Followers

Friday, July 18, 2014

ஹுசைனி பிராமணர்களும் கர்பலா யுத்தமும்!



ஹுசைனி பிராமணர்களும் கர்பலா யுத்தமும்!

திரு அரிசோனன்!

//“ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி!” என்று ஒரு பழமொழி உண்டு. இதைப் படித்ததும் அந்தப் பழமொழிதான் என் நினைவுக்கு வருகிறது. தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் முஸ்லிம் ஆனாலும், brahmin baitingதான் எந்தக் கருத்தைச் சொல்வதற்கும் வசதியாக இருக்கும் போலிருக்கிறது. ஆக, ஈரானில் (persia, பாரசீகம்) உள்ள ஷியா இஸ்லாமியர்களை உருவாக்கியவர்கள் தமிழ்நாட்டுப் பிராமணர்கள் என்ற வரலாற்று உண்மையைப் பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி!//

பார்பனர்களிடம் எனக்கு தனிப்பட்ட விரோதம் ஏதும் கிடையாது. இன்றும் பல நண்பர்களை அந்த சமூகத்தில் பெற்றுள்ளேன். நான் ஆதாரம் இல்லாமல் எதனையும் பதிவதில்லை. மறைக்கப்பட்ட வரலாற்றை மீள் பதிவாக உங்களுக்கு தருகிறேன். படித்துப் பாருங்கள்.

ஒற்றுமையாக இருந்த இஸ்லாமிய சாம்ராஜ்யத்தில் குழப்பத்தை உண்டு பண்ணிய மறைக்கப்பட்ட ஒரு இனத்தைப் பற்றி இந்த பதிவில் பார்ப்போம். முதலில் யூதர்களுக்கும் பாரசீக நாட்டில்(தற்போதய ஈரான்) இருந்த நெருப்பு வணங்கிகளுக்கும் பிராமணர்களுக்கும் மூலம் ஒன்றே ஆனதால் இவர்களுக்குள் எழுதப்படாத உடன் பாடுகள் பல இருக்கும். தாங்களே உயர்ந்த குலம். தாங்களே இறைவனுக்கு நெருக்கமானவர்கள் என்ற எண்ணம் இவர்கள் அனைவரின் உள்ளத்திலும் எப்போதும் ஓடிக் கொண்டே இருக்கும். இந்த நிலையில்தான் ஜனாதிபதி உமருடைய ஆட்சியில் பாரசிகம் வெற்றிக் கொள்ளப்பட்டது. காலா காலமாக ஆட்சி பதவியில் இருந்த பாரசீகர்கள் தாங்கள் தோல்வியுற்றதை கிரகிக்க முடியாமல் அதற்காக பழி வாங்கும் நேரத்தை எதிர்பார்த்து இருந்தனர்.

எந்த நாட்டுக்குச் சென்றாலும் அந்த நாட்டின் மன்னர்கள் முக்கியஸ்தர்களுக்கு தங்களின் பெண்களை திருமணம் பண்ணி கொடுத்து அதன் மூலம் உள் நுழைவது இவர்களின் தந்திரம். அதன்படி முகமது நபியின் பேரனான ஹுசைன் அவர்களுக்கு தங்களின் பெண்ணை மணமுடித்துக் கொடுத்தனர். ஷஹர்பானு என்ற பாரசீக பெண் இமாம் ஹுசைனுக்கு மணமகளாகிறார். இவர்களுக்கு பிறந்த குழந்தைதான் ஜெய்னுல்லாபுதீன். சாசனியர்களான இவர்களின் வாரிசு அலி அவர்களின் குடும்பத்தில் தோன்றியதால் அலியையும் அவரது குடும்பத்தவரையும் தெய்வீக அம்சம் பொருந்தியவர்களாக வழக்கம் போல் கதை கட்ட ஆரம்பித்தனர். ஷஹர்பானு நம் நாட்டை ஆண்ட சந்திர குப்தர் மனைவியின் தங்கையாகவும் அறியப்படுகிறார். இந்த ஹூசைனி பிராமணர்கள் குழுவில் இருந்து ரஹீப் என்பவரும் இவரது பல மகன்களும் இந்த போரில் கொல்லப்பட்டதாக சில தகவல்கள் சொல்லுகின்றன..

அப்துல்லா பின் ஸபா என்ற யூதன் முஸ்லிமாக மாறுவதாக நடித்தான். முஸ்லிம்களுக்குள் குழப்பத்தை உண்டு பண்ணி ஜனாதிபதி உஸ்மானுக்கு எதிராக மக்களை திரட்டினான். அலியை முன்னிலைப்படுத்தி அவருக்கு தெய்வீக அந்தஸ்தை கொடுத்து பிரசாரம் செய்தான். ஆனால் இதை அலி அவர்களே கடுமையாக மறுத்திறுக்கிறார்கள். தன் மீது சொல்லப்படும் இதுபோன்ற கட்டுக்கதைகளை நம்ப வேண்டாம் என்று மக்களை எச்சரித்தார். ஆனால் அப்துல்லா பின் ஸபாவின் கருத்தை மக்கள் நம்ப ஆரம்பித்தனர். முகமது நபியின் பெயரால் பல பொய்யான ஹதீதுகளை தயாரித்து புழக்கத்தில் விட்டதில் இவனுக்கும் இவனை பின்பற்றிய கள்ள முஸ்லிம்கள்(யூதர்களுக்கும்) மிகப் பெரிய பங்குண்டு.

ஷியாக்கள் எவ்வாறு உருவானார்கள் எவ்வாறெல்லாம் குரஆன் ஹதீஸ்களை வளைத்து பொருள் கொண்டார்கள் என்ற நீண்ட வரலாறை இந்த சுட்டியில் சென்று பார்த்துக் கொள்ளுங்கள்.

http://onlinepj.com/egathuvam/all_articales_in_egathuvam/shiyakal_kolkai_varalaru/
http://onlinepj.com/egathuvam/all_articales_in_egathuvam/

ஜனாதிபதி உஸ்மான் எகிப்திலிருந்து வந்த சில யூதர்களால் (முஸ்லிமாக நடித்த) கொல்லப்பட்டு பிறகு அலி ஆட்சிக்கு வருகிறார். அதன் பிறகு முஆவியாவுக்கு ஆட்சி அதிகாரம் செல்கிறது. அதன் பிறகு அவரது மகன் யஜீதிடம் அதிகாரம் செல்கிறது. இங்குதான் யூதர்கள், நெருப்பு வணங்கிகள், நம் நாட்டு ஹுசைனி பிராமணர்கள் போன்றோர் முகமது நபியின் பேரன் ஹுசைனை தூண்டி விட்டு முஆவியாவுக்கு எதிராக படை திரட்ட ஆலோசனை வழங்குகின்றனர். ஒரு ஆட்சித் தலைவருக்கு எதிராக கலகம் செய்தால் எந்த ஆட்சித் தலைவரும் எதிரிகளை ஒடுக்கவே முயற்ச்சிப்பர். அந்த வகையில் இவ்வாறு ஆட்சிக்கு எதிராக கலகம் செய்ய வேண்டாம் என்று பல நபித் தோழர்களும் தடுக்கின்றனர். ஒரு சில எகிப்தியர்களின் பேச்சை நம்பி கர்பலாவுக்கு வருகிறார் ஹூசைன். ஆனால் போர் துவங்கும் நேரம் எகிப்தியர்களான காரிஜியாக்கள்(முஸ்லிமாக நடித்தவர்கள்) ஹூசைனுக்கு உதவாமல் நயவஞ்சகமாக பின் தங்கி விடுகின்றனர்.

இந்த நாளில் நமது நாட்டில் சந்திரகுப்தர் என்ற அரசரின் ஆட்சி நடைபெற்றதாகவும் அவரிடம் ஹூசைன் அவர்கள் உதவி கேட்டதாகவும் சில செய்திகள் கூறுகின்றன. பஞ்சாப், பீஹார், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்ற பகுதிகளில் இன்றும் சிறு சிறு குழுக்களாக ஹூசைனி பிராமணர்கள் வாழ்ந்து வருகின்றனர். முன்பு ஈராக்கின் கூபாவுக்கு பக்கத்தில் கூட்டமாக தங்கியிருந்த இவர்கள் போரில் ஹூசைன் அவர்கள் கொல்லப்பட்ட பிறகு இந்தியாவை நோக்கி வந்தனர். பிறகு இங்கேயே தங்கி விட்டனர். இவர்கள் தற்போதும் கர்பலா தினத்தன்று இமாம் ஹூசைனுக்காக ஷியாக்களோடு சேர்ந்து துக்கம் அனுஷ்டிப்பதை பரவலாக பார்க்கலாம்.

//'I,' she said, 'told my mother about your comments regarding Husaini Brahamans
and how I introduced myself as one. To that she said, did you tell him that we don't
perform the rituals the Brahmans are obliged to perform. That we don't go to the temples?'

'Should I presume from this,' I asked, 'that you have turned Muslim.'

'No, we are not Muslims,' she exclaimed.

'Then what are you?' I inquired.

'We are Husaini Brahmans,' she said with a certain sense of pride and added,
'Now, I will tell you about a sign each and every Husaini Brahman carries with him/her.

On his/her throat s/he bears a line of cutting, which is indicative of the fact that s/he is the descendant of those Brahmans whose throats were cut in the battle of Karbala.'

Then she told me about the ritual carried out on the birth of every child in her family.

She said, 'Among Brahmans, after child birth, the ritual of Moondan is performed.
In our family this ritual is performed in the name of Imam Husain.'//

இங்கு ஒரு ஹூசைனி பிராமணரின் பேட்டியைத்தான் பார்க்கிறோம். கோவிலுக்கு இவர்கள் செல்ல மாட்டார்களாம். இஸ்லாத்திலும் இவர்கள் இல்லையாம். ஆனால் இஸ்லாத்தை இரு கூறாக பிரித்து இன்று சண்டையிட்டுக் கொண்டிருக்கும் நிகழ்வுக்கு காரணமாக மாத்திரம் இருப்பார்களாம். உண்மையிலேயே இவர்களின் ராஜதந்திரம் பாராட்டப்பட வேண்டியதே. ஆனால் இந்த திறமையை ஆக்க சக்திக்கு பயனபடுத்தாமல் அழிவு வேலைகளுக்கும் சாம்ராஜ்ஜியங்களை கீழிறக்கும் வேலைகளுக்கும் பயன் படுத்துவதைத்தான் நாம் எதிர்க்கிறோம். பகவத் கீதையில் இமாம் ஹூசைன் கொல்லப்படுவதை கிருஷ்ணர் சொல்லியிருப்பதாகவும் சில பிராமணர்கள் நம்புகின்றனர். கலங்கி புராணா, மற்றும் அதர்வண வேதங்களிலும் இமாம் ஹூசைன் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளதாக சில பிராமணர்கள் நம்பிக் கொண்டுள்ளனர். இந்தி நடிகர்கள் சுனில்தத், சஞ்சய் தத் போன்றோர் ஹூசைனி பிராமணர்கள் பிரிவிலேயே வரக் கூடியவர்கள். ஷியாக்களுக்கு நெருக்கமானவர்கள்.

இதே போல் தமிழகத்திலும் இந்தியாவிலும் 1000 ஆண்டுகளுக்கு முன்னால் மொகலாயர்களின் ஆட்சியில் பலர் முஸ்லிம்களாக மாறினர். (மாறுவதாக நடித்துள்ளனர்) இவர்களில் பலர் அரபி மொழிகளில் நல்ல பாண்டித்தியம் பெற்று வர்ணாசிரமக் கோட்பாட்டை ஆதரிக்கும் முகமாக பல புத்தகங்களை எழுதினர். அது போன்ற இஸ்லாமிய புத்தகங்களை படித்தால் நமக்கு மனு ஸ்மிருதியை படிப்பது போன்ற உணர்வே ஏற்படும். அந்த அளவு சாதி வெறி ஏற்றப்பட்டுள்ளது. அவற்றை தற்போதுதான் மொழி பெயர்த்து அதன் உண்மை நிலையை நம்மால் அறிந்து கொள்ள முடிகிறது. சமீப காலம் வரை மத்ரஸாக்களில் இது போன்ற புத்தகங்கள் பாடமாகவும் வைக்கப்பட்டிருந்தது. சில புத்தகங்கள் மிகுந்த ஆபாசமாகவும் இருக்கும். தவ்ஹீத் எழுச்சி தமிழகத்தில் உண்டான பிறகு குர்ஆனுக்கு மாற்றமாக எழுதப்பட்ட அந்த புத்தகங்கள் இன்று குப்பைக் கூடைக்கு சென்று விட்டன. 'துர்ருல் முக்தார்' என்ற புத்தகம் இதற்கு சான்றாக இன்றும் இருந்து வருகிறது.

ஏதோ சில தவறான புரிதல்களால் இன்று ஷியாக்கள் என்றும் சன்னிகள் என்றும் இரு கூறாக சில நயவஞ்சகர்களால் பிரிக்கப்பட்டு விட்டோம். அதை இன்று நாம் விளங்கும் முகமாக பல தகவல்களும் நமக்கு கிடைக்கின்றது. ஆனால் இன்றும் அந்த கோபத்தை மனதில் வைத்துக் கொண்டு முஹர்ரம் 10 அன்று என்னுடைய உடலை கீரிக் கொள்வேன் என்று அடம் பிடிப்பது சரிதானா என்று ஷியாக்கள் சிந்திக்க வேண்டும். இது நபி அவர்களின் போதனைக்கும் குர்ஆனின் கட்டளைக்கு நேர் எதிராகவும் உள்ளதை ஷியா சகோதரர்கள் உணர்ந்து நேர் வழியை பெற வேண்டும்..

'கண்டவர் குலை நடுங்கும் சண்டாளன் யஜித் என்போன்...

கொன்றான் இமாம் ஹூசைனை .....குடியரசு சாய்ந்ததம்மா....

குடியரசு சாய்ந்ததம்மா.....'

என்று நம்ம நாகூர் அனீஃபா அண்ணன் கணீரென்ற குரலில் பாடும்போது சின்ன வயதில் நானெல்லாம் அழுதிருக்கிறேன். யார் சண்டாளர்கள் என்பதை இறைவன் முடிவு செய்யட்டும். அது வரை நாம் வாழும் நாட்களில் அமைதியாக வாழ்ந்து ஒற்றுமை எனும் கயிரான குர்ஆனை பிடித்து ஈடேற்றம் பெற முயற்ச்சிப்போம்.

http://www.tamilbrahmins.com/general-discussions/6310-hussaini-brahmins.html
http://www.milligazette.com/Archives/2004/16-31May04-Print-Edition/1605200441.htm
http://www.imamreza.net/eng/imamreza.php?id=6530
http://onlinepj.com/egathuvam/all_articales_in_egathuvam/

3 comments:

ஆனந்த் சாகர் said...

இந்த கட்டுரை முழுக்க பொய்தான் நிரம்பியுள்ளது. முஸ்லிம்களின் பிரசாரம் பொய்யை அடிப்படையாக கொண்டது. முஸ்லிம்களின் பிரசாரத்தை யாரும் அதை நம்ப வேண்டாம். இஸ்லாமிய வரலாற்றை ஆதாரப்பூர்வமான இஸ்லாமிய நூல்களை படித்து அறிந்து கொள்ள வேண்டும். உண்மையை மறைத்து முஸ்லிம்கள் செய்யும் பொய் பிரச்சாரத்தை ஒரு பொருட்டாகவே கருத கூடாது. முஸ்லிம்களின் எந்த பிரசாரத்தையும் நம்பாதீர்கள். அவற்றை புறந்தள்ளுங்கள்.

suvanappiriyan said...

//முஸ்லிம்களின் பிரசாரத்தை யாரும் அதை நம்ப வேண்டாம். //

எந்த ஆதாரத்தையும் நம்பாதீர்கள். நம்ம ஆர்எஸ்எஸ் அனுதாபி இந்து மத வெறியர் ஆனந்த் சாகர் சொல்வதை மட்டும் நம்பி விடுங்கள். :-)

ஆனந்த் சாகர் said...

@சுவனப்பிரியன்,

//எந்த ஆதாரத்தையும் நம்பாதீர்கள். நம்ம ஆர்எஸ்எஸ் அனுதாபி இந்து மத வெறியர் ஆனந்த் சாகர் சொல்வதை மட்டும் நம்பி விடுங்கள். :-) //

ஆதாரம் என்று நீங்கள் எழுதுவது எல்லாமே பொய்யும் புரட்டும்தானே. உண்மையான ஆதாரத்தை எங்கே தருகிறீர்கள்?

ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் நான் உறுப்பினர் இல்லை. இருப்பினும் அந்த தேச பக்தி இயக்கம் பாரத நாட்டுக்கு மிக அவசியம் என்று கருதுகிறேன்.

நான் ஆன்மிகவாதி(Spiritualist). கடவுளை வெளியே தேட வேண்டாம். அது நமக்குள்தான் இருக்கிறது. நாம்தான் கடவுள் என்று கூறுகிறேன். மத சடங்குகளில், மத சட்டங்களில் எனக்கு ஒரு காலத்தில் நம்பிக்கை இருந்தது, இப்பொழுது இல்லை. என்னை மத வெறியர் என்று சொல்ல நான் என்ன உங்களை போன்று மத சட்டங்களை பின்பற்ற வேண்டும் என்று சொல்கிறேனா?