுத்தும் நோக்கத்துடனே எழுதப் பட்டதாக் தோன்றுகிறது. ரோஜாவில் காஷ்மீர் தீவிரவாதியாக வரும் பங்கஜ் கபூர் தமிழில் பேசுவதற்கான காரணம் அவர் கோவையில் படித்ததாகஇருக்கும். காஷ்மீரை சேர்ந்த ஒரு இந்திய குடிமகன் கோவையில் படிப்பதில் ஆச்சரியமேதுமில்லை. மணிரத்னம் உருவாக்கியதை விட மிக ஆபத்தான ஒரு கருத்துருவாக்கத்தை கமல் இங்கு முயற்சிக்கிறார்..

உமரின் நினைவுபடுத்தலில் நாசர் கமலைப் பார்த்து உனக்கு நீ ஆங்கிலத்தில் குர்ஆன் படித்திருக்கிறாயா என கேட்கிறார்.. அதற்கு கமல் இல்லையென பதிலளிக்கிறார். தாலிபான் போன்ற ஒரு அடிப்படைவாத இயக்கத்தில் குர்ஆனே படித்திராத ஒரு மதப்பற்று அல்லது மதவெறியே இல்லாத ஒரு முஸ்லிம் மிக எளிதாக சேர்ந்துவிட முடிகிறது. நாளை நான் எங்காவது சென்று நான் குர்ஆனைப் படித்ததில்லை என்ற உண்மையை சொன்னாலும் இவனுக்கும் தாலிபான்களை போல தீவிரவாத சிந்தனை இருப்பதற்கான வாய்ப்பு உண்டு என்ற் கருத்து உருவாவதற்கான வாய்ப்பிருக்கிறது. இது மிதவாத முஸ்லிம் என்று யாருமே கிடையாது என்கிற ஆர். எஸ். எஸ் சின் நச்சுப் பரப்புரையை ஒத்திருக்கிறது.

”அப்பன் இல்லாத பசங்க உஷாரா இருப்பாங்க. உன்னை மாதிரி. தமாஷ்” இது ராகுல் போஸ் (உமர்) கமலை பார்த்து பேசும் வசனம்.. அதற்கு கமலின் பதில் “அப்பன் யாருனே தெரியாத பசங்க அதைவிட உஷாரா இருப்பாங்களோ உங்களை மாதிரி.. தமாஷ்?” இது கமல் அளிக்கும் பதில். இந்திய முஸ்லிமகள் தம் மனைவியரை தலாக் செய்துவிடுவார்கள். ஆப்கானிய பெண்கள் பெயர் தெரியாத யாருடனும் உறவு கொண்டு பிள்ளை பெற்றுக் கொள்வார்கள் என ஒரு ஆப்கானிய முஸ்லிமும் இந்திய முஸ்லிமும் ஒருவரை ஒருவர் பரஸ்பரம் விமர்சித்துக் கொள்கிறார்கள். ஒருவன் கையை வைத்து அவன் கண்ணைக் குத்தும் கலை கமலுக்கு நன்றாகவே வருகிறது.. அதற்கு பிறகு “டேஞ்சர்பா இந்த ஆளு” என அந்த காட்சியை முடிக்கிறார் ராகுல் போஸ். அதாவது இந்திய/தமிழ் முஸ்லிம்கள் தாலிபான் பார்வையிலேயே மிகவும் ஆபத்தானவர்களாம்.. உசாமா பின் லேடன் போன்ற உருவ அமைப்பை உடைய ஒருவன்“ உச(ர)மா இருப்பாரே நம்ம ஷேக்” என விளிக்கபடுகிறான். பின்னர் “ஷேக் உசாமா எங்கே? அவர பாதுகாக்க வேணாம்” என கமலே கேட்கிறார் இன்னாரை இன்னார் என்று அறிமுகப்படுத்தும் நேர்மை கூட கமலிடம் வெளிப்படவில்லை. இந்த லட்சணத்தில் படத்தின் ஆரம்பத்தில் ஒரு வெங்காய விளக்கம் வேறு.. ஒரு குகைக்குள் அந்த உச(ர)மான ஷேக் கண்முன் தோன்றியதும் கமல் பக்கத்தில் இருக்கும் தீவிரவாதியிடம் ”அது?” என உறுதி படுத்திக் கொள்ளும் தொணியில் வினவ “அவரேதான்! எல்லாருக்கும் இந்த பாக்கியம் கிடைக்காது” என பதில் வருகிறது. அந்த காட்சியின் முடிவில் கடவுளைக் கண்ட பக்தனை போல அந்த உச(ர)மான ஷேக்கைக் கண்டு காமுற்றுக் கொண்டே குகையை விட்டு வெளியேறுகிறான் அந்த இந்திய./தமிழ் முஸ்லிம். ஒரு ரா உளவாளி அவன் முஸ்லிமாக இருந்தால் அந்த உச(ர)மான தீவிரவாதியை பார்த்து பேரின்பம் அடைவான் என ஒரு வக்கிரமான பாசிச செய்தியை இந்த காட்சியின் மூலம் கருத்துருவாக்கம் செய்யப்படுகிறது..

தங்களை காட்டிக் குடுத்ததாக தாங்கள் நம்பும் அரபியை பொது இடததில் தாலிபான்கள் தூக்கிலிடுகிறார்கள்.. அவனது அம்மாவும் அப்பாவும் கதறி அழுகிறார்கள். அப்போது சூரா- அல்- பாத்திஹா ஓதப்படுகிறது. (சூரா அல் பாத்திஹாவின் அர்த்தம், அல்லாவே எங்களுக்கு நேர்வழியை காட்டுவாயாக! எனபதாகும்). அங்கு குழுமியிருக்கும் முஸ்லிம்கள் (கமல் உட்பட) எல்லாரும் வேடிக்கைப் பார்க்கிறார்கள். அந்த அரபி மரணத்துவிட்டான் என்பது உறுதிபடுத்தியபின் சுற்றியிருக்கும் முஸ்லிம்கள் அனைவரும் ஆர்ப்பரிக்கிறார்கள்.

அணு விதைத்த பூமியிலே அறுவடைக்கும் அணுக் கதிர்தான் என கமலின் குரலில் ஒரு பாடல் வேறு ஆப்கானிய காட்சிகளிலே வருகிறது.. அப்படி பார்த்தால் சி.ஐ,ஏ மூலமாக ஓசாமா பின் லேடனை விதைத்ததே அமேரிக்காதான். ஓசாமாவை விதைத்துவிட்டு உமர் கய்யாமையா அறுவடை செய்யமுடியும்.

ஆனால் இத்தனையும் வெளிப்படையாக செய்யும் நேர்மை கமலுக்கு கிடையாது.. தனது பாசிச கருத்துருவாக்கத்திற்கு ஒரு கேடயம் வைத்திருப்பார். ஹே ராம், உன்னைப் போல் ஒருவன் படங்களில் மகாத்மா காந்தி. ஆனால் ஆப்கானிஸ்தானில் நடக்கும் கதையில் காந்தியை எங்கு கொண்டு வருவது. அதனால் விசாம் (கமல்) என்னும் கதாபாத்திரத்தின் மனசாட்சியையே கேடயமாக்கி கொள்கிறார். “நான என் வாழ்க்கையில நிறைய நல்லதும் செஞ்சிருக்கேன். கெட்டதும் செஞ்சிருக்கேன். ஆனா நான் செத்தாலும் அழிக்கமுடியாத பாவம் என் நெத்தியில எழுதியிருக்கு.” என்று அமேரிக்க படைகளுக்கு தாலிபான்களை காட்டிக் கொடுத்தவன் என்று கமல் மற்றும் அவரது ரா கூட்டாளியின் தவறினால் பொய்யாக குற்றம்சாட்டபட்டு தூக்கிலடப்படும்) தவுபீக் என்னும் தீவிரவாதியின் மரணத்திற்காக வருந்துகிறார். ஒரு முஸ்லிமை ரா உளவாளியாக்கினால் அவன் கடமையை மறந்து ஒரு தீவிரவாதிக்காக அனுதாபப் படுவான் என இங்கும் ஒர் கருத்துருவாக்கம்..

இதற்கு மேல் எழுதுவதற்கு எனக்கே அலுப்பாக இருக்கிறது. படம் முழுக்க பாசிச விஷக் கருத்துகள் மிகவும் கவனமாக மறைமுகமாக விதைக்கபட்டிருக்கின்றது.. மொத்தத்தில் விஸ்வரூபம் ஒரு பார்ப்பனிய பாசிச மலம்!

http://m.facebook.com/photo.php?fbid=10200311647372226&refid=52&_ft_=qid.5839283837983940140%3Amf_story_key.-9030655700719840830&refsrc=http%3A%2F%2Fwww.facebook.com%2Fstory.php&_rdr

-----------------------------------------------------

Thaagam Senguttuvan

அன்புள்ள கமல் அவர்களுக்கு வணக்கம் ....1992-93 ஆம் ஆண்டுகளில் இயங்கிய கமல் நற்பணி இயக்க அனைதுக்கல்லூரி மாணவர் அமைப்பின் பச்சையப்பன் கல்லூரி பொறுப்பாளர் செங்குட்டுவன் எழுதுவது !

இன்றைக்கு யாதவர் சங்கத்தில் உள்ள நண்பர் குணசீலன் அன்று உங்கள் நற்பணி இயக்கத்தின் தலைவர் . நாங்கள் படித்த சென்னை முத்தையா செட்டியார் மேல்நிலைப்பள்ளியில் நீங்களும் படித்தீர்கள் என்று அன்றைக்கு பெருமைகொள்வோம் நாங்கள் .1992 ஆம் ஆண்டு தாகம் அனைதுக்கல்லூரி மாணவர் இதழாய் வெளியிடும் விழாவுக்கு நீங்கள் வருவதாக இருந்து ,குணா படத்தின் படப்பிடிப்புக் காரணமாக நீங்கள் வாழ்த்து செய்தி மட்டும் அனுப்புனீர்கள். தாகத்தின் முதல் ஆண்டு விழாவில் கலந்துக்கொள்வேன் என்று சொன்னீர்கள் ."சுட்டி" "தேன்மழை " போன்ற மாணவர் இதழ்கள் போல மாணவர் பருவத்தோடு நின்றுவிடாமல் "தாகம் " தொடர்ந்து வெளிவரவேண்டும் என்று வாழ்த்தினீர்கள். இந்த 22 ஆண்டுகளில் தாகத்தில் உங்களை விமர்சித்து எத்தனையோ க்கட்டுரைகள் வெளிவந்து விட்டது .இன்றைக்கு விஸ்வரூபத்திற்காக நீங்கள் தமிழ் நாட்டை விட்டே செல்கிறேன் என்று சொன்னபோது எனக்கும் கண் கலங்கியது ...ஆனால் கமல், உங்களை 5 வயது முதல் பாராட்டி சீராட்டி இன்று உங்களை கலைஞானியாக ,கோடீஸ்வரனாக உயர்த்திய தமிழ் நாட்டை எவ்வளவு எளிதாக உங்களால் தூக்கி வீச முடிகிறது . காஷ்மீர் முதல் கேரளா வரை என்று தமிழ் நாட்டை நீங்கள் தவிர்தபோது இஸ்லாமிய சகோதரனை விட எனக்கு உங்கள் மீது கடும் கோபம் வந்தது ! 50 ஆண்டுகாலம் உங்களை சுமந்த நாட்டிற்கு ,உங்கள் நாத்துடுக்கால் சிதம்பரம் நிகழ்ச்சியில் பேசிய காரணத்தால், உங்களை இன்றைய அரசு பந்தாடும் நிலையில்,தமிழர்களும் தமிழ் நாடும் என்ன பாவம் செய்தது உங்களை வளர்த்ததை த்தவிர ? ராசி அழகப்பன்,குணசீலன்,உங்கள் ராஜ்கமல் நிறுவனத்தின் நிழலாக இருந்த டி.என் .யெஸ் (குணா படத்தை தயாரித்து அழிந்து போனவர் ) அய்யா அவர்களின் மகன் சக்தி .புதுக்கல்லூரி இப்ராஹிம் இப்படி எத்தனையோ தளபதிகள் அன்று உங்களுடன் இருந்தனர் .இன்று அவர்கள் எல்லாம் எங்கே ?

இந்தியாவில் ஏதேனும் ஒரு மதசார்பற்ற மாநிலத்தில் தங்குவேன் என்று சொல்கிறீர்களே ...கமல் உண்ட வீட்டிற்க்கே ரெண்டகம் செய்கிறீர்களே ,இந்தியாவில் தமிழ்நாட்டைத் தவிர ஒரு மதசார்பற்ற நாட்டை உங்களால் சொல்லமுடியுமா ? அக்ரகாரத்தில் பிறந்த உங்களை இன்று இந்த மதச்சார்பற்ற நாடுதானே உச்சியில் நிற்க்கவைத்துள்ளது ?ஏதாவது ஒரே ஒரு அக்ரகாரத்து அம்பி உங்களுக்காக இன்று சாலை மறியல் செய்திருப்பானா ? உங்கள் அக்ரகாரத்து எழுத்தாளர்கள் சோ ,மதன் ,s .v .சேகர் ,உங்கள் குரு பாலச்சந்தர் உங்களை சந்தித்திருப்பார்களா ? இன்று உங்கள் வீட்டின் முன் அழுதவன் எல்லாம் இளிச்சவாய தமிழன் தானே ?எனக்கு அரசியல் கிடையாது ..மதம் கிடையாது என்று சிறு பிள்ளை தனமாக புலம்புகிறீர்களே கமல் ,ஹேராம் ,உன்னைப் போல் ஒருவன் ,விஸ்வரூபம் ,அன்பேசிவம் போன்றப் படங்கள் அரசியல் பேசாமல் எதைப்பேசின? மதம் பேசாமல் எதை பேசின ? 1983 இல் ஈழப் படுகொலைக்காக உங்கள் தலைமையில் பல்லாயிரம் ரசிகர்கள் ஒன்று திரண்டு பேரணி நடத்தினார்களே இன்று உங்களுக்கு அந்த உணர்வே இல்லையா ?

ஏன் இலங்கை தீவிரவாதம் பற்றி உங்களால் படம் எடுக்க இயலாதா ?அதற்கு ஒபாமா ஒப்புதல் தரமாட்டாரா ? காரணம் நீங்கள் இந்தியனாகி பல காலம் ஆகிவிட்டது கமல் ! தமிழனாக ..பிறகு இந்தியனாக ,,,இந்தியாவில் வாழ முடியாதப் பட்சத்தில் அமெரிக்கனாக ...அடடா...என்ன ஒரு மனித நேயம் உள்ள மனிதர் ..நடிகர் ! இன்றைக்கு இங்கு நடக்கும் கூத்து ,உலகில் எங்காவது நடக்குமா கமல்? உங்களை ஆளாக்கிய மண்ணிற்காக நீங்கள் ஒரே ஒரு படம் எடுத்ததில்லை ..ஆனால் ,உங்களை அமெரிக்காவின் விசுவாசியாக காட்டிக்கொள்ள, கேவலம் ஆஸ்கார் விருதுக்காக பலநூறு ஆண்டுகளாக நம்முடன் பிணைந்திருக்கும் இஸ்லாமிய சகோதரர்களை தொடர்ந்துக் கொச்சைப் படுத்திக்கொண்டே இருப்பீர்கள் ? உங்களுக்கு தமிழக மக்கள் ஆதரவு தெரிவிக்கவில்லை என்ற உடன் இங்கிருந்து வெளியேறுவேன் என்று அழுகிறீர்கள் ! வெட்கம் வெட்கம் !

நீங்கள் தமிழர்கள் படும் அவலங்களை வைத்து ஒரு படம் எடுத்து அதற்க்கு தடை என்றால் தமிழகம் உங்களை விட்டுக்கொடுத்திருக்குமா ? நீங்கள் சிறந்த நடிகர்தான் ..ஆனால் தமிழகத்திற்கு நன்றி உள்ள மனிதனா ? என்று உங்களை தொட்டுக்கேட்டுப் பாருங்கள். இந்த தமிழ்நாடும் தமிழனும் உங்களுக்குக் கோடி கோடியாக அள்ளித்தரவேண்டும், ஆனால் நீங்கள் இந்த மக்களைப் பற்றி படம் எடுக்கவில்லை என்றால் கூடப் பரவாயில்லை எதாவது ஒரே ஒரு தமிழர் பிரச்சனைக்காக நீங்கள் குரல் கொடுத்தது உண்டா கமல் ? தயவுசெய்து நீங்கள் போகும் ஊரில் உள்ள மக்களுக்காகவாவது குரல் கொடுங்கள் ...அவர்களையும் ஏமாற்றி விடாதீர்கள் ? எங்களைப் போல் அவர்கள் ஏமாற மாட்டார்கள் !போகும் போது இன்று தமிழக ரசிகர்கள் உங்கள் கடன் அடைக்க அனுப்பும் பணத்தையும் மறக்காமல் எடுத்துச் செல்லுங்கள் !அடுத்தப் படம் எடுக்க உதவும் ! இந்தக் கடிதம் உங்களுக்கு மட்டும் அல்ல. எங்களை இன்றைக்கு சுரண்டிக்கொண்டிருக்கும் அத்தனை நடிகர்களுக்கும்தான். தயவு செய்து அவர்களையும் உங்களுடன் மதச்சார்பற்ற நாடான குஜராத்திற்கு அழைத்துச் சென்று விடுங்கள் ! நாங்கள் நிம்மதியாக வாழ்கிறோம் !!

என்றும் அன்புடன்
தாகம் செங்குட்டுவன்
மற்றும் பழைய நற்பணி மன்ற தோழர்கள் .