Followers

Friday, September 05, 2014

சூன்யம் சம்பந்தமாக ஒரு இந்து நண்பரின் மனக் குமுறல்!



'தலச்சன் பிள்ளை மண்டை ஓடு, மனித மூத்திரம், மனித வியர்வை, எலுமிச்சைபழம், தேங்காய் என்று எல்லாம் இருந்தும் சூன்யம் பலிக்கவில்லையே! நாளும் நெருங்கிக் கொண்டு இருக்கிறதே! நம்ம சக்தி அவ்வளவுதானா?"

--------------------------------------------------------------------



இந்து முஸ்லிம் கிறித்தவர்கள் நாத்திகர்கள் என்று அனைத்து தரப்பு மக்களையும் பாதிக்கக் கூடிய ஒரு விஷயம் உண்டென்றால் அது சூன்யம்தான். இதன் மூலம் ஒரு குடும்பத்தையே சின்னா பின்னமாக்கி விடலாம். மாமியார் மருமகளுக்கும், மருமகள் மாமியாருக்கும், நாத்தனார் அண்ணன் மனைவிக்கும் செய்வினை செய்துள்ளதாக கதை கட்டி விடுவர் பலர். இந்த செய்வினையை எடுக்கிறேன் பேர்வழி என்று முழு சொத்தையும் அழித்த குடும்பங்கள் எத்தனையோ! சூன்யம் ஒருவன் தனக்கு செய்திருப்பதாக ஒருவன் நம்பி விட்டால் அது ஒன்றே போதும் அவனது வாழ்வை சீர்குலைக்க.

இந்த கொடிய நோயை எப்படியாவது தமிழகத்தை விட்டு விரட்டி விடலாம் என்று தனது உயிரையே பணயம் வைத்து பிஜே சவாலை ஏற்றுக் கொண்டுள்ளார். அதற்கு உதவி செய்யா விட்டாலும் உபத்திரவம் செய்யாமலாவது இருக்க வேண்டும். சம்சுதீன் காசிமியிலிருந்து நேற்று புதிதாக முளைத்த அலீம் புகாரி வரை எத்தனை எதிர்ப்புகள்? மதக்கலவரம் உண்டாகி விடும், முட்டாள், அயோக்கியன் என்று வாயில் வந்ததை எல்லாம் அடித்து விட்டு பிஜே க்கு நன்மைகளை வாரி வழங்கிக் கொண்டிருப்பதை சில நாட்களாக பார்க்கிறோம். பிஜே என்ற தனிப்பட்ட மனிதரின் மேல் உள்ள காழ்ப்புணர்வை இப்படியா காட்டுவது? ஊர் பேர் தெரியாதவர்களெல்லாம் பிஜேயை எதிர்த்து சவால் விட்டால் பிரபலாகி விடுவோம் என்று எண்ணி வரிசையாக வருகின்றனர்.

சூன்யம் இருக்கிறதா? நபிகள் நாயகத்துக்கு சூன்யம் வைக்கப்பட்டதா? இறைவன் இதைப் பற்றி குர்ஆனில் என்ன சொல்கிறான் என்பதெல்லாம் தனியாக விவாதிக்கப்பட வேண்டிய விஷயங்கள். அதற்கு என்றுமே பிஜே தயாராகவே இருக்கிறார். இது ஒரு புறம் இருக்க சூன்யம் என்ற பெயரில் பலரது வாழ்வை நாசமாக்கும் இந்த கொடிய நோயை தமிழகத்திலிருந்து விரட்டி விட நம்மால் ஆன ஆதரவையும் நல்குவோம்.

இது போன்ற சூன்ய நம்பிக்கையினால் நிம்மதியைத் தொலைத்த ராகவா என்ற இந்து இளைஞர் மனம் வெதும்பி இந்த காணொளியில் எதிர்ப்பவர்களைப் பார்த்து சில கேள்விகளைக் கேட்கிறார். இஸ்லாத்தைப் பற்றியோ மற்ற உலக அறிவோ அதிகம் இல்லாத இவருக்கு இருக்கும் தெளிவு கூட 7 வருடம் மதரஸாவில் ஓதிய சம்சுதீன் காசிமிக்கும், அலீம் புகாரிக்கும் இல்லையே என்று நினைக்கும் போது நமக்கும் வருத்தம் ஏற்படுகிறது. இவர்களுக்கும் இறைவன் நேர்வழிக் காட்டுவானாக!

காணொளியைக் கேளுங்கள்.

No comments: