Followers

Sunday, January 07, 2018

போலி சாமியார்கள் பட்டியல் வெளியீடு!

போலி சாமியார்கள் பட்டியல் வெளியீடு!

அலகாபாத், ஜன.1 இந்து மதம், பக்தியின் பெயரால் பாமர மக்களை வஞ்சித்து வரு கின்ற சாமியார்களின்  மோசடிகள் தொடர்ச் சியாக வெளிச்சத்துக்கு வந்து கொண்டி ருக்கின்றன.
பாலியல் வன்முறைகள், கொலைகள் உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகளில் சாமியார்கள்ஈடுபட்டுவருவதுவெளிச் சத்துக்கு வந்த நிலையில், மோசடி சாமி யார்களின் பட்டியலை சாமியார்களுக் கான தலைமை அமைப்பு கடந்த செப்டம்பர் மாதத்தில் அகில பாரதீய அகாரா பரிஷத் வெளியிட்டது.
முதல் பட்டியல்
அகில பாரதிய அகாரா பரிஷத் கடந்த செப்டம்பர் மாதத்தில் வெளியிட்ட மோசடி சாமியார் பட்டியலில் 14 சாமியார்கள் இடம் பெற்றிருந்தனர். ஆசாராம் பாபு என்கிற அசு மல் சிறுமலானி, ராதே மா என்கிற சுக்பீந்தர் கவுர், சச்சின் தத்தா என்கிற சச்சிதானந்த் கிரி, தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவர் ராம் ரகீம் குர்மீத் சிங், ஓம் பாபா என்கிற விவே கானந்த் ஜா, நிர்மல் பாபா என்கிற நிர்மல்ஜீத் சிங், ஷிவ்மூர்த்தி  திவேதி என்கிற இச்சாதாரி பீமானந்த், சுவாமி அசிமானந்த், ஓம் நமஹ சிவாய் பாபா, நாராயண் சாய், ராம்பால், ஆச்சார்யா குஷ்முனி, பிரகஸ்பதி கிரி, மல்க்கான் சிங் ஆகிய 14 பேரையும் மோசடி சாமியார்கள் என்று அகாரா பரிஷத் அமைப்பு பட்டிய லிட்டது குறிப்பிடத்தக்கது.
இரண்டாவது பட்டியல்
அகில பாரதீய அகாரா பரிஷத் எனும சாமியார்களுக்கான தலைமை அமைப்பு மோசடி சாமியார்களின் பட்டியலை ஏற்கெ னவே வெளியிட்டதைப்போல், தற்பொழுது மோசடி சாமியார்கள்குறித்த இரண்டாவது பட்டியலையும் அவ்வ மைப்பு வெளியிட் டுள்ளது. அதன்படி, டில்லியைச் சேர்ந்தவரான வீரேந்திர தீக் ஷித் கல்நேமி, உத்தரப்பிரதேசம் பாஸ்தியைச் சேர்ந்தவரான சச்சிதானந்த் சரஸ் வதி, அலகாபாத் திரிகால் பவந்த் ஆகிய மூவ ரையும் மோசடி சாமியார்கள் என்று அறிவித் துள்ளது.
அகில பாரதீய அகாரா பரிஷத்தின் எச்சரிக்கை
சாமியார்களுக்கானதலைமைஅமைப் பாகிய அகல பாரதீய அகாரா பரிஷத் தலைவர் சுவாமி நரேந்திர கிரி கூறுகை யில், “இவர் களைப் போன்ற ஏமாற்றுப் பேர்வழிகளிடம் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். பழைமைகளுக்குதொடர்பில்லாத அவர் களின் செயல்கள் கேள்வி களுக்குரியதாகவே உள்ளன. மற்ற சாதுக்கள் மற்றும் சன்னியாசி களுக்கு அவப் பெயரை ஏற்படுத்துவதாக அவர்களின் செயல்கள் உள்ளன. நாங்கள் உத் தரப் பிரதேச மாநில அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளோம். 2019ஆம் ஆண்டு நடை பெற உள்ள கும்பமேளாவையொட்டி,தீவிரமாக கண்காணிப்பதற்காக குழு அமைக்க வேண்டும் என்றும், அக்குழுவில் அனைத்து மடங்களிலிருந்தும்  சாமியார்கள் உறுப் பினர்களாக சேர்க்கப்பட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியுள் ளோம்’’ என்றார். இந்து தர்மத்தை பாது காப்பதற்காக எட்டாம் நூற்றாண்டில் ஆதிசங்கரரால்மடங்கள் நிறு வப்பட்டு, சங்கரரின் வழிகாட்டுதலின் படி கடுமை யான துறவறம் மேற்கொண்டவர்கள் நியமிக்கப்பட்டனர். அந்த வழியில் அகாரா பரிஷத் அமைப்பு செயல்பட்டு வருகிறது. தன்னைத்தானே சாமியார்களாக, கூறிக்கொள் வோர் குறித்து விழிப்பை ஏற் படுத்த அகாரா பரிஷத் எச்சரிக்கை வெளியிட்டு வருகிறது.

தகவல் உதவி

விடுதலை

08-01-2017


1 comment:

Dr.Anburaj said...

Hindus are honest the by would never gloss over bad elements
and protect them.