Followers

Monday, August 04, 2014

அகோரி மணிகண்டனும் ஐம்பது லட்சமும்!

பின்வரும் செய்தியை அதிகமாக ஷேர் (SHARE) செய்து உண்மையை தெளிவுபடுத்துவோம்,
இன்ஷா அல்லாஹ்.!!

‪சூனியம்‬ ஒப்பந்தம் தொடர்பாக எழுப்படும் கேள்விகளுக்கு பி.ஜே அவர்கள் அளித்துள்ள பதில்கள்:

சூனியக்காரனுக்கு விட்ட சவால் விளம்பரம் தேடுவதற்கு என்று கூறுகின்றார்களே ?
http://www.onlinepj.com/unarvuweekly/kelvi_pathil/suniyam-vilambaram/

சூனியம் ஒரு காலத்தில் இருந்து இப்போது இல்லை என்று சிலர் கூறுகிறார்களே?
http://www.onlinepj.com/unarvuweekly/kelvi_pathil/suniyam-ippoluthu-illai/

சூனியம் என்ற பெயரில் நீங்கள் பந்தயம் கட்டியுள்ளது சரியா ?
http://www.onlinepj.com/unarvuweekly/kelvi_pathil/suniyam-panthayam/

#‎இறைவன்‬ நாடினால் சூனியம் செய்வான் என்று கூறுவது குற்றமா ?
http://www.onlinepj.com/unarvuweekly/kelvi_pathil/iraivan-nadinal-suniyam/

50 லட்சத்தை உங்கள் சொந்த பணத்தில் கொடுக்க வேண்டியது தானே ஏன் ‪#‎தவ்ஹீத்‬ ஜமாஅத் தர வேண்டும் ?
http://www.onlinepj.com/unarvuweekly/kelvi_pathil/50-latcham-ungal-panam/



அகோரி மணிகண்டன் தனது ஆவி,காளி,மாரி,சூரி,அனைவரையும் அழைத்து பீஜேவை முடக்க பூஜையை ஆரம்பித்துவிட்டார் ???

"அல்லாஹ்வையன்றி நீங்கள் கற்பனை செய்தோரைப் பிரார்த்தித்துப் (அழைத்துப்) பாருங்கள்! உங்களை விட்டும் கஷ்டத்தை நீக்கவோ, மாற்றவோ அவர்களுக்கு இயலாது" என்று கூறுவீராக (al quran17:56)

--------------------------------------------------------------

50 லட்சத்தை உங்கள் சொந்த பணத்தில் கொடுக்க வேண்டியது தானே ஏன் தவ்ஹீத் ஜமாஅத் தர வேண்டும் ?

கேள்வி

சூனியக்காரனுடன் நீங்கள் செய்து கொண்ட ஒப்பந்தத்தில் சூனியக்காரன் சூனியம் செய்து உங்களைத் தற்கொலை செய்ய வைத்தால் தவ்ஹீத் ஜமாஅத் 50 லட்சம் ரூபாய் தரும் என்று கூறியுள்ளீர்கள். உங்கள் சொந்தப் பணத்தில் கொடுக்க வேண்டியது தானே என்று சிலர் கேட்கிறார்கள்.

முஹம்மது சரீப், கானத்தூர்

பதில்

சூனியக்காரனை அல்லாஹ்வாக்கி ஈமானை இழந்தவர்கள் இந்தக் கேள்வியின் மூலம் அதை மேலும் உறுதிப்படுத்துகிறார்கள். சூனியக்காரன் தனது சூனியத்தில் வென்று 50 லட்சம் வாங்கப் போகிறான் எனபதில் இவர்களுக்கு அதிக நம்பிக்கை உள்ளது.

நடக்கவே நடக்காது என்ற விஷயத்தில் விடப்படும் அறைகூவலை எப்படி புரிந்து கொள்வது என்ற அறிவு இவர்களுக்கு இல்லை.

அல்லாஹ்வுக்குப் பிள்ளை இல்லை என்பது இஸ்லாத்தின் நம்பிக்கை. அல்லாஹ்வுக்குப் பிள்ளை இருக்கிறது என்று கூறுவோருக்கு நபிகள் நாயகம் ஸல் அவர்கள் மூலம் அல்லாஹ் பின்வருமாறு பதிலளிக்கச் சொல்கிறான்.

அளவற்ற அருளாளனுக்குச் சந்ததி இருந்தால் அவரை நானே முதலில் வணங்குபவன்'' என (முஹம்மதே!) கூறுவீராக!

திருக்குர்ஆன் 43:81

அல்லாஹ்வுக்குப் பிள்ளை இருந்தால் நான் முதலில் வணங்குவேன் என்று கூறினால் அல்லாஹ்வுக்குப் பிள்ளை இருக்கக்கூடும் என்றும் அந்தப் பிள்ளையை நபிகள் நாயகம் வணங்குவார்கள் என்றும் மூடன் தான் புரிந்து கொள்வான்.

அல்லாஹ்வுக்குப் பிள்ளை இல்லை என்பதை அதிக அழுத்தத்துடன் சொல்வதற்காகவே இவ்வாறு சொல்லப்பட்டுள்ளது என்று அறிவுடையோரும் அல்லாஹ்வை நம்பியவர்களும் புரிந்து கொள்வார்கள்.

சூனியக்காரன் வெல்லப்போவதும் இல்லை. நாம் 50 லட்சம் கொடுக்கப் போவதும் இல்லை என்பதை அழுத்தமாகச் சொல்லவே இதைக் கூறுகிறோம். இதை ஒப்பந்த வீடியோவில் கூட தெளிவு படுத்திவிட்டோம்.

என் பணத்தையே கொடுப்பதாகச் சொன்னாலும் சூனியக்காரன் நம்பிக்கைப்படி நான் செத்துவிட்ட பின் என்னிடம் அவன் வாங்க முடியாது. அதற்காகத் தான் தவ்ஹீத் ஜமாஅத் தரும் என்று சொல்லப்பட்டது.

என் பணத்தையும் நான் கொடுக்கும் நிலை ஏற்படாது. ஜமாஅத்தின் பணத்தையும் கொடுக்கும் நிலை ஏற்படாது. சூனியக்காரன் ஒருக்காலும் வெல்ல மாட்டான் என்பதில் எங்களுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளது.

"உண்மை உங்களிடம் வந்திருக்கும் போது அதைச் சூனியம் என்று கூறுகிறீர்களா? சூனியக்காரர்கள் வெற்றி பெற மாட்டார்கள்'' என்று மூஸா கூறினார்.

திருக்குர்ஆன் 10:77

"உமது வலது கையில் உள்ளதைப் போடுவீராக! அவர்கள் செய்தவற்றை அது விழுங்கி விடும். அவர்கள் செய்திருப்பது சூனியக்காரனின் சூழ்ச்சி. (போட்டிக்கு) வரும் போது சூனியக்காரன் வெற்றி பெற மாட்டான்'' (என்றும் கூறினோம்.)

திருக்குர்ஆன் 20:69

அல்லாஹ்வின் கூற்றில் அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளவர்கள் சூனியக்காரன் வெல்ல மாட்டான் என்றுதான் நம்புவார்கள். அதை இன்னும் அழுத்தமாகச் சொல்வதற்குத் தான் ஐம்பது லட்சம் தருவதாகச் சொல்லப்பட்டது என்பதைப் புரிந்து கொள்வார்கள்.

அல்லாஹ்வின் இந்தக் கூற்றில் நம்பிக்கை இல்லாமல் சூனியக்காரன் வெல்வான் என்று நம்பி காஃபிராகிப் போனவர்கள் தான் ஐம்பது லட்சம் யாருடைய பணம் என்று கேட்பார்கள். சூனியக்காரனை அல்லாஹ்வாக்கியே தீருவது என்பதில் இவர்கள் உறுதியாக இருப்பது இந்தக் கேள்வியில் இருந்து இன்னும் உறுதியாகிறது.

9 comments:

Anonymous said...

indha jainul aabdeen oru ayokkiyan, islamiyarkalai pilavupadutha thudikkum oru naragavaadhi

Anonymous said...

அல்லாவே கப்பனை என்ற பொழுது யாரை பிராத்தித்தால் என்ன ? எங்கே பிராத்தனை செய்து இஸ்ரேலை இந்தப் போரில் தோர்கடியுங்களேன் பார்ப்போம். கினானா புதையலை எங்கே வைத்திருக்கிறான் என்பதையே சித்தரவதை செய்துதான் தெரிந்து கொள்ள வேண்டியதாயிற்று. கண்டதுக்கெல்லாம் வகி இறக்கியவர் புதையல் எங்கே இருக்கிறது என்று சொல்லவில்லை என்பதிலிருந்தே அல்லா முகமதின் கப்பணை பாத்திரம் என்பது தெரியவில்லையா ?

Anonymous said...

//சூனியக்காரனை அல்லாஹ்வாக்கி ஈமானை இழந்தவர்கள் இந்தக் கேள்வியின் மூலம் அதை மேலும் உறுதிப்படுத்துகிறார்கள். சூனியக்காரன் தனது சூனியத்தில் வென்று 50 லட்சம் வாங்கப் போகிறான் எனபதில் இவர்களுக்கு அதிக நம்பிக்கை உள்ளது.\\

கேட்கப்பட்ட கேள்வி என்ன உங்கள் தரப்பின் பதில் என்ன ? ஏதேனும் அர்த்தம் உள்ளதா? உங்களின் பதிலில் .
பிரச்சனை இங்கு யாரை அல்லாஹ் ஆக்குவது என்பதை பற்றியது அல்ல. இஸ்லாமியர்கள் கொடுத்த ஜகாத் தொகையில் நீங்கள் பந்தயம் செய்வதற்கு உங்களுக்கு அனுமதி குடுத்தது, அல்லா தோழர் pj அவர்களுக்கு வஹி இறக்கினானா?
1)வசூலிட்த ஜகாத் பணத்தில் பந்தயம் கட்டலாம் என்பதற்கு ஆதாரம் தேவை.
2) இந்த பந்தயத்தின் மூலம் pj எதனை நிறுபிக்க விரும்புகிறார். தற்போது அதற்க்கான அவசியம் என்ன வந்தது?
3) சூனியக்காரர் வென்று விடுவார் என்று உறுதியாக நம்பிய இஸ்லாமியத்தொலர்களை யாரை எனும் உங்களால் காட்ட முடிஉமா?
4)PJ என்ற தனிமனிதரை கதாநாயகனாக்கும் nookkam மட்டுமே எங்களை போன்றோரால் உணர முடிகிறது.
Zahir.bukhari

Anonymous said...

//சூனியக்காரர்கள் வெற்றி பெற மாட்டார்கள்'' என்று மூஸா கூறினார்.\\
சூனியம் என்ற ஒன்றே இல்லை என்பதுதான் உங்களின் நிலைப்பாடு என்றால், இல்லாத சூனியட்தை செய்பவர் ஒருவர் வெற்றிபெரமட்டார் என்று மூஸா (அலை) சொன்ன சொல்லில் அர்த்தம் இல்லாமல் போகுமே. மேற்குறிப்பிட்ட வாக்கியமானது சூனியம் அந்த காலத்தில் இருந்தது இந்தகாலத்தில் அந்த கேவலமான கலை அழிந்துவிட்டது என்று சொல்வோருக்குத்தானே ஆதாரமாக உள்ளது. உங்களின் ஆதாரம் உங்களுக்கே எதிராக இருப்பதை உணராமல் இருப்பதும் சரியோ. இதற்க்கு வேறு ஏதேனும் சப்பை கட்டு கட்டுவீர்களா?
zahir.bukhari

Anonymous said...

//சூனியக்காரன் வெல்லப்போவதும் இல்லை. நாம் 50 லட்சம் கொடுக்கப் போவதும் இல்லை என்பதை அழுத்தமாகச் சொல்லவே இதைக் கூறுகிறோம். இதை ஒப்பந்த வீடியோவில் கூட தெளிவு படுத்திவிட்டோம்.\\
சூனியக்காரன் வெல்லப்போவதில்லை என்பதில் எங்களுக்கும் ஆணித்தரமான நம்பிக்கை உள்ளது தோழரே, விஷயம் அவன் வெல்வான இல்லையா என்பதை பற்றியதே இல்லை. சகோதரர் PJ ஏன் எதிராளி வெள்ளப்போகாத ஒரு போட்டியில் கூட தன்னுடைய பணத்தை கொடுக்க கொடுக்க விரும்பவில்லை.

//அல்லாஹ்வின் இந்தக் கூற்றில் நம்பிக்கை இல்லாமல் சூனியக்காரன் வெல்வான் என்று நம்பி காஃபிராகிப் போனவர்கள் தான் ஐம்பது லட்சம் யாருடைய பணம் என்று கேட்பார்கள். சூனியக்காரனை அல்லாஹ்வாக்கியே தீருவது என்பதில் இவர்கள் உறுதியாக இருப்பது இந்தக் கேள்வியில் இருந்து இன்னும் உறுதியாகிறது.\\
நியாயமான கேள்விக்கு பதில் சொல்ல வக்கில்லை என்றால் உடனே கேள்விக்கேட்டவனை காபிர் (இறை நிராகரிப்பாளன்) ஆக்கி விடுவது. ஒரு முஸ்லிமை காபிர் (இறை நிராகரிப்பாளன்) என்று சொல்வதற்கு உங்களுக்கு யார் துணிவை கொடுத்தது. இஸ்லாமிய அறினர் என்ற பெயரில் இதுபோன்ற காவளித்தனமான செயல்கள் நிச்சயம் நம் சமுதாயத்தை குறைத்து மதிப்பிடவே வழிவகுக்கும்.
zahir.bukhari

k.rahman said...

ZAHIR BUHARI - unga kelvi serupaala adicha maadhiri iruku. indha tntj adimaigalukku adhu puriyaathu.

ஆனந்த் சாகர் said...

ஹாருத், மாருத் என்ற வானவர்களை(மலக்குகள்) பாபிலோனுக்கு அனுப்பி அங்குள்ள மக்களுக்கு சூனியத்தை கற்றுக்கொடுக்கும்படி அவர்களுக்கு தான் கட்டளை இட்டதாக அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறானே. அல்லாஹ்வே சூனியத்தை கற்றுக்கொடுக்கும்படி சொல்லும்போது சூனியம் இல்லை என்று இஸ்லாம் கூறுவதாக பி.ஜே எப்படி கூறுகிறார்?

ஆனந்த் சாகர் said...

@ சுவனப்பிரியன்,

குரான் வசனம் 2 : 102 சூனியம் உள்ளது என்று கூறுகிறது. இந்த வசனத்தின் தமிழ் மொழிபெயர்ப்பை கீழே பார்க்கவும் :

டாக்டர் முஹம்மது ஜான் மொழிபெயர்ப்பு

குரான் 2:102.

"அவர்கள் ஸுலைமானின் ஆட்சிக்கு எதிராக ஷைத்தான்கள் ஓதியவற்றையே பின்பற்றினார்கள்; ஆனால் ஸுலைமான் ஒருபோதும் நிராகரித்தவர் அல்லர்; ஷைத்தான்கள் தாம் நிராகரிப்பவர்கள்; அவர்கள்தாம் மனிதர்களுக்குச் சூனியத்தைக் கற்றுக்கொடுத்தார்கள்; இன்னும், பாபில் (பாபிலோன் என்னும் ஊரில்) ஹாரூத், மாரூத் என்ற இரண்டு மலக்குகளுக்கு இறக்கப்பட்டதையும் (தவறான வழியில் பிரயோகிக்கக் கற்றுக்கொடுத்தார்கள்). ஆனால் அவர்கள் (மலக்குகள்) இருவரும் “நிச்சயமாக நாங்கள் சோதனையாக இருக்கிறோம் (இதைக் கற்று) நீங்கள் நிராகரிக்கும் காஃபிர்கள் ஆகிவிடாதீர்கள்” என்று சொல்லி எச்சரிக்காத வரையில், எவருக்கும் இ(ந்த சூனியத்)தைக் கற்றுக் கொடுக்கவில்லை; அப்படியிருந்தும் கணவன் - மனைவியிடையே பிரிவை உண்டாக்கும் செயலை அவர்களிடமிருந்து கற்றுக்கொண்டார்கள். எனினும் அல்லாஹ்வின் கட்டளையின்றி அவர்கள் எவருக்கும் எத்தகைய தீங்கும் இதன் மூலம் இழைக்க முடியாது; தங்களுக்குத் தீங்கிழைப்பதையும், எந்த வித நன்மையும் தராததையுமே - கற்றுக் கொண்டார்கள். (சூனியத்தை) விலை கொடுத்து வாங்கிக் கொண்டவர்களுக்கு, மறுமையில் யாதொரு பாக்கியமும் இல்லை என்பதை அவர்கள் நன்கறிந்துள்ளார்கள். அவர்கள் தங்கள் ஆத்மாக்களை விற்றுப்பெற்றுக்கொண்டது கெட்டதாகும். இதை அவர்கள் அறிந்து கொள்ள வேண்டாமா?"

இப்பொழுது சொல்லுங்கள், சூனியம் இல்லை என்று இஸ்லாம் கூறுவதாக பி.ஜே எப்படி கூறுகிறார்?

உணர்வு வார இதழ் said...

ஆமாம் இந்த பிஜே ஒரு அயோக்கியன்
பிணங்களை வைத்து பிழப்பு நடத்தும் தர்காவாதிகளுக்கு
பிஜே ஒரு அயோக்கியன்

இஸ்லாத்தில் இல்லாத
சூனியத்தை மக்களை நம்ப வைத்து பெண்களை கற்பழிக்கும் குற்றங்கள் வரை செய்யக்கூடியவர்களை தோலுரித்து காட்டும் பிஜே ஒரு அயோக்கியன்

நமது உயிரினும் மேலான அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கொண்டுவந்த பகுத்தறிவான தூய இஸ்லாம் மார்க்கத்தை
போலி ஆன்மீக வாதிகள் ஆபத்தான வியாபரமாக தங்களுக்கு ஏற்றவாறு அமத்து கொண்டார்களே அவர்களை ஒழிக்க நினைக்கும் பிஜே ஒரு அயோக்கியன்
அயோக்கியனுக்கு யோக்கியன் அயோக்கியனாகத்தான் தெறிவான்